Home » Entries posted by Shankar U (Page 245)
Entries posted by Shankar

பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு!

Comments Off on பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு!

பள்ளி கல்வித்துறை மாணவர்கள் இலவச பஸ் பாஸ் பெறுவதற்கு செயலி மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரசுப் பள்ளிகளில் அந்தந்த வகுப்பு ஆசிரியர் அவரது வகுப்பு மாணவர்கள் இலவச பஸ் பாஸ் பெற பள்ளிக் கல்வித்துறை செயலியில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த அனைத்து மாணவர்களின் விவரங்களை சரிபார்த்து தலைமை ஆசிரியர் அனுமதி வழங்க வேண்டும். பள்ளிக் கல்வித்துறை செயலியில் நுழைந்து பள்ளி விவரம், மாணவர் பெயர், வகுப்பு, முகவரி, பஸ் […]

Continue reading …

“லஸ்ட் ஸ்டோரீஸ் 2” குறித்து தமன்னா வேதனை!

Comments Off on “லஸ்ட் ஸ்டோரீஸ் 2” குறித்து தமன்னா வேதனை!

“லஸ்ட் ஸ்டோரீஸ்” வெப் தொடர் பாலிவுட்டில் மிகவும் பிரசித்திபெற்றது. இத்தொடரில் பாலியல் உறவு குறித்த இந்திய பெண்களின் புரிதலை 4 கோணங்களில் இருந்து சொல்லும் வகையில் எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டு வருகிறது. இதன் முதல் பாடம் “லஸ்ட் ஸ்டோரீஸ்” தொடரில் கியரா அத்வானி, விக்கி கௌஷல் இணைந்து நடித்திருந்தனர். தற்போது இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இத்தொடர் நாளை நெட்பிலிக்சில் வெளியாகிறது. இத்திரைப்படத்தில், மிருணாள் தாகூர், கஜோல், தமன்னா, விஜய் வர்மா ஆகியோர் நடித்துள்ளனர். அண்மையில் வெளியான இத்தொடர் நெட்பிளிக்ட்ஸில் […]

Continue reading …

உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி!

Comments Off on உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி மாவட்டம், தீப்பெட்டி தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவித்துள்ளார். இதுகுறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கையில், “தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம், சித்திரம்பட்டி கிராமத்தில் இயங்கி வந்த தனியாருக்குச் சொந்தமான தீப்பெட்டித் தொழிற்சாலையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீவிபத்தில் மாரியம்மாள், க/பேதங்கவேல் (லேட்) (வயது 70) என்பவர் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்தவேதனையடைந்தேன். மேலும் இவ்விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கனகராஜேஸ்வரி, க/பெ.காட்டு ராஜா […]

Continue reading …

இன்று முதல் மின் கட்டணம் உயர்வு?

Comments Off on இன்று முதல் மின் கட்டணம் உயர்வு?

இன்று முதல் தமிழகத்தில் வணிக பயன்பாட்டிற்கான மின் கட்டணம் தமிழ்நாடு மின்சார வாரியம் முன்னதாக அறிவித்தப்படி உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியம் சமீபத்தில் அனைத்து மின் இணைப்புகளையும் ஆதார் எண்ணோடு இணைத்தல் வேண்டும் என்று கட்டாயமாக்கியது. அதன்படி பல கோடி மின் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப்பட்டன. இதற்கு பிறகு மின் கட்டண உயர்வு இருக்கலாம் என கூறப்பட்டு வந்தது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால் பொது பயன்பாட்டிற்கான மின் கட்டணம் உயர்த்தப்படாது என மின் வாரியம் தெரிவித்திருந்தது. […]

Continue reading …

நிர்வாகிகளுக்காக விஜய் எழுதிய கடிதம்!

Comments Off on நிர்வாகிகளுக்காக விஜய் எழுதிய கடிதம்!

நடிகர் விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளின் செயல்பாடு குறித்து மகிழ்ச்சி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.] தமிழகத்தில் நடிகர் விஜய்யின் அரசியல் எண்ட்ரி குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. அதற்கேற்றார்போல மெல்ல மெல்ல அரசியல் நோக்கிய தனது நகர்வுகளை விஜய் எடுத்து வைக்க தொடங்கியுள்ளார். அதன் முன்னோட்டமாகதான் தொகுதி வாரியாக நல்ல மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவியரை அழைத்து பரிசளிப்பு விழா நடத்தப்பட்டது. இதுதவிர விஜய்யின் பிறந்தநாள் அன்று விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் அன்னதானம், […]

Continue reading …

காதல் ஜோடிகள் தற்கொலை!

Comments Off on காதல் ஜோடிகள் தற்கொலை!

கர்நாடக மாநிலம் பெங்களூர் தேவனஹள்ளி தாலூக்கா விஜய நகரில் கோலார் பகுதியில் வசித்து வந்த பவித்ரா அங்குள்ள உர நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அதே நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வந்த குருபிரசாத் என்பவருடன் நட்பு பின்பு காதலானது. குருபிரசாத் ஏற்கனவே திருமணமாகி இருந்தாலும் அதை மறைத்து பவித்ராவை காதலித்து வந்துள்ளார். குருபிரசாத்தின் திருமண விவகாரம் தெரிய வந்தது இருவருக்கும் இடையே பிரச்சனை எழுந்துள்ளது. இதனால் விரக்தியடைந்த பவித்ரா வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ […]

Continue reading …

ராகுல் காந்தியை விமர்சித்த அமித்ஷா!

Comments Off on ராகுல் காந்தியை விமர்சித்த அமித்ஷா!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராகுல் காந்தி பிரதமரானால் ஊழல், மோசடி தான் இந்தியாவின் தலைவிதியாக மாறும் என்று கூறியுள்ளார். கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் இரண்டாவது முறையாக பாஜக ஆட்சி அமைந்தது. பாஜக ஆட்சியின் 9 ஆண்டுகளின் சாதனைகளை விளக்கி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் இந்தியா பல வழிகளில் […]

Continue reading …

ஷாருக் கானின் பட ஆடியோ சாதனை!

Comments Off on ஷாருக் கானின் பட ஆடியோ சாதனை!

அட்லி இயக்கத்தில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான ஷாருக்கான் நடிப்பில் “ஜவான்” திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்து பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. படத்தில் தமிழ் நடிகர்களான விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்துக்கு அனிருத் இசையமைப்பாளராக பணியாற்றுகிறார். அவர் பாலிவுட்டில் அறிமுகமாகும் முதல் படம் இதுவாகும். இப்போது இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் உரிமையை டி சீரிஸ் நிறுவனம் 35 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை […]

Continue reading …

தலையை துண்டித்து மனைவியை கொன்ற பூ வியாபாரி!

Comments Off on தலையை துண்டித்து மனைவியை கொன்ற பூ வியாபாரி!

பூ வியாபாரம் செய்தவர் மனைவியின் தலையை துண்டித்து கொன்ற சம்பவம் திருப்பூர் மாவட்டத்தில் நடந்துள்ளது. திருப்பூர் மாவட்டம் கொங்கு மெயின்ரோடு டி.எம்.எஸ். நகர் 4வது வீதியில் வசிப்பவர் மணிகண்டனின் (36) மனைவி பவித்ரா (23). இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு மகன் இருக்கிறார். பவித்ரா மணிகண்டனுக்கு 2வது மனைவி ஆவார். இதேபோல் பவித்ராவுக்கும் ஏற்கனவே திருமணமாகி 2 வதாக திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் குடும்பத்தில் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளனர். இதில், பவித்ரா நேற்று அவரது […]

Continue reading …

ஜெயிலர் ஃபர்ஸ்ட் சிங்கில் எப்போது?

Comments Off on ஜெயிலர் ஃபர்ஸ்ட் சிங்கில் எப்போது?

நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் “ஜெயிலர்” படத்தில் ரஜினிகாந்த் முத்துவேல் பாண்டியன் எனும் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, சுனில், ஜாக்கி ஷ்ராஃப் என பல முக்கிய நடிகர்கள் நடிப்பில் பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. அனிருத் இசையமைத்துள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீசாகவுள்ளது. தற்போது இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. “ஜெயிலர்” திரைப்படத்தில் ஓவர்சீஸ் வெளியீட்டு உரிமையை ஐங்கரன் இண்டர் நேசனல் நிறுவனம் கைப்பற்றியது. […]

Continue reading …