Home » Entries posted by Shankar U (Page 282)
Entries posted by Shankar

இம்ரான்கான் கைது!

Comments Off on இம்ரான்கான் கைது!

முன்னாள் பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான்கானை 8 நாட்கள் சிறையிலடைக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சில வழக்குகள் தொடர்பாக பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக அவர் லாகூரிலிருந்து வந்துள்ளார். நேற்று நீதிமன்றம் வெளியே பாகிஸ்தான் ரேஞ்சர் படையினர் இம்ரான்கானை கைது செய்தனர். அவரை தடுக்க முயன்ற அவரது வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டனர். பலத்த பாதுகாப்புடன் இம்ரான்கானை வாகனத்தில் அழைத்துச் சென்றனர். இம்ரான்கானின் கட்சியினர் அவரை போலீஸ் கைது செய்துள்ளதாகவும், துன்புறுத்தி வருவதாகவும் புகார் கூறியுள்ளனர். […]

Continue reading …

பிரதமர் மோடி ஜோ பைடனுடன் சந்திப்பு!

Comments Off on பிரதமர் மோடி ஜோ பைடனுடன் சந்திப்பு!

ஜூன் மாதம் பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு அரசு முறை பயணமாக செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இச்சந்திப்பின்போது அவர் வெள்ளை மாளிகையில் அமெரிக்கா அதிபர் ஜோபைடனை சந்தித்து பேச்சுவார்த்தை நடந்து போவதாக கூறப்படுகிறது. பிரதமர் மோடி அவ்வப்போது வெளிநாட்டு சுற்றுப்பயணம் செய்து பல நாட்டு அதிபர்களை சந்தித்து வருகிறார். இதன் மூலம் இந்தியாவுக்கு முன்னணி நாடுகளின் ஆதரவு பெருகி வருகிறது. வரும் ஜூன் மாதம் அரசு முறை பயணமாக அமெரிக்காவுக்கு பிரதமர் மோடி செல்ல இருப்பதாக […]

Continue reading …

இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே போர் மூளும் அபாயம்!

Comments Off on இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே போர் மூளும் அபாயம்!

நேற்று காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீன முக்கிய தலைவர்கள் உட்பட 15 பேர் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து இரு நாடுகளுக்குமிடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே நீண்டகாலமாக பகை நிலவி வருகிறது. கடன் அவ்வப்போது போரிட்டு வருகிறது. கடந்த வாரம் பாலஷ்தீன உண்ணாவிரத போராட்ட நடத்தி வந்த பிரபலம் காதர் அட்னன் மரணமடைந்தார். இதையடுத்து. அந்த நாட்டிலிருந்து, இஸ்ரேல் நாட்டை நோக்கி ராணுவம் ஏவுகணை […]

Continue reading …

கர்நாடகாவில் ஆட்சி செய்யப்போவது யார்?

Comments Off on கர்நாடகாவில் ஆட்சி செய்யப்போவது யார்?

இன்று கர்நாடக மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு தற்போது வெளியாகி உள்ளது. காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்று தேர்தலுக்கு முந்தைய காலக்கட்டத்தில் கருத்து நிலவி வந்தது. தேர்தலுக்குப் பின் நடத்திய கருத்துக்கணிப்பில் பாஜக தான் அதிக இடத்தில் வெல்லும் என்று கூறப்பட்டுள்ளது. பாஜக 94 முதல் 117 இடங்கள் வரை வெல்லும் என்றும் காங்கிரஸ் 91 முதல் 106 இடங்களை கைப்பற்றும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் மதச்சார்பற்ற ஜனதா […]

Continue reading …

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலி!

Comments Off on அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலி!

பெண் இன்ஜினியர் உள்ளிட்ட 8 பேர் அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பலியாகி உள்ளனர். சமீப காலமாகவே அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு நடந்து வருவது அதிகரித்துள்ளது. சில நாட்களுக்கு முன், பள்ளிக்கூடம், கல்லூரி வளாகம், கேளிக்கை விடுதிகளில் துப்பாக்கிச் சூடு நடந்தது. டெக்சாஸ் மாகாணத்தில் டெல்லெஸ் நகரில் உள்ள வணிக வளாகத்தில் கடந்த சனிக்கிழமை மாலையில் துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில், மவுரிஹோ ஹர்சியா (33) என்ற நபர் நடத்திய, இந்த துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலியாகினர். இதுகுறித்து […]

Continue reading …

நந்தினியின் உயர்கல்வி குறித்து முதலமைச்சரின் அறிவிப்பு!

Comments Off on நந்தினியின் உயர்கல்வி குறித்து முதலமைச்சரின் அறிவிப்பு!

நேற்று பிளஸ் டூ தேர்வின் முடிவுகள் வெளியானது. அதில், 600க்கு 600 மதிப்பெண் வாங்கிய நந்தினியின் உயர்கல்வி செலவை தமிழக அரசே ஏற்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த நந்தினி மாணவி தமிழ் உள்பட அனைத்து பாடங்களிலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று 600க்கு 600 என்ற மதிப்பெண்ணை பெற்றுள்ளார். இதனையடுத்து அந்த மாணவிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இன்று அவர் முதலமைச்சரை சந்தித்து ஆசி பெற்றார். இச்சந்திப்பைப் பற்றி நந்தினி கூறும் […]

Continue reading …

ஓபிஎஸ்ஸின் அதிரடி அறிவிப்பு!

Comments Off on ஓபிஎஸ்ஸின் அதிரடி அறிவிப்பு!

முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் நேற்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை சந்தித்து வரும் காலத்தில் இருவரும் இணைந்து செயல்படுவோம் என தெரிவித்தார். அடுத்த கட்டமாக சசிகலாவையும் விரைவில் சந்திப்பேன் என ஓபிஎஸ் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவின் ஓபிஎஸ், இபிஎஸ் என இரு அணிகளாக பிரிந்திருக்கும் சூழ்நிலையில் திடீரென நேற்று டிடிவி தினகரனுடன் ஓபிஎஸ் சந்தித்து இருவரும் இணைந்து அதிமுகவின் மீட்போம் என தெரிவித்தார். “சசிகலாவையும் விரைவில் சந்திக்க உள்ளேன். […]

Continue reading …

விழா மேடையில் பேசிய எஸ்.ஏ.சி!

Comments Off on விழா மேடையில் பேசிய எஸ்.ஏ.சி!

சமீபத்தில் நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தனது மகன் விஜய் பெயரில் கட்சி ஒன்றை தொடங்கினார். ஆனால் அந்த கட்சிக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறிய விஜய் தனது ரசிகர்கள் அந்த கட்சியில் இணைய வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார். இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு எழுந்தது. இதற்கு அவரது மனையும் விஜய்யின் அம்மா ஷோபாவுக்கு விரும்பமின்றி அக்கட்சியிலிருந்து விலகி விஜய்க்கு ஆதவளித்தார். இதனால் விஜய் குடும்பத்தில் அவரது பெற்றோர்களுக்கும் அவருக்கும் இடையே […]

Continue reading …

பயோபிக் இரண்டாம் பாகத்தில் விஷால்?

Comments Off on பயோபிக் இரண்டாம் பாகத்தில் விஷால்?

நடிகர் ஜீவாவிடம் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் பயோபிக் திரைப்படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இத்திரைப்படம் அடுத்த ஆண்டு ஆந்திரா சட்டசபை தேர்தலுக்குள் வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே ஜெகன் மோகன் ரெட்டியின் தந்தையும் முன்னாள் முதலமைச்சருமான ராஜசேகர ரெட்டியின் பயோபிக், ‘யாத்ரா’ என்ற பெயரில் எடுக்கப்பட்டு அதில் மம்மூட்டி நடித்தார். இப்போது “யாத்ரா” படத்தின் இரண்டாம் பாகமும் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் பாகத்தில் மம்மூட்டி நடித்து, அந்த படம் […]

Continue reading …

அஜீத்தை பற்றி சுரேஷ் சந்திரா டுவீட்!

Comments Off on அஜீத்தை பற்றி சுரேஷ் சந்திரா டுவீட்!

கடந்த சில மாதங்களாக நடிகர் அஜீத் பைக்கில் உலகம் முழுவதும் சுற்றி வருகிறார். சமீபத்தில் கூட அவர் நேபாளம் மற்றும் பூடான் ஆகிய நாடுகளுக்கு சென்றார். அடுத்த வாரம் சென்னை திரும்பும் அஜீத் அதன் பிறகு மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகும் “விடாமுயற்சி” திரைப்படத்தில் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். அஜீத்தின் அடுத்த கட்ட உலக பைக் சுற்றுப்பயணம் குறித்த அறிவிப்பை அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். அஜீத் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்துவிட்டார் […]

Continue reading …