
”மண்ணில் ஊட்டசத்து இருந்தால்தான், அங்கு வாழும் மக்களும் ஊட்டசத்துமிக்க, துடிப்பான மக்களாக இருப்பார்கள்” என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்தார். உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாண்புமிகு மத்திய நீர்சக்தித் துறை அமைச்சர் திரு.கஜேந்திர சிங் ஷெகாவத் அவர்களுடன் சத்குரு ’ஆன்லைன்’ வழியாக கலந்துரையாடினார். அதில் சுற்றுச்சூழல், மண்வளம், தண்ணீர் பற்றாக்குறை, கழிவு மேலாண்மை, உணவில் ஊட்டச்சத்தை உறுதி செய்தல், காவிரி கூக்குரல் என பல்வேறு தலைப்புகளில் இருவரும் கலந்துரையாடினர். சுற்றுச்சூழல் பற்றிய அக்கறை மற்றும் […]
Continue reading …
இந்தியாவில் செப்டம்பரில் கொரோனா முடிவுக்கு வரும் – ஆய்வு முடிவுகள்! இந்தியாவில் தற்போது கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் செப்டம்பர் இறுதிக்குள் முடிவுக்கு வரும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் கொரோனா பரவும் வேகம் அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. நேற்று மட்டும் 10,864 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 2.5 லட்சத்தைத் தொட்டு. உலக அளவில் கொரோனா பாதிப்புகளில் 7ம் இடத்தில் இருந்த இந்தியா தற்போது இத்தாலி மற்றும் […]
Continue reading …
கொரோனாவில் இருந்து தப்பிக்க மூடநம்பிக்கை சடங்கு – நாக்கை இழந்த சிறுமி! உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கொரோனாவில் இருந்து மக்களைப் பாதுகாக்க என்று சொல்லி சிறுமி ஒருவரின் நாக்கைத் துண்டித்து காணிக்கையாக்கியுள்ளனர். உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள புண்டேல்கண்ட் என்ற மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள மக்கள் கொரோனா பாதிப்பை போக்குவதற்காக கொடூரமான மூட நம்பிக்கை ஒன்றை செயல்படுத்தியுள்ளனர். அங்குள்ள சிவ்ஜி கோயிலில் அதே பகுதியைச் சேர்ந்த 8 ஆம் வகுப்பு படிக்கும் […]
Continue reading …
கேரளாவில் பசிக்காக உணவை தேடி வந்த யானைக்கு அன்னாசிப்பழத்தில் வெடிகுண்டு வைத்து கொடுத்தில் யானை இறந்துவிட்டது. இந்த சம்பவத்தில் இருந்து மக்கள் மீள்வதற்குள் இமாச்சலபிரதேசத்தில் ஒரு பசுவிற்கு உணவில் வெடிகுண்டு வைத்து கொடுத்துள்ளனர். இந்த கொடூர சம்பவத்துக்கு சமூக வளைத்தளத்தில் கொந்தளிக்கும் நெட்டிசன்கள். இமாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பிலாஸ்பூர் மாவட்டத்தில் ஜன்துட்டா பகுதியில் கோதுமை மாவில் வெடிகுண்டை வைத்து உருட்டி கொடுத்ததில் பசுவின் வாய் வெடித்து சிதைந்தது. பக்கத்துக்கு வீட்டுகாரரின் பயிரில் பசு மேய்ந்ததால் இதனை செய்தனர் […]
Continue reading …
காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் தீவரவாதிகளும் நடைபெற்ற மோதலில் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். காஷ்மீரில் உள்ள சோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படை வீரர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து சிஆர்பிஎப், ராஷ்டிரிய ரைபிள்ஸ், சிறப்பு அதிரடி வீரர்கள் ஒன்றிணைந்த தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இதனால், ரேபன் பகுதியில் பாதுகாப்பு படை வீரர்களுக்கும் மற்றும் தீவிரவாதிகளுடன் நடந்த தீவிரமான மோதலில் மூன்று தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். மேலும், அப்பகுதியில் தொடர்ந்து மோதல் நடைபெற்று வருகிறது.
Continue reading …
ஸ்வதேஸ் திட்டம் – வெளிநாடுகளில் வேலை இழந்தவர்களுக்கு மத்திய அரசு வாய்ப்பு! கொரோனா ஊரடங்கால் வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகளை இழந்தவர்களுக்கு மத்திய அரசு ஸ்வதேஸ் என்ற திட்டத்தை உருவாக்கியுள்ளது. கொரோனா வைரஸ் கோடிக்கணக்கானவர்கள் உலகம் தங்கள் வேலைகளை இழந்துள்ளனர். இதனால் வெளிநாடுகளில் தங்கி இருந்தவர்கள் தாய்நாடுகளுக்கு திரும்பி வருகின்றனர். அந்தவகையில் வெளிநாடுகளில் வேலைப் பார்த்து வந்த இந்தியர் பலரும் தங்கள் வேலைகளை இழந்து தாயகம் திரும்பியுள்ளனர். இதுவரை கிட்டதட்ட அரபு நாடுகளில் இருந்து மட்டும் 80,000 பேர் […]
Continue reading …
பிரதமர் ஏழை மக்களின் நல வாழ்வு திட்டத்தின் மூலம் இதுவரை 42 கோடி ஏழை மக்களுக்கு 53,248 கோடி வழங்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. நேற்று வரையில் இந்த திட்டத்தின் மூலம் பல பிரிவினருக்கு கொடுக்கப்பட்டுள்ள நிதிகளை பட்டியலிட்ட நிதியமைச்சகம் 8.19 கோடி விவசாயிகளுக்கு முதல் கட்டமாக 16,394 கோடி கொடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. ஏழைப்பெண்களின் வங்கி கணக்கில் ஜன்தன் திட்டத்தின் மூலம் இரண்டாவது கட்டமாக ரூபாய். 20,344 கோடி செலுத்தப்பட்டுள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் முதியவர்கள், […]
Continue reading …
தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம்/ மண்டல சிறப்பு வானிலை மையம்/ இந்திய வானிலைத் துறையின் புயல் எச்சரிக்கைப் பிரிவு ஆகியன பின்வரும் தகவல்களை அளித்துள்ளன: கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் நிலவும் “நிசர்கா” புயல், கடந்த 6 மணிநேரத்தில் மணிக்கு 13 கிலோமீட்டர் வேகத்தில் வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்துள்ளது. ஜூன் 3, 2020, இன்று காலை இந்திய நேரப்படி, 08-30 மணி நிலவரப்படி, கிழக்கு மத்திய அரபிக்கடலில் 17.6°N அட்சரேகை மற்றும் 72.3°E தீர்க்கரேகை அருகே, அலிபாக்கிலிருந்து ( மகாராஷ்டிரா) தெற்கு […]
Continue reading …
மே 7-ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் உள்ள எல்.பி.ஜி நிறுவனத்தின் ஆலையில் ஏற்பட்ட விஷவாயு விபத்தால் உயிரிழந்தவர்களுக்கு அந்த நிறுவனம் தான் பொறுப்பேற்க வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு விதித்தது. அந்த விஷவாயு விபத்தில் 11 பேர் பலியாகியுள்ளனர் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் உடல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தை பற்றி விசாரணை நடத்திய பசுமை தீர்ப்பாயம் கடந்த 8ஆம் தேதி 50 கோடி ரூபாய் அபராதம் விதித்தது. பின்பு இதனை ரத்து செய்ய […]
Continue reading …
சென்னை, ஜூன் 3 ஐரோப்பாவின் ஸ்காட்லாந்து நாட்டில் சொகுசுக் கப்பலில் பணியாற்றி வந்த தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த 5 பேர் உட்பட மொத்தம் 48 இந்தியர்கள் வேலைகளை இழந்து தவித்து வருகின்றனர். தங்களை தாயகத்திற்கு அழைத்துச் செல்லும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு பல முறை கோரிக்கை விடுத்தும், அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படாதது மிகவும் ஏமாற்றமளிக்கிறது என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அறிக்கை விடுத்துள்ளார். ஸ்காட்லாந்துக்கும் லண்டனுக்கும் இடையில் சுற்றுலா பயணிகளை […]
Continue reading …