Home » Entries posted by Shankar U (Page 339)
Entries posted by Shankar

தனது படம் ரலீசாகும் முன்பே உயிர்நீத்த இயக்குனர்!

Comments Off on தனது படம் ரலீசாகும் முன்பே உயிர்நீத்த இயக்குனர்!

இளம் இயக்குனர் மனு ஜேம்ஸ் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இயக்குனராக முதல் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். மலையாளம், கன்னடம் மற்றும் பாலிவுட் படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய மனு ஜேம்ஸ், “நான்சி ராணி” என்ற படத்தை மலையாளத்தில் இயக்கி முடித்துள்ளார். சமீபத்தில் ஷூட்டிங் முடிந்த இந்த படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் நடந்து வருகின்றன. மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட அவர் கேரளாவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அவர் சிகிச்சைப் […]

Continue reading …

ஓரிரு பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

Comments Off on ஓரிரு பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலோரப் பகுதிகளிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவுக்கூடும். நாளை மற்றும் நாளை மறுநாள்(01.-03.-23) தென் தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் ஆகிய பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது. அதேபோல், மார்ச் 2,3 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், ஆகிய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் […]

Continue reading …

பாஜக எம்.எல்.ஏ.வின் கருத்து!

Comments Off on பாஜக எம்.எல்.ஏ.வின் கருத்து!

பாஜக எம்எல்ஏ சரஸ்வதி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் அது பணநாயகம் வெற்றி பெற்றதாகத்தான் அர்த்தம் என்று கூறியுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியிலுள்ள சிஎஸ்ஐ பள்ளியில் இன்று மொடக்குறிச்சி எம்எல்ஏ சரஸ்வதி வாக்களித்தார். அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது “ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் பணநாயகம் வென்றதாகவே கருதப்படும். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முறையாக நடத்தப்படவில்லை. பணம் அளிக்காமல் வாக்களிப்பதற்கான மனநிலைக்கு மக்கள் மாற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். […]

Continue reading …

மோடியை சந்திக்கும் உதயநிதி!

Comments Off on மோடியை சந்திக்கும் உதயநிதி!

நாளை இளைஞர் நலத்துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்திக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. ஓரிரண்டு நாட்கள் பயணமாக டில்லி சென்றுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை பிரதமர் மோடியை சந்திக்க இருப்பதாகவும் இந்த சந்திப்பின்போது விளையாட்டு துறையை மேம்பாடுவதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்துவதாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின் முதல்முறையாக டில்லி சென்றுள்ளார். பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் […]

Continue reading …

ஓபிஎஸ்ஸின் அதிரடி பேச்சால் பரபரப்பு!

Comments Off on ஓபிஎஸ்ஸின் அதிரடி பேச்சால் பரபரப்பு!

ஓபிஎஸ் கட்சியின் நலனுக்காக பொறுமை காத்தோம், இனி பல ரகசியங்களை மக்களை சந்திக்கும் போது சொல்லப் போகிறோம் என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக பொது குழு குறித்த வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியான நிலையில் அதில் பொதுக்குழு செல்லும் என்றும் அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டது செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர். அதிமுக முழுமையாக எடப்பாடி பழனிச்சாமி பக்கம் சட்டபூர்வமாக அதிமுக சென்றுவிட்டது என்பது உறுதியாகி […]

Continue reading …

உலக வங்கியின் தலைவராகும் இந்தியர்!

Comments Off on உலக வங்கியின் தலைவராகும் இந்தியர்!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உலக வங்கியின் தலைவராக பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போதைய உலக வங்கியின் தலைவராக இருக்கும் டேவிட் என்பவர் வரும் ஜூன் மாதம் பதவி விலக இருப்பதாக கூறப்பட்டிருந்தது. புதிய உலக வங்கியின் தலைவராக இந்தியாவை சேர்ந்த அஜய் பங்கா என்பவரை அமெரிக்க அதிபர் பரிந்துரை செய்திருப்பதாகவும் அவரது நியமனம் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. மாஸ்டர் கார்டு தலைவர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் இருந்த அஜய் […]

Continue reading …

பிடிபட்டது மக்னா யானை!

Comments Off on பிடிபட்டது மக்னா யானை!

கோவையில் விவசாய பகுதிகளில் ஆட்டம் காட்டி வந்த ஒற்றை காட்டு யானை பிடிபட்ட நிலையில் அதை வனப்பகுதியில் விடுவதில் பிரச்சினை எழுந்துள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் வனப்பகுதிகள் என்பதால் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. சிலசமயம் யானைகள் கூட்டமாக ஊருக்குள் புகுந்து விடுவதும், பின்னர் அவை காட்டுக்குள் விரட்டியடிக்கப்படும் சம்பவங்களும் தொடர்ந்து வருகின்றன. சமீபத்தில் மக்னா யானை ஒன்று விவசாய பகுதிகளில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வந்தது. அதை காட்டுக்குள் விரட்ட […]

Continue reading …

“பதான்” பட டிக்கெட் விலை குறைப்பு!

Comments Off on “பதான்” பட டிக்கெட் விலை குறைப்பு!

நடிகர் ஷாரூக்கான், தீபிகா படுகோன், ஜான் அபிரகாம் உட்பட பலர் நடித்து வெளியான “பதான்” திரைப்படத்தின் வசூல் 1000 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது. இதனால் மகிழ்ச்சியில் தயாரிப்பு நிறுவனம் பட டிக்கெட்டை குறைத்துள்ளது. 4 ஆண்டுகள் இடைவெளியில் ஷாரூக்கான் நடித்துள்ள படம் என்பதால் இதன் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல மொழிகளில் வெளியான பதான் தொடர் வசூல் சாதனையை நிகழ்த்தி வருகிறது. சமீபத்தில் “பதான்” திரைப்படம் அதிகாரப்பூர்வமாக […]

Continue reading …

இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்!

Comments Off on இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்!

துருக்கி மற்றும் சிரியாவை தொடர்ந்து தற்போது இந்தோனேஷியாவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமியில் உள்ள அனைத்து நாடுகளும் பல கண்ட திட்டுகள் மீது அமைந்துள்ளன. இந்த கண்டத்திட்டுகள் (புவி தகடுகள்) மெல்ல நகர்ந்து கொண்டே இருக்கின்றன. இரு கண்ட திட்டுகள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ளும்போது நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரிடர்கள் உருவாகின்றது. சமீபமாக துருக்கி, சிரியா பகுதியில் இவ்வாறாக கண்டத்திட்டுகள் நகர்ந்ததால் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலர் உயிரிழந்தனர். நேற்று ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தான் பகுதியில் தொடர்ந்து 5 முறை […]

Continue reading …

போலி மருத்துவர் கைது!

Comments Off on போலி மருத்துவர் கைது!

10 ஆண்டுகளாக 10 ஆம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். தர்மபுரி மாவட்டம் நாயக்கன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த கண்ணன் 10வது வகுப்பு மட்டுமே படித்த முடித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக மருத்துவம் பார்த்து வந்துள்ளார். போலி மருத்துவம் பார்ப்பதற்கு மக்களிடம் பணமும் வசூலித்து வந்துள்ளதாகக் புகார் எழுந்துள்ளது. இதையடுத்து, அங்கு சென்று போலீசார் சோதனை நடத்தினர். அங்கு, அவரிடம் இருந்த ஊசிகள் மற்றும் மருந்து மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனர். […]

Continue reading …