திமுக எம் எல் ஏ ஜெ அன்பழகனின் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடம்! கொரோனாவால் பாதிக்கப்பட்டு 8 நாட்களாக சிகிச்சைப் பெற்று வரும் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ அன்பழகனின் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமான நிலைக்கு சென்றுள்ளது. திமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரான ஜெ அன்பழகன், ஜுன் 2 ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அதற்கான மாத்திரைகள் எடுத்துக் […]
Continue reading …நீட் தேர்வில் உள் இட ஒதுக்கீடா? தமிழக அரசு ஆலோசனை! நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக் உள் இட ஒதுக்கீடு அளிப்பது சம்மந்தமாக தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது. நீட் நுழைவுத் தேர்வில் ஆண்டுக்கு ஆண்டு அரசுப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் மீண்டும் நீட் தேர்வுகளை ரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது. இதற்குக் காரணம் படைத்த தனியாக நீட் கோச்சிங் செண்டர்களுக்கு சென்று […]
Continue reading …சீனாவில் ஆகஸ்ட் மாதமே கொரோனா வைரஸ் இருக்கலாம் என ஹார்வார்டு மருத்துவக் கல்லூரி ஆய்வின் மூலம் தெரிவிக்கிறது. கொரோனா வைரஸ் பரவியதற்கு முக்கியமான இடமாக கூறப்படும் உகான் நகரில் உள்ள மருத்துவமனைகளின் கார் பார்க்கிங்கிள் சென்ற ஆகஸ்ட் மாதமே வைரஸ் இருப்பதை சாட்டிலைட் படங்கள் காட்டுகிறது. அதே சமயத்தில் இருமல், வயிற்றுப்போக்கு போன்றவற்றை பற்றி இணையத்தில் அதிகமாக தேடல்கள் நடத்தப்பட்டன. இதனால், இந்த ஆய்வு நடைபெற்றது. மேலும், இது அதிகரித்து வந்த நிலையில் டிசம்பர் மாதம் கொரோனா […]
Continue reading …ரஜினி மக்கள் மன்றம் மூலம் வெளிவந்த அறிக்கையில் குறிப்பிட்டது: கொரோனா வைரஸ் தொற்றால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் ஏழை, எளிய மக்களுக்கு இடைவிடாமல் தங்களது உதவிகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன். அடிபட்ட உடனேயே அதிக வலி தெரியாது. இப்போது நமக்கு பட்டிருக்கும் கொரோனா எனும் அடி சாதாரண அடி அல்ல. வல்லரசு நாடுகளையே கதிகலங்க வைத்திருக்கும் பிசாசுத் தனமான அசுர அடி. இப்போதைக்கு […]
Continue reading …உத்திர பிரதேச மாநிலத்திலுள்ள அயோத்தி ராமர் கோவில் கட்டுமான வேலைகள் நாளை சிறப்பு பூஜைகளுடன் தொடங்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு பல சர்ச்சைகள் ஏற்பட்டு வந்தது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டது. பின்பு ராமஜென்மபூமி தீர்த்தத்தில்ஷேத்ர டிரஸ்ட் என்ற பெயரில், 15 உறுப்பினர்கள் கொண்ட அறக்கட்டளை அமைக்கப்பட்டது. அந்த இடத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கு மார்ச் மாதம் பூமி பூஜை நடத்தப்பட்டது. ஆனால், […]
Continue reading …புதிதாக நியமிக்கப்பட்ட 1550 மருத்துவர்கள் –தமிழக அதிரடி உத்தரவு! சென்னையில் பணியாற்ற புதிதாக நியமிக்கப்பட்ட மருத்துவர்கள் உடனடியாக பணியில் சேரவேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தின் தலைநகரான சென்னையில் நேற்றையை நாள் வரையிலான பாதிப்பு எண்ணிக்கை 23,000 ஐ தாண்டியுள்ளது. மேலும் தினசரி 1000 பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் அங்கு இன்னும் அதிக நோயாளிகள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட கூடும். இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பும் சூழ்நிலை உருவாகலாம். […]
Continue reading …சென்னையில் 6000 தெருக்களில் முழுக்கவனம்- அமைச்சர் அறிவிப்பு! சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள 6000 தெருக்களில் முழுக்கவனம் செலுத்தப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உச்சத்தை நோக்கி சென்றுகொண்டே உள்ளது. அதிலும் தலைநகர் சென்னையில் தினசரி 1000 க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். இதையடுத்து சென்னையில் தற்போது தமிழக அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. சென்னையின் ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒரு அமைச்சர் நியமிக்கப்பட்டு தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு […]
Continue reading …உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவில் அதிகமாக பரவி வருகிறது. இந்த வைரஸால் இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலம் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை அந்மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட எண்ணிக்கை 80 ஆயிரத்துக்கும் மேல் மற்றும் பலியானோர் எண்ணிக்கை இரண்டு ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது. அதில் சுமார் மூவாயிரம் காவல்துறை அதிகாரிகளுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது மற்றும் 30 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தெரிவித்துள்ளார். கொரோனாவை […]
Continue reading …மதுரையில் உள்ள ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரவுடியை ஒரு மர்ம கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர். இதனால் மதுரையில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. கொலை உள்பட பல குற்றத்தை செய்து பல வழக்குகளில் தொடர்பில் இருந்தவர் முருகன். இவர் இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற விபத்தில் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை நான்கு பேர் கொண்ட ஒரு மர்ம கும்பல் ஆயுதங்களுடன் மருத்துவமனைக்கு வந்து […]
Continue reading …இந்தியாவில் செப்டம்பரில் கொரோனா முடிவுக்கு வரும் – ஆய்வு முடிவுகள்! இந்தியாவில் தற்போது கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் செப்டம்பர் இறுதிக்குள் முடிவுக்கு வரும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் கொரோனா பரவும் வேகம் அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. நேற்று மட்டும் 10,864 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 2.5 லட்சத்தைத் தொட்டு. உலக அளவில் கொரோனா பாதிப்புகளில் 7ம் இடத்தில் இருந்த இந்தியா தற்போது இத்தாலி மற்றும் […]
Continue reading …