
கடந்த 1901ம் ஆண்டுக்கு பிறகு இந்த ஆண்டு முன்கூட்டியே கோடை வெப்பம் தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் இவ்வாண்டு கோடை காலம் முன்கூட்டியே தொடங்கும் என்றும் இவ்வாண்டு மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை கடுமையான வெப்ப அலை இருக்க வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நூறு வருடங்களுக்கு பின்னால் பிப்ரவரி மாதத்தில் அதிகபட்ச வெப்பம் பதிவாகியுள்ளதையடுத்து இவ்வாண்டு கோடை கொடூரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. […]
Continue reading …
அமைச்சர் செந்தில் பாலாஜி சூரிய மின்சாரத்தை உற்பத்தி செய்யும் மின்சார வாரியம் தொடங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். சூரிய ஒளியின் மூலம் மின்சாரம் தயாரிக்கும் முறை குறித்த விழிப்புணர்வு உலகம் முழுதும் நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் பல மாநிலங்களில் சூரிய மின்சார தயாரிப்புக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருவாரூரில் சூரிய மின் உற்பத்தி பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் தொடங்கி வைப்பார் என்றும் அதில் 6000 மெகா வாட் சூரிய மின்சாரத்தை மின்சார வாரியம் சொந்தமாக உற்பத்தி […]
Continue reading …
மனைவி சிக்கன் சமைத்து தருவதற்கு மறுத்ததால் வீட்டையே கொளுத்தியுள்ளார் கணவர். மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த உஜ்ஜையின் அருகே மது போதையில் வீட்டுக்கு வந்த கணவர் தனக்கு சிக்கன் குழம்பு வைக்க வேண்டும் என மனைவியிடம் கேட்டதற்கு சிக்கன் வைக்க முடியாது ஏற்கனவே பருப்பு சமைத்து விட்டதால் அதை சாப்பிடும் படி மனைவி கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணவர் மது போதையில் மனைவியை தாக்கி வீட்டை விட்டு வெளியேற்றி வீட்டுக்கு தீ வைத்துள்ளார். இதன் காரணமாக வீட்டின் […]
Continue reading …
நடிகர் சூர்யாவின் அடுத்த திரைப்படமான “சூர்யா 42” நடிகர் விஜய் திரைப்படமான ‘லியோ’ வியாபாரத்தை முறியடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விஜய் நடித்து வரும் “லியோ” திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படம் இதுவரை ரூபாய் 400 கோடி பிசினஸ் ஆகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. சூர்யா நடித்து வரும் “சூர்யா 42” படத்தின் வியாபாரம் 500 கோடியை தாண்டி விட்டதாக கூறப்படுவது நம்ப முடியாத தகவலாக உள்ளது. கோலிவுட் திரையுலகை பொருத்தவரை விஜய்க்கு தான் அதிக […]
Continue reading …
கேம்பிரிட் பல்கலைக்கழகத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உரையாற்ற உள்ளார். இந்திய தேசிய ஒற்றுமை பயணம் நடத்திய ராகுல் காந்தி அந்த பயணம் முடியும் வரை தாடியுடன் இருந்தார். இந்நிலையில் தற்போது அவர் தாடியை டிரீம் செய்து புதிய அட்டகாசமான லுக்கில் தோற்றமளிக்கிறார். இந்த புதிய லுக்குடன் அவர் தான் படித்த இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள கேம்பிரிட் பல்கலைக்கழகத்தில் உரையாற்றுகிறார். இதற்காக அவர் லண்டன் சென்றுள்ளதாகவும் 21ம் நூற்றாண்டில் கேட்க கற்றுக் கொள்ளுங்கள் என்ற தலைப்பில் […]
Continue reading …
மார்ச் 4ம் தேதி முதல் மகளிர் ஐபிஎல் போட்டிகள் தொடங்கவுள்ளது. தொடக்க விழாவில் பிரபல பாலிவுட் நடிகைகள் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வாண்டு முதல் மகளிர் ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ளது. 5 அணிகள் இதில் கலந்து கொள்ள இருப்பதாகவும் இந்த அணிகளுக்கான வீராங்கனைகள் சமீபத்தில் ஏலம் எடுக்கப்பட்டனர். மகளிர் ஐபிஎல் போட்டிகள் மார்ச் 4ம் தேதி முதல் தொடங்கவிருப்பது என்பதும் முதல் போட்டியில் குஜராத் மற்றும் மும்பை அணிகள் மோதவுள்ளன. போட்டியை 7:30 மணிக்கு […]
Continue reading …
வானிலை மையம் கிழக்கு திசையில் காற்றின் வேகமாறுபாட்டால், தென்மாவட்டங்களில். இன்று மற்றும் மார்ச் 4ம் தேதி மிதமான மழை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. சென்னை வானிலை மையம் வரும் மார்ச் 2, 3,5 ஆகிய தேதிகளில், தைழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும், என்றும், கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடின் காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மார்ச் 2,3, 5 ஆகிய பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. சென்னையில், அடுத்த […]
Continue reading …
மணீஸ் சிசோடியாவை டில்லி யூனியனில், புதிய மதுபான கொள்கை முறைகேடு புகாரின் பேரில் சிபிஐ கைது செய்துள்ளது. இதையடுத்து மணீஸ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் இருவரும் பதவியை ராஜினாமா செய்தனர். அவர்களின் துறைகள் வேறு அமைச்சர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நேற்று முன்தினம் மணீஸ் சிசோடியா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு 5 நாள் சிபிஐ காவல் அளிக்கப்பட்டது. மணீஷ் சிசோடியா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் இன்று ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கில் […]
Continue reading …
வானில் வியாழனும், வெள்ளியும் ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கும் நிகழ்வு இன்று நடைபெறுகிறது. இதை ஆங்கிலத்தில் ‘கன்ஜக்ஷன்’ என்று அழைக்கின்றனர் அதாவது கன்ஜக்ஷன் என்றால் இணைதல் என்று பொருள். ஒரு கோள், நிலவு, நட்சத்திரம் அல்லது பிற கோளுடன் அருகில் தோன்றும் நிகழ்வு என்பது கன்ஜக்ஷன் எனப்படும். சூரிய குடும்ப கோள்களில் மிகப்பெரியதான வியாழன் (ஜூப்பிடர்), பிரகாசமானதான வெள்ளி (வீனஸ்) ஆகிய கோள்கள் இணைந்து ஒரு அற்புதமான காட்சியை வானத்தில் நிகழ்விக்கும் என நாசா தெரிவிக்கிறது. “இதுகுறித்து கடந்த […]
Continue reading …
சைக்கிளில் சென்று கொண்டிருந்த மாணவர்களின் மேல் கார் ஒன்று கட்டுப்பாடில்லாமல் மோதியதில் மாணவர்கள் துடிதுடித்து இறந்த சம்பவம் வாணியம்பாடியில் நடந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள வளையாம்பட்டு பகுதியை சேர்ந்த சிறுவர், சிறுமியர் பலர் கிரி சமுத்திரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். தினம்தோறும் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் சென்னை & பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள சர்வீஸ் சாலை வழியாக பள்ளிக்கு செல்வது வழக்கம். அவ்வாறாக வளையாம்பட்டு எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்த […]
Continue reading …