Home » Archives by category » சென்னை (Page 43)

வாக்களித்த மக்களுக்காகவே பணியாற்றுவேன் – முதலமைச்சர் ஸ்டாலின்

Comments Off on வாக்களித்த மக்களுக்காகவே பணியாற்றுவேன் – முதலமைச்சர் ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு தனியார் பள்ளியின் 30வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.   அப்போது அவர் பேசியதாவது: கொளத்தூர் தொகுதிக்கு வருவதில் மகிழ்கிறேன். வயதானாலும் நான் இன்னும் மாணவனாகவே உணர்கிறேன். மாணவர்களைச் சந்திக்கும் போது, எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. வாக்களித்த மக்களுக்குப் பணியாற்றுவேன். நான் உங்களில் ஒருவனாக இருக்கவேண்டும். ஓயாத பணியாற்றுவதால் நாட்டிலேயே முதன்மையாக முதல்வராக இருக்க முடிகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Continue reading …

10 கிலோ கஞ்சா பறிமுதல்!

Comments Off on 10 கிலோ கஞ்சா பறிமுதல்!

இன்று ரயில்வே சிறாப்பு தனிப்படை பிரிவினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ரயிலில் கடத்திய 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளவரசி. சப்- இன்ஸ்பெக்டர்கள் ஸ்ரீதர் ஜெயக்குமார் மற்றும் போலீஸார் வழக்குப்பதிவு செய்து கஞ்சாவை கடத்தி வந்தவர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Continue reading …

சசிகலாவிடம் சரமாரியான கேள்விகள்!

Comments Off on சசிகலாவிடம் சரமாரியான கேள்விகள்!

இன்று சசிகலாவிடம் அதிகாரிகள் கொடநாடு எஸ்டேட் கொலை கொள்ளை வழக்கு குறித்து 4 மணி நேரம் விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே கொடாநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை கொள்ளை குறித்த வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஏற்கனவே இந்த வழக்கில் பல பிரமுகர்களிடம் விசாரணை நடந்துள்ளது. அதைத் தொடர்ந்து இன்று சசிகலாவிடம் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக போலீசார் விசாரணை செய்தனர். கொடநாடு எஸ்டேட் எப்போது வாங்கப்பட்டது, எத்தனை பேர் பணி […]

Continue reading …

தனி நீதிபதியின் கருத்தை நீக்கிய நீதிபதிகள்

Comments Off on தனி நீதிபதியின் கருத்தை நீக்கிய நீதிபதிகள்

தனி நீதிபதி வேல்முருகன் கூறிய “காவல் துறையில் இருக்கும் 90% அதிகாரிகள் ஊழல்வாதிகள்தான்” என்ற கூறிய கருத்தை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு நீக்கியுள்ளனர். தனி நீதிபதியின் எதிர்மறைக் கருத்துகளை நீக்கக் கோரி டிஜிபி சைலேந்திரபாபு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரனை இன்று உயர் நீதிமன்றத்தில் பிரகாஷ், நக்கீரன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. உயிரைப் பணயம் வைத்து பணியாற்றும் காவலர்கள் மத்தியில் தனி நீதிபதியின் எதிர்மறைக் […]

Continue reading …

ஜாமீனில் விடுதலையாகிறார் சிவசங்கர் பாபா!

Comments Off on ஜாமீனில் விடுதலையாகிறார் சிவசங்கர் பாபா!

சென்னை அருகே சுசில்ஹரி சர்வதேச பள்ளியை நடத்தி வந்தவர்தான் சிவசங்கர் பாபா. இவர் மீது மாணவிகள் சிலர் பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தினர். இதனை அடுத்து சிவசங்கர் பாபா மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவற்றில் ஐந்து வழக்குகள் போக்சோ சட்டத்தில் பதிவு செய்யப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு வழக்காக ஜாமின் பெற்று வந்த சிவசங்கர் பாபா அவர் மீது தொடரப்பட்ட எட்டாவது வழக்கிலும் தற்போது ஜாமீன் பெற்றுள்ளார். இதனையடுத்து இன்னும் ஓரிரு நாட்களில் அவர் விடுதலை […]

Continue reading …

யுகேஜி மாணவனை தாக்கிய ஆசிரியை!

Comments Off on யுகேஜி மாணவனை தாக்கிய ஆசிரியை!

யூகேஜி படித்து வரும் மாணவன் சரியாக படிக்கவில்லை என்பதற்காக அவனை தாக்கிய ஆசிரியை பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் யூகேஜி படித்து வரும் மாணவர் சரியாக படிக்கவில்லை என்பதற்காக ஆசிரியை அடித்ததாக தெரிகிறது. இதுகுறித்து மாணவனின் தாயார் சமூகவலைதளத்தில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் யூகேஜி மாணவனை அடித்த ஆசிரியை பணி நீக்கம் செய்யப்படுவதாக தனியார் பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் மாணவனை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள மேலும் இரண்டு […]

Continue reading …

தமிழக அரசு இடம் ஒதுக்கியவுடன் கடற்பாசி பூங்கா அமைக்கும் பணி தொடங்கும் – மத்திய அமைச்சர் எல்.முருகன் !

Comments Off on தமிழக அரசு இடம் ஒதுக்கியவுடன் கடற்பாசி பூங்கா அமைக்கும் பணி தொடங்கும் – மத்திய அமைச்சர் எல்.முருகன் !

மீனவர்களின் நலனுக்காக தமிழகத்தில் அமைக்கப்படவுள்ள கடல்பாசி வளர்க்கும் சிறப்புப் பூங்காவுக்கான நிலத்தை தேர்வு செய்து கொடுக்க தமிழக அரசு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்றும் நிலம் ஒதுக்கியப் பின் அதற்கானப் பணிகள் தொடங்கும் என்றும் மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய  அவர் இதனைக் கூறினார். பிரதமர் மோடியின் தலைமையிலான இந்த அரசு மீனவர்கள் நலனுக்காக தனி அமைச்சகத்தை உருவாக்கி […]

Continue reading …

போலிச்சான்றிதழ் மூலம் மோசடியில் ஈடுபட்ட வட மாநிலத்தவர்களை உடனடியாகப் பணிநீக்கம் செய்ய வேண்டும்!

Comments Off on போலிச்சான்றிதழ் மூலம் மோசடியில் ஈடுபட்ட வட மாநிலத்தவர்களை உடனடியாகப் பணிநீக்கம் செய்ய வேண்டும்!

தமிழ்நாட்டில் உள்ள இந்திய ஒன்றிய அரசுப் பணியிடங்களில் போலிச்சான்றிதழ் கொடுத்து 300க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர் வேலைக்குச் சேர்ந்திருப்பது கடும் அதிர்ச்சியளிக்கிறது. முறைகேடான வழிகளில் தமிழர்களது வேலைவாய்ப்புகளைத் தொடர்ந்து பறித்துவரும் வடமாநிலத்தவர்களின் மேலாதிக்கத்தைத் தடுக்கத்தவறி கைகட்டி வேடிக்கை பார்க்கும் திராவிட அரசுகளின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது. தமிழ்நாட்டிலுள்ள நெய்வேலி நிலக்கரி நிறுவனம், பாரத மின்மிகு நிறுவனம், துப்பாக்கி தொழிற்சாலை, எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், உள்ளிட்ட பல்வேறு இந்திய ஒன்றிய அரசு நிறுவனங்களில் 95 விழுக்காட்டிற்கு மேல் வடவர்களால் நிரப்பப்பட்டுப் […]

Continue reading …

மத்திய அரசு பணி பதவி உயர்வில் ஓபிசி இட ஒதுக்கீடு – பா.ம.க. நிறுவனர் இராமதாஸ்!

Comments Off on மத்திய அரசு பணி பதவி உயர்வில் ஓபிசி இட ஒதுக்கீடு – பா.ம.க. நிறுவனர் இராமதாஸ்!

மத்திய அரசு பணிகளுக்கான பதவி உயர்வில் பட்டியலின, பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வசதியாக, ஒவ்வொரு துறையின் உயர் பதவிகளிலும் அவர்களின் எண்ணிக்கை குறித்த அளவிடக் கூடிய புள்ளிவிவரங்களைத்  திரட்ட மத்திய அரசு ஆணையிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.  இதற்கான கணக்கெடுப்பு பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான விவரங்களைத் திரட்டவும் நீட்டிக்கப்பட வேண்டும். மத்திய அரசுப் பணிகளுக்கான பதவி உயர்வில் பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கு வழங்கப்பட்டு இட ஒதுக்கீடு 1992&ஆம் ஆண்டு இந்திரா சகானி வழக்கிற்குப் பிறகு பல்வேறு மாற்றங்களை சந்தித்தது. […]

Continue reading …

தன் காருக்கு தானே தீ!

Comments Off on தன் காருக்கு தானே தீ!

பாஜக பிரமுகர் ஒருவர் தனது காருக்கு தானே தீ வைத்து நாடகமாடியது அம்பலமாகியுள்ளது.   சென்னை மதுரவாயலில் உள்ள பாஜக மாவட்ட செயலாளர் சதீஷ் குமார் என்பவர் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென தீப்பற்றியது. இந்த காருக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது இந்த நிலையில் இதுகுறித்து காவல்துறையினர் விசாரித்தபோது சதீஷ்குமாரே காருக்கு தீ வைத்து எரித்துவிட்டு நாடகமாடியது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்து விசாரணை செய்தபோது காரைவிற்று […]

Continue reading …