Home » Entries posted by admin (Page 23)
Entries posted by admin

கொரோனா : தமிழகத்தில் 8000 பேர் பாதிப்பு!

Comments Off on கொரோனா : தமிழகத்தில் 8000 பேர் பாதிப்பு!
கொரோனா : தமிழகத்தில் 8000 பேர் பாதிப்பு!

சென்னை,மே 11 தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 798 கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளது, 6 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் 538, செங்கல்பட்டில் 90, திருவள்ளூரில் 97, அரியலூரில் 33 என சுகாதாரத்துறையின் செய்திகுறிப்பு தெரிவிக்கின்றது. பாதிப்பு எண்ணிக்கை 8,002 ஆக அதிகரித்துள்ளது, பலி எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 92 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 2,051 ஆக உள்ளது. தற்போது வரை 2,54,899 மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது […]

Continue reading …

நடமாடும் எக்ஸ்ரே மெஷின் வாகனத்தை கொடியசைத்து தொடங்கிவைத்தார் முதல்வர் !

Comments Off on நடமாடும் எக்ஸ்ரே மெஷின் வாகனத்தை கொடியசைத்து தொடங்கிவைத்தார் முதல்வர் !
நடமாடும் எக்ஸ்ரே மெஷின் வாகனத்தை கொடியசைத்து தொடங்கிவைத்தார் முதல்வர் !

சென்னை,மே 11 தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்று (11.5.2020) தலைமைச் செயலகத்தில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் தேசிய நல வாழ்வு குழுமத்தின் சார்பில் 5 கோடியே 48 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், நெஞ்சக தொற்று நோய் மற்றும் கோவிட்-னால் ஏற்படும் நெஞ்சக தொற்று நோய்களை துரிதமாக கண்டறிய நடமாடும் அதிநவீன எக்ஸ்ரே கருவி பொருத்தப்பட்ட 14 வாகனங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக துவக்கி வைக்கும் அடையாளமாக 5 வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த நடமாடும் […]

Continue reading …

சட்ட அதிகாரிகளுடன் சட்ட அமைச்சர் ஆலோசனை!

Comments Off on சட்ட அதிகாரிகளுடன் சட்ட அமைச்சர் ஆலோசனை!
சட்ட அதிகாரிகளுடன் சட்ட அமைச்சர் ஆலோசனை!

புது டெல்லி,மே 11 இந்திய அரசின் அட்டர்னி ஜெனரல் தலைமையிலான சட்ட அதிகாரிகளுடன் மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நேற்று காணொளி மூலம் கலந்துரையாடினார். நாம் இப்போது சவாலான காலகட்டத்தில் இருக்கிறோம், இந்தச் சவால்களை சரியான வழியில் கையாள்வதற்கு அனைத்து மாநில அரசுகளும், மத்திய அரசும் அடிக்கடி தொடர்பு கொண்டு ஆலோசித்து வரும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி நாட்டை வழிநடத்திச் செல்கிறார் என்று சட்ட அமைச்சர் தனது தொடக்க உரையில் கூறினார். முடக்கநிலை […]

Continue reading …

கோவிட்-19: மிஷன் சாகர் !

Comments Off on கோவிட்-19: மிஷன் சாகர் !
கோவிட்-19: மிஷன் சாகர் !

புது டெல்லி,மே 11 உலக அளவிலான பெரும் தொற்றான  கோவிட்-19 நோய் காலத்தில் மற்றவர்களுக்கு உதவி செய்கின்ற இந்திய அரசின் முயற்சிகளின் ஒரு பகுதியாக, இந்தியக் கடற்படைக்கு சொந்தமான கேசரி என்ற கப்பல், மாலத்தீவு, மொரீஷியஸ், செஷல்ஸ், மடகாஸ்கர், காமராஸ் ஆகிய நாடுகளுக்கு உணவுப்பொருள்கள், ஹைட்ரோகுளோரிக்வின் மாத்திரைகள் உட்பட, கோவிட்-19 தொடர்பான மருந்துகள், சிறப்பு ஆயுர்வேத மருந்துகள் மற்றும் மருத்துவ உதவிக் குழுக்களுடன் 2020, மே10 அன்று புறப்பட்டுச் சென்றது. மிஷன் சாகர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த உதவித் திட்டம், கோவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிராகப் போராடுவதற்கும், நோயின் பாதிப்பினால் ஏற்பட்ட சிரமங்களுக்கும், இந்த மண்டலத்தில், […]

Continue reading …

மாநில முதலமைச்சர்களுடன் இன்று பிரதமர் ஆலோசனை!

Comments Off on மாநில முதலமைச்சர்களுடன் இன்று பிரதமர் ஆலோசனை!
மாநில முதலமைச்சர்களுடன் இன்று பிரதமர் ஆலோசனை!

புது டெல்லி,மே 11 பிரதமர் நரேந்திர மோடி மாநில முதலமைச்சர்களுடன் 5 வது முறையாக காணொளிக் காட்சி மூலம் இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆலோசனை நடத்தவுள்ளார். பிரதமர் அலுவலகத்தில் இருந்து வெளியான டுவிட்டர் செய்தியில், ‘’பிரதமர் நரேந்திர மோடி, காணொளிக் காட்சி மூலம் மாநில முதலமைச்சர்களுடன் இன்று பிற்பகல் 3 மணிக்கு 5-வது முறையாக ஆலோசனை நடத்தவிருக்கிறார்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue reading …

கோவிட்-19: தமிழக சுகாதாரத்துறை அமைச்சருடன் மத்திய அமைச்சர் ஆலோசனை!

Comments Off on கோவிட்-19: தமிழக சுகாதாரத்துறை அமைச்சருடன் மத்திய அமைச்சர் ஆலோசனை!
கோவிட்-19: தமிழக சுகாதாரத்துறை அமைச்சருடன் மத்திய அமைச்சர் ஆலோசனை!

புது டெல்லி,மே 09 மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன், தமிழக சுகாதார அமைச்சர் டாக்டர். சி. விஜயபாஸ்கர், தெலுங்கானாவின் சுகாதார அமைச்சர் எடிலா ராஜேந்திரன் மற்றும் கர்நாடக மருத்துவக் கல்வி அமைச்சர் டாக்டர் கே சுதாகர் ஆகியோருடனான உயர்நிலைக் கூட்டம் ஒன்றை நடத்தினார்.  மத்திய சுகாதார குடும்ப நலத்துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் முன்னிலையிலான இக்கூட்டத்தில், மத்திய, மாநில அரசுகளின் மூத்த அதிகாரிகள் உடனிருந்தனர். இந்த மூன்று மாநிலங்களிலும் கோவிட்-19 மேலாண்மைக்கான நிலைமைகள், மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள், ஆயத்த நடவடிக்கைகள் ஆகியவை குறித்து […]

Continue reading …

கைலாஷ் – மானசரோவர் வழித்தடம் அமைக்கும் பணிகள் நிறைவு: நிதின் கட்கரி பாராட்டு!

Comments Off on கைலாஷ் – மானசரோவர் வழித்தடம் அமைக்கும் பணிகள் நிறைவு: நிதின் கட்கரி பாராட்டு!
கைலாஷ் – மானசரோவர் வழித்தடம் அமைக்கும் பணிகள் நிறைவு: நிதின் கட்கரி பாராட்டு!

புது டெல்லி,மே 09 புகழ்பெற்ற கைலாஷ் – மனாசரோவர் யாத்திரை வழித்தடத்தில், தர்ச்சுலாவிலிருந்து லிபுலேக்( சீன எல்லை) வரை சாலைத்தொடர்புப் பணியை நிறைவு செய்த எல்லை சாலைகள் அமைப்பின் முயற்சியை மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், சிறு, குறு, நடுத்தரத் தொழில் துறை அமைச்சர் நிதின் கட்கரி பாராட்டியுள்ளார். இந்தச் சாலையை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், காணொளிக் காட்சி மூலம் நேற்று திறந்து வைத்து, பித்தோரகாரிலிருந்து முதல் வாகனத் தொகுதி செல்வதற்குக் கொடியசைத்து தொடங்கி வைத்தார். […]

Continue reading …

மின்சாரத்தைத் தனியாருக்கு தாரை வார்க்கும் புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தால் மக்கள் மீண்டும் பாதிக்கப்படுவார்கள்!

Comments Off on மின்சாரத்தைத் தனியாருக்கு தாரை வார்க்கும் புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தால் மக்கள் மீண்டும் பாதிக்கப்படுவார்கள்!
மின்சாரத்தைத் தனியாருக்கு தாரை வார்க்கும் புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தால் மக்கள் மீண்டும் பாதிக்கப்படுவார்கள்!

சென்னை,மே 8 நாடு முழுவதும் மின்பகிர்மானத்தை மொத்தமாக தனியாரிடம் ஒப்படைக்கும் வகையில் மத்திய அரசு முன்மொழிந்திருக்கும் ‘மின்சார திருத்தச் சட்டம் -2020’ க்கான வரைவை சட்டமாக்கக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன். கொரோனா பாதிப்பில் இருந்தே இந்தியா இன்னும் மீண்டு வராத ஊரடங்கு நேரத்தில், இப்படியொரு சட்டத்திருத்த மசோதாவை மாநிலங்களின் கருத்துக்கேட்புக்கு அனுப்பியது ஏற்புடையதல்ல என அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை. மேலும் இச்சட்டத்திருத்தின் மூலம் மின் உற்பத்தி, பகிர்மானம் ஆகியவை முழுமையாக தனியாரிடம் […]

Continue reading …

சோதனை காலத்திலும் சாதனை செய்த ஆவின்!

Comments Off on சோதனை காலத்திலும் சாதனை செய்த ஆவின்!
சோதனை காலத்திலும் சாதனை செய்த ஆவின்!

சென்னை,மே 8  ஆவின் வரலாற்றில் இல்லாதவகையில், 34 இலட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து சாதனை படைத்துள்ளது ஆவின் நிர்வாகம். கொரோனா நோய்த் தொற்று காலத்தில் பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையில் இந்த மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக, ஆவின் மேலாண்மை இயக்குநர் மா.வள்ளலார் இ.ஆ.ப வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா நோய்த் தொற்று காலத்தில் தமிழக முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி மக்களுக்கான சேவையில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறது ஆவின். இந்த இக்கட்டான நேரத்தில் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பால் […]

Continue reading …

2570 செவிலியர்கள் பணி நியமனம்: முதல்வர் பழனிசாமி உத்தரவு!

Comments Off on 2570 செவிலியர்கள் பணி நியமனம்: முதல்வர் பழனிசாமி உத்தரவு!
2570 செவிலியர்கள் பணி நியமனம்: முதல்வர் பழனிசாமி உத்தரவு!

சென்னை,மே 8  கொரோனா வைரஸ் தொற்று நோய் (கோவிட்-19) தடுப்பு நடவடிக்கைகளுக்கு மேலும் 2570 ஒப்பந்த செவிலியர்கள் பணியமர்த்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு. மாண்புமிகு அம்மாவின் அரசு கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் பன்முக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஓர் அங்கமாக மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம் மூலம் ஏற்கனவே 530 மருத்துவர்கள், 2323 செவிலியர்கள், 1508 ஆய்வக நுட்பனர்கள் மற்றும் 2715 சுகாதார ஆய்வாளர்கள் பணியமர்த்தப்பட்டு சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். இதனைத் […]

Continue reading …