Home » Entries posted by admin (Page 38)
Entries posted by admin

தொலைத் தொடர்பு சேவை வர்த்தகத்தில் இணைகிறது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் ஏர்செல் நிறுவனங்கள் !

Comments Off on தொலைத் தொடர்பு சேவை வர்த்தகத்தில் இணைகிறது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் ஏர்செல் நிறுவனங்கள் !

தொலைத் தொடர்பு சேவைத் துறை வர்த்தகத்தில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ஏர்செல் நிறுவனங்கள் ஒன்றாக இணைகின்றன.இதனையடுத்து அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் கம்பியில்லா தொலைத்தொடர்பு சேவைப்பிரிவு ஏர்செல்லுடன் இணைக்கப்படவுள்ளது. இரண்டு நிறுவனங்களும் சேர்ந்து உருவாக்கும் நிறுவனத்தில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் ஏர்செல்லின் தலைமை நிறுவனமான மேக்சிஸ் நிறுவனம் ஆகியவை தலா 50% பங்குகளை சரிசமமாக வைத்திருக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இணைப்புக்குப் பிறகு இந்த நிறுவனங்களின் பயனாளர்கள் எண்ணிக்கை 19 கோடியாக இருக்கலாம். ஏர்டெல் நிறுவனம் 25 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்ட நிறுவனமாகும்.இந்த […]

Continue reading …

தமிழகம் முழுவதும் சிறு, குறு விவசாயிகளின் ரூ.5,780 கோடி கடன் தள்ளுபடி !

Comments Off on தமிழகம் முழுவதும் சிறு, குறு விவசாயிகளின் ரூ.5,780 கோடி கடன் தள்ளுபடி !

கூட்டுறவு சங்கங்களில் சிறு, குறு விவசாயிகள் பெற்ற பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்வது தொடர்பான விதிமுறை களை கூட்டுறவுத்துறை வெளி யிட்டுள்ளது. இதையடுத்து சிறு, குறு விவசாயிகள் கடந்த மார்ச் 31-ம் தேதி வரை கூட்டுறவு வங்கிகளில் பெற்ற ரூ.5,780 கோடி அள வுக்கான பயிர்க்கடன், நடுத்தர, குறுகிய, நீண்டகால கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். தமிழக முதல்வராக ஜெ ய லலிதா கடந்த மே 23-ம் தேதி பதவியேற்றார். தலைமைச் செயலகம் சென்று முதல்வராக பொறுப்பேற்றதும், தேர்தல் […]

Continue reading …

எதிர்காலத்திலும் நுழைவுத் தேர்வை எழுத நிர்பந்திக்க கூடாது! -மோடிக்கு ஜெயலலிதா கடிதம்

Comments Off on எதிர்காலத்திலும் நுழைவுத் தேர்வை எழுத நிர்பந்திக்க கூடாது! -மோடிக்கு ஜெயலலிதா கடிதம்

சென்னை: மருத்துவ நுழைவுத் தேர்வை ரத்து செய்து அவசர சட்டம் பிறப்பித்ததற்கு நன்றி. எதிர்காலத்திலும் நுழைவுத் தேர்வை எழுத நிர்பந்திக்க கூடாது என்று பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்து முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதி உள்ளார்.இது தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மோடிக்கு எழுதி உள்ள கடிதத்தில், ”நடப்பாண்டு மருத்துவ நுழைவுத் தேர்வை ஒத்தி வைத்ததற்கு நன்றி. அவசர சட்டத்தால் இட ஒதுக்கீட்டின் பயனை மாணவர்கள் இந்த ஆண்டு அனுபவிப்பார்கள்.நுழைவுத் தேர்வு ஒத்திவைப்பால், லட்சக்கணக்கான மாணவர்களும், பெற்றோர்களும், […]

Continue reading …

வேட்பாளர் மாற்றம்: உளுந்தூர்பேட்டையில் விஜயகாந்துக்கு எதிராக பாலுவை களமிறக்கியது பாமக !

Comments Off on வேட்பாளர் மாற்றம்: உளுந்தூர்பேட்டையில் விஜயகாந்துக்கு எதிராக பாலுவை களமிறக்கியது பாமக !

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தொகுதியில் பாமக சார்பில் வழக்கறிஞர் பாலு போட்டியிடுவார் என அக்கட்சித் தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார். நேற்று (திங்கள்கிழமை) தேமுதிக தலைவர் விஜயகாந்த் உளுந்தூர்பேட்டையில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று பாமக உளுந்தூர்பேட்டை வேட்பாளர் மாற்றம் அறிவிப்பு வெளியாகியுள்ளது. வேட்பாளர் மாற்றம் தொடர்பாக ஜி.கே.மணி வெளியிட்ட அறிக்கையில், “எதிர்வரும் 16.05.2016 திங்கட்கிழமை நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தொகுதிக்கான பா.ம.க. வேட்பாளராக இரா.ராமமூர்த்தி அறிவிக்கப்பட்டிருந்தார். இப்போது அவருக்கு […]

Continue reading …

கடும் எதிர்ப்பு எதிரொலி: பி.எப். தொகை திரும்ப பெறுதலில் புதிய விதிமுறை நிறுத்திவைப்பு !

Comments Off on கடும் எதிர்ப்பு எதிரொலி: பி.எப். தொகை திரும்ப பெறுதலில் புதிய விதிமுறை நிறுத்திவைப்பு !

சந்தாதாரர்களின் கடும் எதிர்ப்பின் எதிரொலியாக, வருங்கால வைப்பு நிதியில் (பிஎப்) உள்ள தொகையை திரும்பப் பெறுதலில் புதிய விதிமுறைகள் ஜூலை 31 வரை அமல்படுத்தப்பட மாட்டாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இப்போதைய விதிமுறைகளின்படி, ஒரு நிறுவனத்தின் பணியிலிருந்து விலகிய ஒரு ஊழியர் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு வேலையில்லாமல் இருந்தால், தனது பிஎப் கணக்கில் உள்ள முழு தொகையையும் (100%) திரும்பப் பெற முடியும். இந்நிலையில், மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சகம் கடந்த பிப்ரவரி மாதம் […]

Continue reading …

பரபரப்பு ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா த்ரில் வெற்றி !

Comments Off on பரபரப்பு ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா த்ரில் வெற்றி !

இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையே நேற்று  நடைபெற்ற டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் ஆட்டத்தில், இந்திய அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.  கடைசி ஓவரில் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் வங்கதேச அணி 6 விக்கெட்டுகளுக்கு 136 ரன்களை எடுத்திருந்தது. களத்தில் மஹமதுல்லாவும், முஸ்தஃபிர் ரஹிமும் இருக்க, பாண்டியா பந்துவீசினார். முதல் பந்தில் மஹமதுல்லா 1 ரன் எடுக்க, அடுத்த இரண்டு பந்துகளும் பவுண்டரிக்கு விரைந்தது. ஆட்டம் முடிந்தது, வங்கதேசம் வென்றுவிடும் என்று ரசிகர்கள் […]

Continue reading …

அர்ச்சுணா… அர்ச்சுணா… கொள்ளையடிக்கும் அர்ச்சுணா!

Comments Off on அர்ச்சுணா… அர்ச்சுணா… கொள்ளையடிக்கும் அர்ச்சுணா!

இராமேஸ்வரத்தில் அ.தி.மு.க. சேர்மன் அர்சுணனால் பாதிக்கப்பட்டு உயிருக்கு பயந்து நடுங்கும் எம்.ஜி.ஆரின் தீவிர விசுவாசியான ராமசாமி மற்றும் அவரது மனைவி ஆர்.கஸ்தூரி (அ.தி.மு.க. மகளிர்அணி நகர செயலாளர்) இருவரும் வாழ்வையே தொலைத்துவிட்டு, கதறுவதாக தகவல்கள் வர விசாரித்தோம். மேற்படி இராமசாமி ராமேஸ்வரத்தில் (ஸ்ரீராமஜெயம் கம்பெனி) விசைப்படகு வைத்து நல்ல நிலையில் இருந்துள்ளார். இவர் 1988 ஆம் வருடம் சந்தானம் என்பவரிடம் இரண்டு 2.42 சென்டிற்கு கிரைய ஒப்பந்தம் போட்டுள்ளார். அந்த நிலத்திற்கான பணத்தை முழுவதும் கொடுத்ததற்கான ஒப்பந்த […]

Continue reading …

விஜயகாந்த் முடிவால் திமுக அணிக்கு பாதிப்பில்லை: குஷ்பு !

Comments Off on விஜயகாந்த் முடிவால் திமுக அணிக்கு பாதிப்பில்லை: குஷ்பு !

சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் என்ற அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் முடிவால் காங்கிரஸ் – திமுக கூட்டணிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார். டெல்லியில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தமிழக தேர்தல் ஏற்பாடுகள் குறித்து சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: பாதிப்பில்லை: “சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் என்ற அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் முடிவால் காங்கிரஸ் – திமுக கூட்டணிக்கு எவ்வித […]

Continue reading …

நான் நாட்டை விட்டு தப்பி ஓடவில்லை: விஜய் மல்லையா !

Comments Off on நான் நாட்டை விட்டு தப்பி ஓடவில்லை: விஜய் மல்லையா !

நான் நாட்டை விட்டு தப்பி ஓடவில்லை. இந்திய நாடாளுமன்றத்தின் எம்.பி.யாக நாட்டின் சட்டதிட்டங்களை மதித்து அவற்றிற்கு முழுமையாக கட்டுப்பட்டவன் என தொழிலதிபர் விஜய் மல்லையா தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் (@TheVijayMallya) மேலும் கூறியிருப்பதாவது: “நான் ஒரு சர்வதேச தொழிலதிபர். தொழில் நிமித்தமாக இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு அவ்வப்போது சென்று வருவது வழக்கம். நான் நாட்டை விட்டு தப்பி ஓடவில்லை. நான் பயந்தவனும் இல்லை. இந்திய நாடாளுமன்றத்தின் எம்.பி.யாக, நாட்டின் சட்டதிட்டங்களை மதித்து அவற்றிற்கு […]

Continue reading …

அரசு கேபிள் டிவி மூலம் பொதுமக்கள் வீடுகளில் இணைய வசதி: முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

Comments Off on அரசு கேபிள் டிவி மூலம் பொதுமக்கள் வீடுகளில் இணைய வசதி: முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

அரசு கேபிள் டிவி மூலம், இல்லந்தோறும் இணைய வசதி திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா நேற்று தொடங்கி வைத்தார். இது தொடர்பாக நேற்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: அரசு கேபிள் ஆபரேட்டர்கள் வாயிலாக மாநிலம் முழுவதும் அதிவேக அகண்ட அலைவரிசை சேவைகள் மற்றும் இதர இணைய சேவைகள் குறைந்த கட்டணத்தில் அரசு கேபிள் டிவி மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்தார். அதை செயல்படுத்தும் வகையில், கேபிள் டிவி நிறுவனம் […]

Continue reading …