புது டெல்லி,மே 07 வணக்கம் புத்த பூர்ணிமாவிற்கான நல்வாழ்த்துக்கள். உங்கள் அனைவருக்கும், உலகெங்கிலும் புத்தபிரானைப் பின்பற்றுபவர்களுக்கும் வேசக் கொண்டாட்டங்களுக்கான நல்வாழ்த்துக்கள். இந்தப் புனித நன்னாளில் உங்களைச் சந்திப்பதும், உங்கள் அனைவருடைய ஆசீர்வாதங்களையும் பெறுவதும் எனக்கு கிடைத்த நல்வாய்ப்பு. இதற்கு முன்னரும் எனக்கு இதுபோன்ற வாய்ப்புகள் பல கிடைத்துள்ளன. 2015, 2018 ஆம் ஆண்டுகளில் தில்லியிலும், 2017 ஆம் ஆண்டில் கொழும்பிலும் இந்தக் கொண்டாட்டங்களில் உங்களுடன் ஒரு பகுதியாக, நானும் இருந்தேன். நண்பர்களே புத்தபிரான் கூறியுள்ளதாவது : मनोपुब्बं-गमाधम्मा, मनोसेट्ठामनोमया, இதற்குப் பொருள் என்னவென்றால் தம்மம் மதம் மனதில்தான் உள்ளது. மனம்தான் உயர்ந்த […]
Continue reading …சென்னை,மே 7 தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவலில் நேற்று புதிய உச்சம் எட்டப்பட்டிருக்கிறது. சென்னையில் 324 பேர் உட்பட தமிழ்நாடு முழுவதும் 771 பேர் நேற்று மட்டும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். புதிய நோய்த்தொற்றுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அறிக்கை. சென்னையில் ஏற்படும் புதிய நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை முதலில் ஒற்றை இலக்கங்களிலும், பின்னர் இரட்டை இலக்கங்களிலும் இருந்த நிலை மாறி, கடந்த வாரத்தில் நூற்றுக்கும் […]
Continue reading …புது டெல்லி,மே 06 புத்த பூர்ணிமா திருநாளை முன்னிட்டு குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்துச் செய்தியில், “புத்த பிரானின் பிறப்பைக் குறிக்கும் வகையில் கொண்டாடப்படும் புத்த பூர்ணிமா திருநாளை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு எனது வாழ்த்துகள். உண்மை, அறம், நேர்மையின் பாதையில் பயணிக்குமாறு மனித குலத்தை ஊக்குவித்தவர் புத்தபிரான். அவரது போதனைகள், ஆன்மீக விழிப்புணர்வின் வாயிலாக மக்களை விடுதலை பெறச் செய்யும் வழியைக் காட்டின. அமைதி, […]
Continue reading …புது டெல்லி,மே 06 புத்த பூர்ணிமாவையொட்டி குடியரசுத் தலைவர் திரு. ராம் நாத் கோவிந்த், தமது வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது : புத்த பூர்ணிமா சுபதினத்தையொட்டி, எனது சக குடிமக்கள் அனைவருக்கும், உலகம் முழுவதிலும் உள்ள புத்த பகவானைப் பின்பற்றுபவர்களுக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்பு, உண்மை, கருணை ஆகியவற்றுடன் அஹிம்சை அடிப்படையில் மனிதநேயத் தொண்டாற்ற புத்தபகவானின் போதனைகள் நமக்கு ஊக்கமளிக்கின்றன. அவரது வாழ்க்கையும், இலட்சியங்களும், சமத்துவம், நல்லிணக்கம், நீதி போன்ற நிலைத்து நிற்கும் விழுமியங்கள் […]
Continue reading …புது டெல்லி,மே 05 கோவிட்-19 நோய் பரவாமல் தடுப்பதற்காக தேசிய மாணவர் படை (NCC) ஆற்றியுள்ள பங்கு குறித்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று காணொளி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். நாடு முழுவதிலும் உள்ள 17 NCC இயக்குநரகங்களுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர், இதுபோன்ற மாநாட்டின் மூலம் உரையாடுவது இதுவே முதன் முறையாகும். தேசிய மாணவர் படையின் தலைமை இயக்குநர், லெப்டினண்ட் ஜெனரல் ராஜீவ் சோப்ரா மற்றும் பாதுகாப்புத்துறைச் செயலாளர் டாக்டர் அஜித் குமார் ஆகியோரும் பங்கேற்றனர். […]
Continue reading …சென்னை,மே 5 கொரோனா வைரஸ் தொற்றால் தூண்டப்பட்ட ஊரடங்கால் பாலைவனம் போன்ற அரவம் இல்லாத நிலையில், ரத்தப்போக்குடன் வெள்ளாடு ஒன்று ஆட்டோவில் சென்னை அரசு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது. இது ஒரு அவசர நிலை என்பதை உணர்ந்த டாக்டர் எஸ். பாலசுப்பிரமணியன் சிகிச்சை மேஜையை தயார் செய்தார். அந்த ஆட்டுக்கு இது முதல் பிரசவம் என்பதுடன் குறைப் பிரசவமாகவும் காணப்பட்டதால், மிகவும் சிக்கலாக இருந்தது என மருத்துவர் நினைவு கூர்ந்தார். குறைமாதக் குட்டியின் தலையும், கழுத்தும் பக்கவாட்டில் […]
Continue reading …புது டெல்லி,மே 05 ஊழியர் வருங்கால வைப்பு நிதித் திட்டத்தின் கீழ் 65 லட்சம் ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். நாடெங்கும் அமலில் இருக்கும் கொரோனா வைரஸ், முடக்க நிலையினால் ஓய்வூதியதாரர்களுக்கு சிக்கல் ஏதும் ஏற்படக்கூடாது என்ற நோக்கத்தில், ஏப்ரல் 2020 மாதத்திற்கான ஓய்வூதியத்தை முன்னதாகவே அளிக்க, ஊழியர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தின் 135 கள அலுவலகங்களும் நடவடிக்கை எடுத்துள்ளன. எல்லாப் பிரச்சனைகளையும் சமாளித்து, இந்த அலுவலகத்தின் அலுவலர்களும், பணியாளர்களும், இந்தியா முழுவதும் உள்ள ஓய்வூதியம் பட்டுவாடா செய்யும் வங்கிகளுக்கு […]
Continue reading …புது டெல்லி,மே 05 கொரரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த பொது ஊரடங்கு தொடர்வதால், மத்திய அரசின் பல்வேறு கட்டுமான நிறுவனங்களில் பணிபுரிந்து வந்த ஏராளமான தொழிலாளர்கள் பல இடங்களில் தவித்து வருகின்றனர். அவர்களது சிரமத்தைக் குறைக்கும் வகையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான மத்திய துணைத் தலைமை தொழிலாளர் நல ஆணையர் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்துள்ளார். தமிழகத்தில், சென்னை முதல் கன்னியாகுமரி வரை, 59 பணியிடங்களில் வேலை பார்த்து வந்த மொத்தம் 20,054 தொழிலாளர்கள் கண்டறியப்பட்டனர். அவர்கள் அனைவரும் வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். […]
Continue reading …நாகை, மே 5மூர்த்தி தமிழ்நாட்டில் ஊரடங்கு சட்டத்தில் மதுபான கடைகள் மூடிய நிலையில் மது பிரியர்கள் ஒரு குவாட்டர் 300க்கு கூட கிடைக்காத நிலையில் பரிதவித்து வருகின்றனர். அருகில் உள்ள காரைக்கால் பகுதியில் இருந்து கடத்தி வர முயற்சித்தாலும் அந்த அரசாங்கம் கேமிரா மூலம் கண்காணித்து வருவதால் கடையில் உரிமையாளர்களின் உரிமை ரத்தாகி விடும் என்ற பயத்தில் உள்ளார்கள். நாகப்பட்டினம் அருகே பொய்யூர் கிராமத்தில் பூஞ்சோலை என்கிற தமிழ்செல்வன் தன் வீட்டில் எரிசாராயம் காய்ச்சுகின்ற தொழிலை ஆரம்பித்துள்ளார். […]
Continue reading …சென்னை,மே 4 கொரோனா வைரஸ் தொற்று நோயை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பிறப்பித்திருந்த ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகளை அவ்வப்போது வழங்கிவருகிறது. மத்திய அரசின் ஊரடங்குஉத்தரவு 4.5.2020 முதல் மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் மதுபானக்கடைகள், சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு திறக்க அனுமதி அளித்துள்ளது. எனினும் மதுபானக்கூடங்கள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் தமிழ்நாட்டை ஒட்டியுள்ள கர்நாடகா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களில் மதுபானக்கடைகளை திறக்க ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டை ஒட்டியுள்ள ஆந்திரா மற்றும் […]
Continue reading …