Home » Archives by category » சென்னை (Page 44)

மத்திய அரசு பணி பதவி உயர்வில் ஓபிசி இட ஒதுக்கீடு – பா.ம.க. நிறுவனர் இராமதாஸ்!

Comments Off on மத்திய அரசு பணி பதவி உயர்வில் ஓபிசி இட ஒதுக்கீடு – பா.ம.க. நிறுவனர் இராமதாஸ்!

மத்திய அரசு பணிகளுக்கான பதவி உயர்வில் பட்டியலின, பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வசதியாக, ஒவ்வொரு துறையின் உயர் பதவிகளிலும் அவர்களின் எண்ணிக்கை குறித்த அளவிடக் கூடிய புள்ளிவிவரங்களைத்  திரட்ட மத்திய அரசு ஆணையிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.  இதற்கான கணக்கெடுப்பு பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான விவரங்களைத் திரட்டவும் நீட்டிக்கப்பட வேண்டும். மத்திய அரசுப் பணிகளுக்கான பதவி உயர்வில் பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கு வழங்கப்பட்டு இட ஒதுக்கீடு 1992&ஆம் ஆண்டு இந்திரா சகானி வழக்கிற்குப் பிறகு பல்வேறு மாற்றங்களை சந்தித்தது. […]

Continue reading …

தன் காருக்கு தானே தீ!

Comments Off on தன் காருக்கு தானே தீ!

பாஜக பிரமுகர் ஒருவர் தனது காருக்கு தானே தீ வைத்து நாடகமாடியது அம்பலமாகியுள்ளது.   சென்னை மதுரவாயலில் உள்ள பாஜக மாவட்ட செயலாளர் சதீஷ் குமார் என்பவர் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென தீப்பற்றியது. இந்த காருக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது இந்த நிலையில் இதுகுறித்து காவல்துறையினர் விசாரித்தபோது சதீஷ்குமாரே காருக்கு தீ வைத்து எரித்துவிட்டு நாடகமாடியது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்து விசாரணை செய்தபோது காரைவிற்று […]

Continue reading …

நரிக்குறவ மாணவிக்கு உணவு ஊட்டிய முதலமைச்சர்!

Comments Off on நரிக்குறவ மாணவிக்கு உணவு ஊட்டிய முதலமைச்சர்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திருமுல்லைவாயலில் குடியிருக்கும் நரிக்குறவர் இன மக்களை சந்தித்தார்.   அப்போது அவர் குறவர் இன மக்களுக்கு குடும்ப அட்டைகள், முதியோர் உதவித்தொகை உதவிகளையும் வழங்கினார். அதன்பிறகு மு.க.ஸ்டாலின் ஆவடி பஸ்நிலையம் அருகில் உள்ள நரிக்குறவர் குடியிருப்புக்கு சென்றார். அங்கு புதிதாக அமைக்கப்பட்ட உயர் கோபுர விளக்குகள் மற்றும் குடிநீர் குழாயை திறந்து வைத்தார். பின்னர் நரிக்குறவர் மாணவிகளுடன் கலந்துரையாடினார். இது மட்டுமின்றி அங்கு மாணவிகளின் வீட்டில் இட்லி மற்றும் வடை சாப்பிட்டு மாணவிகளுக்கு […]

Continue reading …

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அமைச்சருக்கு கடிதம்!

Comments Off on முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அமைச்சருக்கு கடிதம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலங்கை தமிழருக்கு உதவிட கோரி மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். இலங்கையில் தற்போது கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு இருக்கும் நிலையில் இலங்கையில் உள்ள தமிழர்கள் உள்பட இலங்கை மக்கள் கடும் அவதியில் உள்ளனர். இந்த நிலையில் இலங்கைக்கு தேவையான உதவிகளை இந்தியா அவ்வப்போது செய்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “இலங்கை தமிழர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை அனுப்ப […]

Continue reading …

அம்பத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் முதல்வர் திடீர் ஆய்வு!

Comments Off on அம்பத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் முதல்வர் திடீர் ஆய்வு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை அம்பத்தூரில் உள்ள டி1 போலீஸ் ஸ்டேஷனில் ஆய்வு மேற்கொண்டார். தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், இன்று சென்னை, அம்பத்தூரில் டி1 போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், சட்ட ஒழுங்கு ஆய்வாளரின் அறையில் அமர்ந்து, பொதுமக்கள் புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து காவல்துறையினரிடம் கேட்டறிந்தார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Continue reading …

உயர்நீதிமன்றம் வேதனை!

Comments Off on உயர்நீதிமன்றம் வேதனை!

உயர்நீதிமன்றம் அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பால் சுருங்கி வருகிறது என்று வேதனையை தெரிவித்துள்ளது. உயர்நீதிமன்றத்தில் இன்று பெத்தேல் நகர் குடியிருப்போர் நலச்சங்கம் தொடர்ந்து வழக்கை தள்ளுபடி செய்தது. அப்போது, “அரசு நிலங்களைப் பாதுகாப்பு வருவாய் துறை அதிகாரிகள் கடமை, ஆக்கிரமிப்புகளைத் தடுக்காததால் அரசு நிலங்களின் பரப்பளவு சுருங்கி வருகிறது. ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்கு நீதிமன்றம் உதாவது” என்று தெரிவித்துள்ளது.

Continue reading …

புதிய தடையை விதித்துள்ளது கேந்திரிய வித்யாலயா

Comments Off on புதிய தடையை விதித்துள்ளது கேந்திரிய வித்யாலயா

மாணவர்கள் சேர்க்கைக்கு புதிய தடை விதித்துள்ளது கேந்திரிய வித்யாலாய பள்ளி. ஆனால் இந்த புதிய தடைக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. மத்திய கல்வி அமைச்சகத்தின் கேந்திரியா வித்யாலயா பள்ளிகள் நாடு முழுவதும் செயல்படுகின்றன. ராணுவத்தினர் மத்திய மாநில அரசு அலுவலக ஊழியர்கள் பொதுத்துறை நிறுவனத்தில் குழந்தைகளுக்கு இந்த பள்ளிகளில் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இத்தகைய பள்ளிகளில் சேர்ப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினரின் பரிந்துரைக் கடிதமும் வேண்டும் என்ற நிலை தற்போது உள்ளது. இந்த நிலையில் இனிமேல் எம்பிக்களுக்கு […]

Continue reading …

பயணிகளால் நிரம்பி வழிந்த எழும்பூர் ரயில் நிலையம்!

Comments Off on பயணிகளால் நிரம்பி வழிந்த எழும்பூர் ரயில் நிலையம்!

தொடர்ந்து நான்கு நாட்களுக்கு விடுமுறை என்பதால் சென்னையில் இருப்போர் தங்களது சொந்த ஊருக்கு செல்வதற்காக எழும்பூர் ரயில் நிலையத்திற்கு ஏராளமான பயணிகள் குவிந்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. நாளை தமிழ் புத்தாண்டு, நாளை மறுநாள் புனித வெள்ளி மற்றும் சனி ஞாயிறு ஆகிய நான்கு நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் உள்ள தென் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் சொந்த ஊர் செல்வதற்காக பேருந்துகள் ரயில்கள் மற்றும் மனங்களில் செல்ல தொடங்கியுள்ளனர். […]

Continue reading …

அமைச்சர் எ.வ.வேலுவின் அறிவிப்பு!

Comments Off on அமைச்சர் எ.வ.வேலுவின் அறிவிப்பு!

சட்டமன்றத்தில் அமைச்சர் எ.வ.வேலு சென்னையில் தேனாம்பேட்டையிலிருந்து சைதாப்பேட்டைக்கு இடையே உயர்மட்ட சாலை அமைக்கப்படுவதாக அறிவித்துள்ளார். தேனாம்பேட்டையிலிருந்து சைதாப்பேட்டை வரை ஐந்து முக்கியமான சிக்னல்கள் இருப்பதால், வாகனங்கள் தினமும் பெரும் போக்குவரத்து நெரிசலுக்கு ஆளாகின்றனர். இதனை தவிர்க்கும் வகையில் தேனாம்பேட்டையிலிருந்து சைதாப்பேட்டை வரை உயர்மட்ட சாலை அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தள்ளார். இதற்காக 475 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்று அவர் கூறினார்.

Continue reading …

சென்னை மாநகராட்சி சொத்துவரி கட்டினால் ஊக்கப்பரிசு!

Comments Off on சென்னை மாநகராட்சி சொத்துவரி கட்டினால் ஊக்கப்பரிசு!

குறித்த தேதிக்குள் சொத்து வரியை செலுத்தினால் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னையில் சொத்து வைத்துள்ள மக்கள் தங்கள் சொத்து வரியை ஏப்ரல் 15க்குள் செலுத்த வேண்டுமென சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி, “பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சொத்து உரிமையாளர்கள் சொத்து வரியினை, மண்டல அலுவலகங்கள், வார்டு அலுவலகங்களில் உள்ள இ-சேவை மையங்கள், இணையதளம், நம்ம சென்னை செயலி, பேடிஎம், கிரெடிட் அல்லது டெபிட் கார்டு ஆகியவற்றின் வாயிலாகவும், மாநகராட்சி […]

Continue reading …