
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இருவரும் தமிழகத்தில் 31வது தென்மண்டல குழு கூட்டத்தில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் மத்திய மாநில அரசுகளுக்கு இடையிலான 31-வது தென் மண்டல குழு கூட்டம் நடைபெற உள்ளது. மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற உள்ள இம்மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகிய இருவரும் ஒருவரையொருவர் கடுமையாக […]
Continue reading …
பிரபல தனியார் கல்லூரியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 4 தொழிலாளர்கள் பலியாகினர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை மாவட்டத்தில் என்ஜினியரிங் கல்லூரிகளில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களும் படித்து வருகின்றனர். கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியிலுள்ள பிரபல தனியார் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் சுற்றுச்சுவர் கட்டும் பணி நடைபெற்று வந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில், 4 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 2 பேர் படுகாயம் […]
Continue reading …
சிறப்பு நீதிமன்றம் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த வழக்கில் வரும் 6ம் தேதி தீர்ப்பளிக்கவுள்ளது. கடந்த 1996&-2001ம் ஆண்டு வரை உயர் கல்வித்துறை அமைச்சராக பொன்முடி இருந்த போது தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி சைதாப்பேட்டையில் 3,360 சதுர அடி நிலத்தை போலி ஆவனம் தயாரித்து மாமியார் பெயரில் பதிவு செய்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருக்கும் எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் […]
Continue reading …
எலிகள் சாப்பிட்ட 11 கிலோ கஞ்சாவால், அதை கடத்தியதாக கைது செய்யப்பட்ட இருவர் விடுதலை செய்யப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு நபர்கள் 22 கிலோ கஞ்சா கடத்தியதாக கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தற்போது விசாரணைக்கு வந்தது. கஞ்சா வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 22 கிலோ கஞ்சாவில் 11 கிலோ கஞ்சாவை எலி சாப்பிட்டுவிட்டது. மீதி 11 கிலோ கஞ்சா மட்டும்தான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் தெரிகிறது. இதையடுத்து வழக்கில் குற்றம் காட்டப்பட்ட இருவரையும் விடுதலை […]
Continue reading …
நடிகர் தனுஷ் “பவர் பாண்டி” திரைப்படத்தின் மூலம் இயக்குநராக தன்னை நிரூபித்தார். அடுத்து தனது 50வது படத்தை தானே இயக்கவ-ள்ளார். படத்தில் ஏகப்படட் நட்சத்திர பட்டாளமே நடிக்க உள்ளது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தெரிகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். திரைப்படத்தில் தனுஷோடு எஸ்.ஜே.சூர்யா, காளிதாஸ் ஜெயராம், திரிஷா, துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், அமலா பால் உள்ளிட்டோர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. “கேப்டன் மில்லர்” திரைப்படம் முடிந்துள்ளதையடுத்து இந்த படத்தை தனுஷ் […]
Continue reading …
மெட்டா நிறுவனம் டுவிட்டர் நிறுவனத்திற்கு போட்டியாக தனது புதிய சமூக செயலியை அறிமுகப்படுத்த உள்ளது. சமூக வலைதள செயலிகளில் உலகம் முழுதும் பிரபலமாக முன்னணியில் இருப்பது டுவிட்டர். சமீபத்தில் இந்த டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கினார். அவர் வாங்கியது முதல் டுவிட்டர் தொடர் சறுக்கல்களை சந்தித்து வருகிறது. அதிகாரப்பூர்வ புளூ டிக்கை பெற கட்டணம், டுவிட்டர் பணியாளர்கள் பணி நீக்கம், தொழில்நுட்ப கோளாறு போன்றவற்றால் பயனாளர்கள் பலர் டுவிட்டர் மீது அதிருப்தி அடைந்துள்ளனர். டுவிட்டர் பயனாளர்களை […]
Continue reading …
தமிழ்நாடு அரசிடம் சினிமா டிக்கெட் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள அனுமதி கோரி திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் மனு கொடுத்துள்ளது. வாரந்தோறும் தமிழகத்தில் பல திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளார்கள் சினிமா டிக்கெட் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள அனுமதி கோரி தமிழக அரசிடம் மனு அளித்துள்ளனர். அதில், தமிழ் நாட்டில் உள்ளள மல்டிபிளக்ஸ் தியேட்டர்களுக்கு ரூ.250 ஆகவும், ஏசி திரையரங்குகளுக்கு ரூ.200 ஆகவும், Non- AC திரையரங்குகளுக்கு ரூ.120 ஆகவும் உயர்த்திக் கொள்ள அனுமதி வழங்க […]
Continue reading …
விஷாலின் நடிப்பில், “மார்க் ஆண்டனி” திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “மார்க் ஆண்டனி”. இத்திரைப்படத்தை மினி ஸ்டூடியோஸ் சார்பாக வினோத் தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தில் நடிகர் விஷால், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலரும் வித்தியாசமான கெட்டப்பில் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் பெரும் வரவேற்பை பெற்றது. படம் ஏற்கனவே ஜூலை 28ம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. செப்டமபர் 15ம் தேதி […]
Continue reading …
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில், வெளியான படம் “விக்ரம்.” இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று வசூலையும் குவித்தது. கமலின் சினிமா கேரியலில் முக்கியப்படமாக அமைந்தது. ஷங்கர் இயக்கத்தில், “இந்தியன் 2” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தையடுத்து, அமிதாப், பிரபாஸ், தீபிகா படுகோன் நடிப்பில் “பிராஜக்ட் கே” திரைப்படத்தில் கமல்ஹாசன் நடிக்கவுள்ளார். இப்படத்திற்குப் பின், கமல்ஹாசன் அடுத்து வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். படத்தை அவரின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. ஏற்கனவே வினோத் இயக்கிய […]
Continue reading …
ஐதராபாத்தில் உலகின் மிகப்பெரிய மரத்தால் ஆன விஷ்ணு சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் அதை பார்த்து பரவசமடைந்துள்ளனர் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்திலுள்ள நியூபோய்ன் பாலியில் யாதாத்திரி என்ற கோவிலில் தனியார் நிறுவனம் ஒரே மரத்தால் ஆன உலகின் மிகப்பெரிய விஷ்ணு சிலையை வடிவமைத்துள்ளது. 21 அடி அகலம் 8.5 அடி உயரம் கொண்ட இந்த சிலை தான் உலகின் மிகப்பெரிய மரத்தால் ஆன விஷ்ணு சிலை. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பழமையான தேக்கு மரத்தால் செய்யப்பட்ட இந்த […]
Continue reading …