Home » Archives by category » சென்னை (Page 74)

அடுத்த உத்தரவு வெளியாகும் வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீடிக்கும் : தமிழக அரசு

Comments Off on அடுத்த உத்தரவு வெளியாகும் வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீடிக்கும் : தமிழக அரசு
அடுத்த உத்தரவு வெளியாகும் வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீடிக்கும் : தமிழக அரசு

சென்னை : தமிழகத்தில் அடுத்த உத்தரவு வெளியாகும் வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு வெளியிட்ட ஆணையின் படி எந்தெந்த புதிய தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் இதர சேவைகள் இயங்கலாம் என்பதை பற்றி மாநில அரசு முடிவெடுத்து அறிவிக்கவேண்டும் என்று தெரிவித்திருந்தது. இதற்கென, மாநில அரசு ஒரு வல்லுநர் குழுவை நியமித்து உள்ளது. அந்தகுழு, தன் முதற்கட்ட கூட்டத்தை நடத்தி, அதனுடைய […]

Continue reading …

சென்னைக்கு வந்த 6,000 ரேபிட் டெஸ்ட் கிட் : மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல்

Comments Off on சென்னைக்கு வந்த 6,000 ரேபிட் டெஸ்ட் கிட் : மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல்
சென்னைக்கு வந்த 6,000 ரேபிட் டெஸ்ட் கிட் : மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல்

சென்னை : தமிழகத்தில் இதுவரை 1,372 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 49 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த ஆணையர் பிரகாஷ், சென்னைக்கு முதல் கட்டமாக, 6,000 ரேபிட் டெஸ்ட் கிட் வந்துள்ளதாகவும், அதன் மூலம் பரிசோதனை செய்ய 26 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், தடை செய்யப்பட்ட பகுதிகளில் அறிகுறிகள் உள்ளவர்களுக்கு முதலில் ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் பரிசோதனை செய்யப்படும் எனவும், தடை செய்யப்பட்ட பகுதிகள் அல்லாத மற்ற […]

Continue reading …

இருள் சுரங்கத்திற்கு வெளியே ஒளி தெரிகிறது : இன்னும் கவனம் தேவை !

Comments Off on இருள் சுரங்கத்திற்கு வெளியே ஒளி தெரிகிறது : இன்னும் கவனம் தேவை !
இருள் சுரங்கத்திற்கு வெளியே ஒளி தெரிகிறது : இன்னும் கவனம் தேவை !

சென்னை : இந்தியாவில் கொரோனா வைரஸ் வளர்ச்சி விகிதம் 40% குறைந்திருப்பதாகவும், தமிழ்நாடு உள்ளிட்ட 19 மாநிலங்களில் இந்த வேகம் மேலும் குறைந்திருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை அறிவித்திருப்பது நிம்மதியளிக்கிறது. அதேநேரத்தில் இது ஆறுதல் அடைவதற்கான தகவல் தானே தவிர, அசட்டையாக இருப்பதற்கான நேரமல்ல என்பதை உணர்ந்து கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியமாகும். இந்தியாவில் ஊரடங்கு ஆணை நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்பாக கொரோனா வைரஸ் பரவல் 3 நாட்களில் இரட்டிப்பாகி வந்ததாகவும், கடந்த ஒரு வாரத்தில் இவ்விகிதம் 6.2 […]

Continue reading …

தமிழக அரசே ! மும்பை தமிழர்களை காப்பாற்று !

Comments Off on தமிழக அரசே ! மும்பை தமிழர்களை காப்பாற்று !
தமிழக அரசே ! மும்பை தமிழர்களை காப்பாற்று !

சென்னை : ஆசியா கண்டத்திலேயே இரண்டாவது மிகப்பெரிய “குடிசைக்குடியிருப்பு” பகுதியான மும்பை தாராவியில் எறத்தாழ ஏழு லெட்சம் மக்கள் குடியிருக்கின்றார்கள். இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்து வந்திருந்து பல வகைப்பட்ட மக்கள் அங்கு வசித்து வந்தாலும் பெரும்பான்மையானவர்கள் தமிழர்கள். கண்ணுக்கு தெரியாத கொரோனா உலகம் முழுக்க ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில் இந்தியாவில் அதுவும் மகாராஷ்ட்ராமாநிலத்தில்தான் அதிக அளவு பாதிப்பினை ஏற்ப்படுத்தி அதிலும் குறிப்பாக அம்மாநிலத்தின் தலைநகர் மும்பையின் முக்கிய பகுதியானதாராவியையும் நிலைகுலைய செய்து கொண்டிருக்கிறது.   மகாராஷ்டிராவில் இதுவரை 2800 க்கும் மேற்ப்பட்டவர்கள் […]

Continue reading …

ஊரடங்கு தொடர்பாக பிரதமரின் அறிவிப்பினையொட்டி முதல்வர் எடப்பாடி ஆலோசனை !

Comments Off on ஊரடங்கு தொடர்பாக பிரதமரின் அறிவிப்பினையொட்டி முதல்வர் எடப்பாடி ஆலோசனை !
ஊரடங்கு தொடர்பாக பிரதமரின் அறிவிப்பினையொட்டி முதல்வர் எடப்பாடி ஆலோசனை !

சென்னை : ஊரடங்கு தொடர்பாக பாரதப் பிரதமரின் அறிவிப்பு மற்றும் மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிமுறைகள் குறித்து தமிழ்நாட்டில் எடுக்கப்பட வேண்டிய தொடர் நடவடிக்கைகள் தொடர்பாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று (15.4.2020) தலைமைச் செயலகத்தில், ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலாளர் திரு.க.சண்முகம், நிதித்துறை கூடுதல் தலைமைச் […]

Continue reading …

கொரோனா : பரிசோதனை எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் – டிடிவி தினகரன்

Comments Off on கொரோனா : பரிசோதனை எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் – டிடிவி தினகரன்
கொரோனா : பரிசோதனை எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் – டிடிவி தினகரன்

சென்னை : தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று நோயினால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவதால், பரிசோதனை மையங்களையும், சோதனை எண்ணிக்கையையும்  அதிகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு முழுவீச்சில் மேற்கொள்ள வேண்டும். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பின் வீரியம் அதிகரித்துக்கொண்டே இருக்கும்  நிலையில், தமிழகத்தில் இந்நோயால் பாதிக்கப்பட்ட 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை உயர்ந்திருப்பதும், எந்தவித அறிகுறியும் இல்லாமல் திடீரென  கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் அதிக அளவில் இருப்பதும் மிகுந்த கவலை அளிக்கிறது. நோய்ப் பரவலைத் தடுக்க ஊரடங்கிற்கு எந்தளவுக்கு […]

Continue reading …

மின்கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் – அன்புமணி இராமதாஸ்

Comments Off on மின்கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் – அன்புமணி இராமதாஸ்
மின்கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் – அன்புமணி இராமதாஸ்

சென்னை : கொரோனா வைரஸ் நோய் தமிழ்நாட்டில் 1200-க்கும் மேற்பட்டோரை தாக்கியிருப்பது ஒருபுறமிருக்க, பெரும்பான்மையான மக்களின் வாழ்வாதாரத்தையும் பறித்திருக்கிறது. அதனால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தங்களின் மாதாந்திர குடும்பச் செலவுகளை சமாளிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர். கொரோனா வைரஸ் குறித்த அச்சமும், கொரோனா பரவலைத் தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவும் தமிழகத்தில் கிட்டத்தட்ட 90% மக்களின் வாழ்வாதாரங்களை பறித்திருக்கின்றன. அரசு ஊழியர்கள், அமைப்பு சார்ந்த பணியாளர்கள் ஆகியோருக்கு மட்டும் தான் ஊதியத்திற்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் ஒட்டுமொத்த […]

Continue reading …

மனித நேயத்தோடு மக்களுக்கு உதவி செய்கின்ற பண்பாளர்களை பாராட்டி ஊக்குவிப்பதில் முதல்வர் முன்மாதிரி – அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

Comments Off on மனித நேயத்தோடு மக்களுக்கு உதவி செய்கின்ற பண்பாளர்களை பாராட்டி ஊக்குவிப்பதில் முதல்வர் முன்மாதிரி – அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
மனித நேயத்தோடு மக்களுக்கு உதவி செய்கின்ற பண்பாளர்களை பாராட்டி ஊக்குவிப்பதில் முதல்வர் முன்மாதிரி – அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

சென்னை : பேரிடர் காலங்களில் மனித நேயத்தோடு மக்களுக்கு உதவி செய்கின்ற பண்பாளர்களை பாராட்டி ஊக்குவிப்பதில் முன்மாதிரியாக செயல்பட்டு வருபவர் நம் தமிழக முதல்வர் பாசமிகு அண்ணன் எடப்பாடியார் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஆதாரத்தோடு விளக்கம்.     இந்த  அசாதாரண  சூழ்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கான பொதுமக்களின் பங்காளிப்பாக 100 ரூபாயிலிருந்து   நிவாரண நிதியாக வழங்கலாம் என்று அறிக்கை கொடுத்து உதவுகின்ற உள்ளங்களை ஊக்குவிக்கின்ற வகையில் வாய்ப்புகளை உருவாக்கி […]

Continue reading …

தமிழகத்தில் ஊரடங்கு ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நீட்டிப்பு !

Comments Off on தமிழகத்தில் ஊரடங்கு ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நீட்டிப்பு !

சென்னை : உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று நோயைக் கட்டுப்படுத்தும் வகையில், தமிழ்நாட்டில், கடந்த 24.3.2020 அன்று மாலை 6 மணி முதல் 31.3.2020 வரை ஊரடங்கு உத்தரவு முதலில் பிறப்பிக்கப்பட்டது. பின்னர் மத்திய அரசு அதை 15.4.2020 அன்று காலை வரை நீட்டித்தது. ஊரடங்கு உத்தரவு தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருவதன் காரணமாக தமிழ்நாட்டில் நோய்த் தொற்று பெரிய அளவில் பரவாது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது உள்ள ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது […]

Continue reading …