Home » Archives by category » சென்னை (Page 13)

யாருக்கெல்லாம் நிவாரணத்தொகை ரூ.6000?

Comments Off on யாருக்கெல்லாம் நிவாரணத்தொகை ரூ.6000?

சமீபத்தில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்கள் பெரும் சேதத்திற்கு தள்ளப்பட்டது. சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6000 நிவாரணம் வழங்குவது தொடர்பாக அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, மாவட்டத்தில தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் வட்டங்களில் வசிக்கும் அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்படும். திருவள்ளூர் மாவட்டத்தில் 6 வட்டங்களில் அதாவது பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆவடி, பூந்தமல்லி, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் ஆகிய வட்டங்களுக்கு நிவாரணம் வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயலால் 2 நாட்களுக்கும் மேலாக […]

Continue reading …

விஷ்ணு விஷால் நிவாரண நிதியுதவி!

Comments Off on விஷ்ணு விஷால் நிவாரண நிதியுதவி!

நடிகர் விஷ்ணு விஷால் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து ரூ.10 லட்சம் நிவாரண நிதியுதவி வழங்கினார். சென்னை முழுவதும்மிக்ஜாம் புயல் தாக்குதல் மற்றும் அதிக கனமழையால் வெள்ளம் சூழ்ந்தது. இதில் மக்கள் பெரும் பாதிப்படைந்தனர். இவர்களுக்கு தமிழக அரசுடன் இணைந்து தன்னார்வலர்களும், சினிமாத்துறையினரும், தொழில் நிறுவனங்களும் நிவாரண உதவிகள் செய்து வருகின்றனர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து நடிகர் விஷ்ணு விஷால் ரூ.10 லட்சம் நிவாரண நிதியுதவி வழங்கினார். இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “மிக்ஜாம் புயல் […]

Continue reading …

வெள்ள பாதிப்பு குறித்து மத்திய குழு தகவல்!

Comments Off on வெள்ள பாதிப்பு குறித்து மத்திய குழு தகவல்!

மத்திய குழு வெள்ள பாதிப்பு குறித்து விரைவில் அறிக்கை அனுப்பப்படும் என தமிழகத்திற்கு தெரிவித்துள்ளது. மத்திய குழு சமீபத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக கடும் சேதம் குறித்து கணக்கிட சென்னைக்கு வருகை தந்தது. பின்னர் செய்தியாளர்களிடம், “2015ம் ஆண்டுக்கு பிறகு தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை சிறப்பான முறையில் செய்துள்ளது. மாநில அரசு எடுக்கும் முயற்சியில் நாங்கள் மிகவும் திருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறோம். சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் குறித்து நன்றாக அறிந்திருக்கிறோம். பாதிப்புகளிலிருந்து மக்கள் மீள […]

Continue reading …

வெள்ள பாதிப்புக்குள்ளான வல்லுனர்கள் கருத்து!

Comments Off on வெள்ள பாதிப்புக்குள்ளான வல்லுனர்கள் கருத்து!

வல்லுனர்கள் சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ டிரோன்களை பயன்படுத்தி இருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர், குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் கடந்தாண்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பனிச்சரிவு ஆகியவற்றில் டிரோன்கள் பயன்படுத்தப்பட்டன. மனிதர்களால் செல்ல முடியாத பகுதிக்கு டிரோன்கள் மூலம் அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன. அதேபோல் சென்னையில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தின் போது டிரோன்களை பயன்படுத்தி பொதுமக்களுக்கு தண்ணீர் உணவு போன்ற பொருட்களை அளித்திருக்கலாம். ஆனால், தமிழக அரசு அதை ஏன் செய்யவில்லை […]

Continue reading …

சரணாலயத்திலுள்ள நாய்கள் குறித்து- திரிஷா கவலை

Comments Off on சரணாலயத்திலுள்ள நாய்கள் குறித்து- திரிஷா கவலை

நடிகை திரிஷா மிக்ஜாம் புயலால் தங்கள் சரணாலயத்திலுள்ள நாய்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். ஒட்டுமொத்த சென்னையும் மிக்ஜாம் புயலால் பாதிப்பு மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய தேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மிக்ஜாம் புயலால் தங்கள் சரணாலயத்தில் உள்ள நாய்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக நடிகை திரிஷா கூறியுள்ளார். மேலும், பாதிப்புகளை சரிசெய்ய நிதி தேவைப்படுவதாகவும், புளூ கிராஸ் இந்தியா அமைப்பு பதிவிட்ட வீடியோவை தன் இன்ஸ்டா ஸ்டோரியாவில் பகிர்ந்து […]

Continue reading …

எண்ணெய் கழிவு விவகாரம்: விசாரணை செய்த பசுமை தீர்ப்பாயம்!

Comments Off on எண்ணெய் கழிவு விவகாரம்: விசாரணை செய்த பசுமை தீர்ப்பாயம்!

கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் காரணமாக வெள்ளத்தால் சென்னை மட்டுமல்லாது, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பெரிதாக பாதிக்கப்பட்டது. இதில் சென்னை, எர்ணாவூர் பகுதியில் மழைநீருடன் எண்ணெய் கழிவு கலந்தது. இதுகுறித்து பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது அதிகாரிகள் குழு அமைத்து திங்கள் கிழமை களத்தில் ஆய்வு செய்து செவ்வாய்க்கிழமை அறிக்கையை தாக்கல் செய்ய மாசுகட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாசுகட்டுப்பாட்டு வாரியம் மேற்கொண்டு வரும் ஆய்வு அறிக்கையை வரும் […]

Continue reading …

கால்வாயில் கொட்டப்பட்ட ஆவின் பால் பாக்கெட்டுகள்!

Comments Off on கால்வாயில் கொட்டப்பட்ட ஆவின் பால் பாக்கெட்டுகள்!

ஆயிரக்கணக்கான பால்பாக்கெட்டுகள் தாம்பரம் அருகில் உள்ள கால்வாயில் கொட்டப்பட்டிருப்பதை பார்த்து அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். சென்னையில் ஏற்பட்ட கனமழை மற்றும் பெருவெள்ளம் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் பாதிப்படைந்தனர். குறிப்பாக திங்கள் செவ்வாய் புதன் ஆகிய மூன்று நாட்கள் பல பகுதிகளுக்கு பால் சென்று சேரவில்லை. தற்போது தான் நிலைமை ஓரளவு சீராகி வருகிறது. ஒரு பாக்கெட் பாலுக்காக ஆயிரக்கணக்கான மக்கள் தத்தளித்த நிலையில் தற்போது ஆயிரக்கணக்கான ஆவின் பால் பாக்கெட்டுகள் தாம்பரம் கால்வாயில் கொட்டப்பட்டிருப்பதை பார்த்து […]

Continue reading …

அண்ணாமலையின் குற்றச்சாட்டு!

Comments Off on அண்ணாமலையின் குற்றச்சாட்டு!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகத்தின் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து பால் கொள்முதல் செய்யாமல், சுமார் இரண்டரை லட்சம் லிட்டர் அளவுக்கு, கர்நாடக மாநில நந்தினி நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “கடினமாக உழைக்கும் தமிழக விவசாயிகளை வஞ்சிப்பதை, திமுக அரசு தொடர்ந்து செய்து வருகிறது. இப்போது ஒரு படி மேலாக, ஆவின் நிறுவனம், தமிழகத்தின் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து பால் கொள்முதல் செய்யாமல், சுமார் இரண்டரை லட்சம் லிட்டர் அளவுக்கு, கர்நாடக […]

Continue reading …

TVS நிறுவனத்தின் அறிவிப்பு!

Comments Off on TVS நிறுவனத்தின் அறிவிப்பு!

டிவிஎஸ் நிறுவனம் சென்னையில் கனமழை வெள்ளம் காரணமாக வலுவான இருசக்கர வாகனங்களுக்கு இலவசமாக பழுது செய்து தரப்படுவதாக அறிவித்துள்ளது. நிக்ஜாம் புயல் காரணமாக பல பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் சென்னையின் பல இடங்களில் வெள்ள நீர் தேங்கி மக்கள் பெரும் சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர். பல இடங்களில் வாகனங்கள் தண்ணீரில் அடித்து செல்லப்படும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் பலரும் இருசக்கர வாகனத்தையே நம்பி உள்ள நிலையில் மழை வெள்ளத்தில் பெரும்பாலான இருசக்கர வாகனங்கள் பழுதடைந்துள்ளன. […]

Continue reading …

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

Comments Off on முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மிக்ஜாம் புயல் பேரிடர் பாதிப்பிலிருந்து மீள முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு என்னுடைய ஒரு மாத ஊதியத்தை வழங்குகின்றேன், அதேபோல் அனைத்து சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும் நிதி அளித்திடுமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன் என்று தெரிவித்துள்ளார். 47 ஆண்டுகால வரலாற்றில் இல்லாத அளவில் டிசம்பர் 2 முதல் 4 வரை சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் கொட்டி தீர்த்தது பெருமழை. இந்த இயற்கை பேரிடரால் ஏறத்தாழ ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த பேரிடர் […]

Continue reading …