Home » Entries posted by Shankar U (Page 335)
Entries posted by Shankar

ஈரோடு கிழக்கு தேர்தல் குறித்து ஈபிஎஸ் கண்டனம்!

Comments Off on ஈரோடு கிழக்கு தேர்தல் குறித்து ஈபிஎஸ் கண்டனம்!

திமுகவுக்கு கண்டனம் தெரிவித்தோடு மட்டுமல்லாமல் ஈரோடு கிழக்கில் ஜனநாயக படுகொலையை அரங்கேற்றியுள்ளதாக ஈபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் அபார வெற்றி பெற்றுள்ளார். இவர் அதிமுக வேட்பாளரை விட சுமார் 60000 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் தவிர மற்ற 75 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். இந்நிலையில் திமுக வெற்றி குறித்து கருத்து கூறிய எடப்பாடி பழனிச்சாமி ஈரோடு கிழக்கு பார்முலா என புதிய ஜனநாயக படுகொலையை திமுக […]

Continue reading …

நாஞ்சில் சம்பத்தின் கருத்து!

Comments Off on நாஞ்சில் சம்பத்தின் கருத்து!

நாஞ்சில் சம்பத் ஈரோடு இடைத்தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியின் தோல்வி காரணமாக, அவரது எதிர்க் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் போட்டியிட்டது. அக்கட்சிக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்குமா என்ற சந்தேகம் இருந்தது. தேர்தல் ஆணையத்தில் போராடி அந்த சின்னத்தை பெற்றது. மேலும் ஓபிஎஸ் அணியை புறந்தள்ளிய எடப்பாடி பழனிச்சாமி அணி ஓபிஎஸ் மற்றும் பாஜக […]

Continue reading …

நொய்டாவில் காதல் ஜோடி மீது தாக்குதல்!

Comments Off on நொய்டாவில் காதல் ஜோடி மீது தாக்குதல்!

காதல் ஜோடி மீது தாக்குதல் நடத்திய இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலத்தில் நொய்டாவிலுள்ள ராகிணி பூங்காவில், நேற்று மாலையில், 20 வயதுடைய காதல் ஜோடி அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த சில இளைஞர்கள், காதல் ஜோடியுடன் தகராறு செய்து, அவர்களை தாக்கியுள்ளனர். இதுகுறித்த வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இத்தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பலரும் குரல் கொடுத்தனர். இந்நிலையில், செக்டர் 49 காவல் நிலையத்தைச் […]

Continue reading …

ரவுடியை கொன்ற சிறுவர்கள் கைது!

Comments Off on ரவுடியை கொன்ற சிறுவர்கள் கைது!

சிறுவர்கள் சீட்டு விளையாடும் போது ஏற்பட்ட தகராறில் ரவுடியை கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் உள்ள பழைய வண்ணாரப்பேட்டை, ஸ்டான்லி நகர் 5வது வீதியில் வசிக்கும் சண்முகம் (23) மீது காவல் நிலையத்தில் 9 வழக்குகள் உள்ளன. கடந்த 28ம் தேதி அவர் வண்ணாரப்பேட்டைக்குச் சென்றார். அங்கு, சிறுவர்கள் சிலர் ஹண்டிங் மைதானத்தில் அமர்ந்து சீட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களை நெருங்கிய சண்முகம், அவர்களுடன் தகராறு செய்துள்ளார். இதனால், சண்முகத்திற்கும், சிறுவர்களுக்கும் இடையே […]

Continue reading …

சிம்பு திரைப்பட டீசர் நாளை ரிலீஸ்!

Comments Off on சிம்பு திரைப்பட டீசர் நாளை ரிலீஸ்!

“பத்து தல” திரைப்படத்தின் டீசர் நாளை ரிலீசாகும் நிலையில் அத்திரைப்படத்தில் நடித்துள்ள சிம்புவின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். “பத்து தல” திரைப்படத்தில் சிம்பு, கவுதம் கார்த்திக் மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை “சில்லுனு ஒரு காதல்,” “நெடுஞ்சாலை” ஆகிய படங்களை இயக்கிய என்.கிருஷ்ணா இயக்கியுள்ளார். இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இப்படத்தில் பிரியா பவானி சங்கர், கலையரசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். “பத்து தல” திரைப்படம் கன்னட படமான “கன்னா” படத்தின் ரீமேக் ஆகும். ஏற்கனவே […]

Continue reading …

முதலமைச்சருக்கு திருமாவளவன் கோரிக்கை!

Comments Off on முதலமைச்சருக்கு திருமாவளவன் கோரிக்கை!

விடுதலை கட்சியின் தலைவர் திருமாவளவன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று பேட்டி அளித்துள்ளார். பாஜகவுக்கு எதிராக 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ஒரு பெரிய அணியை திரட்ட வேண்டும் என பல தலைவர்கள் முயற்சித்து வருகின்றனர். குறிப்பாக தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பல தேசிய தலைவரை சந்தித்து வருகிறார். அதேபோல் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் தேசியளவில் ஒரு அணியை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறார். நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் […]

Continue reading …

ஈரோடு தேர்தல் வினோதம்..!

Comments Off on ஈரோடு தேர்தல் வினோதம்..!

ஈரோடு இடைத்தேர்தலில் 7 சயேட்சை வேட்பாளர்களுக்கு ஒரு ஓட்டும், ஒரு வேட்பாளருக்கு ஒரு ஓட்டு கூட இல்லை என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. ஈரோடு இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில் இத்தேர்தல் ஐந்தாவது சுற்றில் முடிவில் ஏழு வேட்பாளர்கள் தலா ஒரு ஓட்டு மட்டுமே உள்ளார்கள் என்றும் 73வது வேட்பாளரான ராஜேந்திரன் என்பவர் ஒரு வாக்கு கூட பெறவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளன. ராஜேந்திரன் என்பவர் தனது ஓட்டை கூட அவருக்கு போடவில்லை என்பதும் அவரது […]

Continue reading …

ஒரு லட்சத்தை தாண்டிய வாக்குகளில் ஈ.வி.கே.எஸ். வெற்றி!

Comments Off on ஒரு லட்சத்தை தாண்டிய வாக்குகளில் ஈ.வி.கே.எஸ். வெற்றி!

ஒரு லட்சத்தை தாண்டிய வாக்குகளுடன் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 27ம் தேதி ஈரோடு இடைத்தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டன. ஆரம்பம் முதலே முன்னிலையில் இருந்த காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தற்போது வெற்றி பெற்றுள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு […]

Continue reading …

சூப்பர் ஸ்டாரின் திரைப்படத்தில் புதிய நடிகையா?

Comments Off on சூப்பர் ஸ்டாரின் திரைப்படத்தில் புதிய நடிகையா?

“லால் சலாம்“ என்ற திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கிறார். இத்திரைப்படத்தில் நடிகை ஜீவிதா ரஜினியின் தங்கையாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாக இருக்கும் திரைப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக ஐஸ்வர்யா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் படத்தில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் ஆகிய […]

Continue reading …

அடகு கடையில் மோடி செய்த சீரியல் நடிகை கைது!

Comments Off on அடகு கடையில் மோடி செய்த சீரியல் நடிகை கைது!

சீரியல் நடிகை ஒருவர் சென்னையில் பல நகை அடகுக்கடைகளில் போலி நகைகளை அடமானம் வைத்து ஏமாற்றியதால் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையிலுள்ள பெரம்பூரில் பட்டேல் ரோடு பகுதியில் அடகுக்கடை நடத்தி வருபவர் கண்ணையா லால். சமீபத்தில் இவரது கடைக்கு பெண் ஒருவர் நகை அடகு வைக்க வந்துள்ளார். தாலியிலுள்ள குண்டுகளை அடமானம் வைத்து ரூ.40 ஆயிரம் கேட்டுள்ளார். அதை சோதித்து பார்க்க கண்ணையா லால் முயன்றபோது தாலி நகையை உரசினால் சேதமடையும் என செண்டிமெண்டாக பேசியுள்ளார். இதனால் நகையை […]

Continue reading …