
சபாநாயகர் அப்பாவு தமிழக சட்டசபையில் பட்ஜெட் எப்போது தாக்கல் செய்யப்படும் என்பது குறித்து பேட்டியளித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் மத்திய பட்ஜெட் பிப்ரவரி ஒன்றாம் தேதி தாக்கல் செய்யப்பட்ட நிலையில் மார்ச் மாதம் தமிழகத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். நிதியமைச்சர் பட்ஜெட்டை தாக்கல் செய்வார். இந்நிலையில் 2023 & 24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மார்ச் 20ம் தேதி நிதியமைச்சர் தாக்கல் செய்வார் என்று சபாநாயகர் அப்பாவுக்கு அறிவித்துள்ளார். வரும் மார்ச் 20ம் தேதி காலை 10 மணிக்கு சட்டசபையில் […]
Continue reading …
கோவிலுக்கு சென்று திரும்பி கொண்டிருந்த கார் கண்டெய்னர் லாரி மீது மோதியதில் 5 பெண்கள் பலியான சம்பவம் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் நடந்துள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள மோர்பாளையம் அருகேயுள்ள வட்டூர் பகுதியைச் சேர்ந்த ரவி இவரின் மனைவி, கவிதா, சாந்தி கவிதாவின் தம்பியின் 4 வயது மகள் லக்சனா ஆகியோர் வீரப்பூரில் நடைபெற்ற திருவிழாவுக்குச் சென்றுவிட்டு, காரில் திருச்செங்கோடு திரும்பிக் கொண்டிருந்தனர். இந்தக் காரை ரவி ஓட்டி வந்தார். கார் பரமத்தி வேலூர் […]
Continue reading …
டிக்டாக் செயலிக்கு அமெரிக்காவில் உள்ள அனைத்து அரசு அலுவலங்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான செல்போன்களிலும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதே நேரத்தில் பொதுமக்கள் டிக் டாக் செயலியை பயன்படுத்த எவ்வித தடையும் கிடையாது. இந்நிலையில் அமெரிக்காவை அடுத்து கனடாவில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான செல்போன் உள்ளிட்ட சாதனங்களில் டிக்டாக் செயலியை பயன்படுத்த தடை என அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காக அரசு மற்றும் அரசுக்கு சொந்தமான […]
Continue reading …
திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாராவுக்கு இது கெட்ட நேரம் என்று ஒட்டுமொத்த திரையுலகே பேசி வருகிறார்களாம். “கனெக்ட்” திரைப்படம் தோல்வியால் நயன்தாரா மார்க்கெட் எதிர்பாராத அளவிற்கு இறங்கியது. பின்னர் விக்னேஷ் சிவன் அஜீத் 62 படத்திலிருந்து தூக்கியடிக்கப்பட்டார். இதற்கு வக்காலத்து வாங்கிய நயன் ஏமாற்றமடைந்ததுதான் மிச்சம். இப்படி தொடர் சிக்கலுடன் கூடுதல் பிரச்சனை ஒன்று வந்துள்ளது. என்னவென்றால் முன்னணி தயாரிப்பாளரின் வெற்றிப்படத்தில் நடித்த நயன்தாரா அவரது தயாரிப்பிலே அடுத்தடுத்த இரண்டு படங்களில் கமிட் […]
Continue reading …
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் மற்றும் நடிகருமான கமலஹாசன் திமுகவோடு கூட்டணி அமைக்க போறீர்களா என்ற கேள்விக்கு டுவிஸ்ட்டான பதிலை அளித்துள்ளார். கடந்த நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களிலும், உள்ளாட்சி தேர்தல்களிலும் மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக கமலஹாசன் போட்டியிட்டார். ஆனால் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. தற்போது ஈரோடு கிழக்கில் நடைபெற்ற இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்கவில்லை. மேலும் கமல்ஹாசன் தனது கட்சி ஆதரவை காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு வழங்கினார். இதனால் திமுக கூட்டணியில் மக்கள் […]
Continue reading …
கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடியை பிடிக்க முயன்ற போலீசை ரவுடி அரிவாளால் தாக்கியதால் போலீசார் சுட்டுபிடித்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்கள் முன்னதாக மதுரை மாட்டுத்தாவணி பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி டோரா பாலா உத்தங்குடி பகுதியில் உள்ள முட்புதரில் கொன்று சடலமாக வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. டோரா பாலாவை கொன்றது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அம்பலக்காரன்பட்டியை சேர்ந்த வினோத் மற்றும் அவனது […]
Continue reading …
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்ய அதிபர் புதின் விரைவில் கொல்லப்படுவான் என்று பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரஷ்ய அதிபர் புதின் அவரது நெருங்கிய வட்டாரங்களால் கொல்லப்படுவார் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஓராண்டுக்கு மேலாக உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து உள்ளது. உக்ரைன் நாட்டின் பல பகுதிகளை தங்களது கட்டுப்பாட்டிற்குள் ரஷ்யா கொண்டு வந்துள்ளது. உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல நாடுகள் உதவி செய்த […]
Continue reading …
சென்னை மாநகராட்சி 139 அரசு பள்ளிகளை எடுத்து நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள சோழிங்கநல்லூர் மாதவரம் திருவெற்றியூர் மணலி அம்பத்தூர் வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 139 அரசு பள்ளிகளை எடுத்து நடத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இந்த பள்ளிகளில் 800 வகுப்பறைகள் கொண்ட நவீன வசதிகள் செய்து தரப்படும் என்றும் இதன் மூலம் 300 ஆசிரியர்களுக்கு புதிதாக வேலை கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு […]
Continue reading …
பணியாளர்களின் வருங்கால வைப்புநிதி மூலம் அதிக ஓய்வூதியம் பெற விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. வருங்கால வைப்புநிதி அமைப்பு(EPFO) ஊழியர்கள் பெறும் மாத சம்பளத்தில் இருந்து 12 சதவீதம் பிடித்தம் செய்து, அதற்கு நிகரான தொகையை பணியாற்றும் நிறுவனத்திடமிருந்தும் பெற்று வருங்கால வைப்புநிதி கணக்கில் வரவு செய்கிறது. இவ்வாறு வரவு செய்யப்படும் தொகையில் 8.33 சதவீதம் ஓய்வூதிய திட்டத்திற்கும், 3.7 சதவீதம் வைப்பு நிதியாகவும், 0.50 சதவீதம் காப்பீட்டிற்கும் செலுத்தப்படுகிறது. இந்த வருங்கால வைப்பு நிதி […]
Continue reading …