Home » Entries posted by Shankar U (Page 332)
Entries posted by Shankar

அமைச்சர் சிவசங்கர் விளக்கம்!

Comments Off on அமைச்சர் சிவசங்கர் விளக்கம்!

அமைச்சர் சிவசங்கர் போக்குவரத்து துறையை தனியார் மயமாக்க அரசு திட்டமிடுவதாக தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டி வருவதை குறித்து விளக்கமளித்துள்ளார். அவர் அளித்துள்ள விளக்கத்தில், “சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்க டெண்டர் விடப்படவில்லை. தனியார் பேருந்துகளை இயக்குவதற்காக சாதக பாதகங்களை ஆராய மட்டுமே டெண்டர் விடப்பட்டுள்ளது. அரசு பேருந்துகளை தனியார் மயமாக்கும் பேச்சுக்கே இடமில்லை. அரசு பேருந்துகள் எதுவும் தனியாரிடம் ஒப்படைக்கப்பட மாட்டாது. சென்னையில் தற்போது ஓடும் பேருந்துகள் நிறுத்தப்படும் என்ற தகவலும் தவறானது, மக்களுக்கு கிடைக்கிற எச்சலுகையும் […]

Continue reading …

பீகார் அரசியல்வாதியின் குற்றச்சாட்டு!

Comments Off on பீகார் அரசியல்வாதியின் குற்றச்சாட்டு!

வடமாநில தொழிலாளர்கள் குறித்து பீகார் மாநிலத்தின் முக்கிய அரசியல்வாதி “நிதிஷ்குமாரின் தவறான அணுகுமுறையே காரணம்” என்று குற்றஞ்சாட்டியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற போலியான வீடியோக்கள் வதந்தியாக பரவி வருகிறது. இது குறித்து தமிழக மற்றும் பீகார் மாநில அரசு தகுந்த நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் பிகார் அரசு அனுப்பிய நான்கு நபர்கள் குழு வட மாநில தொழிலாளர்கள் மத்தியில் […]

Continue reading …

இயக்குனர் ஹரி & விஷால் இணையும் புதிய படம்!

Comments Off on இயக்குனர் ஹரி & விஷால் இணையும் புதிய படம்!

நீண்ட இடைவெளிக்கு பிறகு “யானை” திரைப்படத்தின் மூலம் ரீ&எண்ட்ரி கொடுத்தார் இயக்குனர் ஹரி. இத்திரைப்படத்தில் அருண் விஜய், பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடிப்பில் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. வசூலில் குறைவைக்கவில்லை. இந்நிலையில் இப்போது ஹரி மீண்டும் தன்னுடைய ஹிட் பார்முலா படமான போலீஸ் ஆக்‌ஷன் கதைக்கு திரும்பியுள்ளதாக சொல்லப்படுகிறது. விஷால் நடிக்கும் போலீஸ் ஆக்‌ஷன் கதையை ஹரி இயக்க உள்ளாராம். படத்தை கார்த்திக் சுப்பராஜ் தன்னுடைய ஸ்டோன்பென்ச் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. […]

Continue reading …

இயக்குனர் ராம் படத்தின் அப்டேட்!

Comments Off on இயக்குனர் ராம் படத்தின் அப்டேட்!

இயக்குனர் ராம் இயக்கப் போகும் புதிய திரைப்படத்தின் கிராபிக்ஸ் பணிகள் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன. இயக்குனர் ராம் இப்போது நிவின் பாலி நடிப்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்டத்தில் சூரி மற்றும் அஞ்சலி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். சென்னையை சுற்றியுள்ள பகுதிகளிலும் ராமேஸ்வரத்திலும் படப்பிடிப்பு நடந்து முடிந்தது. படத்தில் விலங்குகள் அதிகளவில் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. படம் முழுவதும் விலங்குகள் ஒரு கதாபாத்திரம் போலவே வரும் விதமாக […]

Continue reading …

சூர்யாவின் புதிய இயக்குனரா இவர்?

Comments Off on சூர்யாவின் புதிய இயக்குனரா இவர்?

நடிகர் சூர்யாவின் அடுத்த திரைப்படத்தின் புதிய இயக்குனர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த ஆண்டு துல்கர் சல்மானின் “சீதா ராமம்“ திரைப்படம் நல்ல வெற்றி பெற்றது. இத்திரைப்படத்தை ஹனு ராகவபுடி இயக்கியிருந்தார். விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தில் துல்கருடன் ராஷ்மிகா மந்தனா, மிருனாள் தாகுர் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். தெலுங்கில் உருவானாலும் இந்த படம் மற்ற மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெற்றி பெற்றது. இந்த படத்தின் இயக்குனர் ஹனு ராகவபுடி, இயக்கும் அடுத்த படத்தின் மீதான […]

Continue reading …

கல்லூரி பேருந்து கவிழ்ந்து விபத்து!

Comments Off on கல்லூரி பேருந்து கவிழ்ந்து விபத்து!

மாணவர்கள் சுற்றுலாவுக்கு சென்ற பேருந்து கவிழ்ந்ததில் விபத்து ஏற்பட்டு 40 பேர் காயமடைந்துள்ளனர். டில்லி பல்கலைக்கழக மாணவர்கள், ஆறு ஒருங்கிணைப்பாளர்கள் என மொத்தம் 44 பேர் மணாலிக்குச் சுற்றுலா பயணம் சென்றனர். அவர்கள் சென்ற பேருந்து இன்று பிலாஸூர் அருகே சண்டிகரிலிருந்து மணாலி சாலையில் சென்று கொடிருக்கும்போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தை அடுத்து, பேருந்தின் டிரைவரும் கண்டக்டரும் தப்பி ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது. அருகில் இருந்தவர்கள் மாணவர்களை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனைக்குக் […]

Continue reading …

விஜயபாஸ்கரின் உதவியாளர் ரவி கைது!

Comments Off on விஜயபாஸ்கரின் உதவியாளர் ரவி கைது!

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ராணிப்பேட்டையை சேர்ந்த முத்துலட்சுமி என்பவர் அரசாங்க வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக அளித்த புகாரியின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் விஜய் பாஸ்கரின் உதவியாளர் ரவியிடம் விசாரணை செய்தபோது அவர் குற்றம் செய்தது உறுதி செய்யப்பட்டு இருப்பதால் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் கைது செய்யப்பட்டதை அடுத்து […]

Continue reading …

யூடியூபை பார்த்து கள்ளநோட்டு அச்சடித்தவர் கைது!

Comments Off on யூடியூபை பார்த்து கள்ளநோட்டு அச்சடித்தவர் கைது!

யூடியூபை பார்த்து கள்ளநோட்டை அச்சடித்தவர் கைது செய்யப்பட்ட சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள ஜல்காவ் என்ற பகுதியில் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் வருவதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அப்பகுதியில் ஆய்வு செய்த நிலையில் சந்தேகத்திற்கு இடமாக ராஜேந்திரன் யாதவ் என்பவரது வீட்டில் திடீரென சோதனை நடத்தினார். அப்போது அவர் ரூபாய் 1.6 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் மற்றும் அச்சடிக்கும் இயந்திரங்கள் வைத்திருந்ததை கண்டுபிடித்து அவற்றை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து […]

Continue reading …

ஆன்லைன் சூதாட்டத்தில் இளைஞர் தற்கொலை!

Comments Off on ஆன்லைன் சூதாட்டத்தில் இளைஞர் தற்கொலை!

ஆன்லைன் சூதாட்டத்தில் பணம் சம்பாதிப்பதற்கு வாய்ப்பே இல்லை, அதில் ஈடுபட்டவர்கள் பணத்தை இழக்கத்தான் செய்வார்கள் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தியும் இந்த ஆன்லைன் மோகம் மக்கள் மத்தியில் குறையவில்லை. சென்னையை அடுத்த சேலையூரிலுள்ள மாடம்பாக்கத்தைச் சேர்ந்த மருந்து விற்பனை பிரதிநிதி வினோத்குமார் (36) கடந்த சில மாதங்களாக ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.அதில் ரூ.20 லட்சத்தை இழந்ததால் மனவிரக்தி கொண்ட அவர் உயிரை மாய்த்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. பல்வேறு லோன் ஆப்களில் அவர் கடன் பெற்று சூதாட்டத்தில் விளையாடி […]

Continue reading …

வடமாநில தொழிலாளர்களின் பேட்டி!

Comments Off on வடமாநில தொழிலாளர்களின் பேட்டி!

வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் நாங்கள் பாதுகாப்பாகவே உள்ளோம் என்று பேட்டி அளித்துள்ளனர். வடமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. பீகார் மாநில சட்டமன்றத்தில் இது குறித்த பிரச்சனை எழுப்பப்பட்டது. ஆனால் தமிழக டிஜேபி சைலேந்திரபாபு தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படவில்லை என்றும் அவர்கள் பாதுகாப்பாகத்தான் இருக்கிறார்கள் என்றும் தெரிவித்திருந்தார். “ஹோலி பண்டிகை கொண்டாட வட மாநிலத்திற்கு செல்லும் வட மாநில தொழிலாளர்கள் பேட்டியளித்தபோது ஹோலி பண்டிகை கொண்டாட நாங்கள் சொந்த ஊருக்கு செல்கிறோம். பண்டிகை முடித்துவிட்டு […]

Continue reading …