Home » Archives by category » சென்னை (Page 75)

முதல்வரின் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி!

Comments Off on முதல்வரின் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி!
முதல்வரின் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி!

முதலமைச்சர் எடப்பாடி மு. பழனிசாமி அவர்களின் தமிழ்ப் புத்தாண்டு  வாழ்த்துச் செய்தி :  தமிழ்ப் புத்தாண்டு மலர்கின்ற இந்த இனிய நாளில் எனது அன்பிற்குரிய தமிழ்ப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். “கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே,   வாளோடு முன் தோன்றி மூத்த குடி” என்ற பாடலுக்கேற்ப, தொன்மையிலும், பன்முகத்தன்மையிலும், ஈடு இணையில்லா பண்பாட்டுப் பெருமை கொண்ட தமிழ்ப் பெருமக்கள் பன்னெடுங்காலமாய் சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக […]

Continue reading …

நிறைவான நலத்தையும், நித்தம் மலரும் எழுச்சியை வழங்கும் ஆண்டாக அமையும்

Comments Off on நிறைவான நலத்தையும், நித்தம் மலரும் எழுச்சியை வழங்கும் ஆண்டாக அமையும்
நிறைவான நலத்தையும், நித்தம் மலரும் எழுச்சியை வழங்கும் ஆண்டாக அமையும்

  இந்திய தேசிய லீக் மாநிலபொதுச் செயலாளர் ஜூக்கிருத்தீன் அஹமது வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்:   தமிழ்ப் புத்தாண்டு தினமானது, ஆண்டுதோறும் சித்திரைத் திங்கள் முதல் நாளன்று நமது மக்களிடையே அமைதி, வளம், மகிழ்ச்சியை உண்டாக்கும் வகையில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நன்னாளில் தமிழக மக்கள் அனைவருக்கும் என்னுடைய இதய பூர்வமான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இப்புத்தாண்டு தமிழர்களின் உள்ளங்களில் நம்பிக்கை, நற்சிந்தனை, வெற்றி ஆகியவற்றை தழைத்தோங்கச் செய்யும் என நான் நம்புகிறேன்.     இயன்றதை செய்வோம், […]

Continue reading …

தன்னார்வலர்கள் நிவாரணம் வழங்க தடை விதிக்கவில்லை தமிழக அரசு விளக்கம் !

Comments Off on தன்னார்வலர்கள் நிவாரணம் வழங்க தடை விதிக்கவில்லை தமிழக அரசு விளக்கம் !
தன்னார்வலர்கள் நிவாரணம் வழங்க தடை விதிக்கவில்லை தமிழக அரசு விளக்கம் !

சென்னை : தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் நிவாரணம் வழங்க எந்த தடையும் இல்லை, வழிமுறைகளில் தான் மாற்றம் செய்யப்பட்டுள்ளது தமிழ்நாடு அரசு விளக்கம். சுனாமி, பெரு வெள்ளம், ஒகி புயல், வர்தா புயல் போன்ற பேரிடர் காலங்களில் பொது மக்களின் வீடுகள், தினசரி உபயோகப் பொருட்கள், வாழ்வாதாரம் போன்றவை இழந்து நின்ற சோதனையான காலகட்டத்தில் தன்னார்வலர்கள் மற்றும் அமைப்புகள் செய்த பணிகள் மகத்தானது. அதை தமிழ்நாடு அரசு மனமுவந்து பாராட்டியதே தவிர, நிவாரணம் வழங்க எந்த ஒரு கட்டுப்பாடும் […]

Continue reading …

இயற்கையை மதித்து, பேரழிவை தவிர்க்க சித்திரைத் திருநாளில் உறுதியேற்போம் – இராமதாஸ்

Comments Off on இயற்கையை மதித்து, பேரழிவை தவிர்க்க சித்திரைத் திருநாளில் உறுதியேற்போம் – இராமதாஸ்
இயற்கையை மதித்து, பேரழிவை தவிர்க்க சித்திரைத் திருநாளில் உறுதியேற்போம் – இராமதாஸ்

வசந்த விழா கொண்டாட்டங்களுக்கு வழிவகுக்கும் சித்திரை திருநாளை உலகெங்கும் கொண்டாடும் தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வாழ்த்துச் செய்தி. ஒரு காலத்தில் சித்திரை மாதம் செல்வம் பொங்கும் மாதமாக திகழ்ந்தது. காரணம் சித்திரையில் தான் அறுவடை முடிந்து களஞ்சியங்கள் நிறையும். அப்போது மக்கள் வாழ்வில் வளம் கொழிக்கும்  என்பதால் சித்திரை மாதம் முழுவதும் ஊர் முழுக்க திருவிழாக்கள் நடைபெறும். சித்திரை முழுநிலவு நாளில்தான் மாமல்லபுரத்திலும், பூம்புகாரிலும் இந்திர […]

Continue reading …

தமிழகத்தில் கொரோனா தொற்று 1000-த்தை கடந்தது !

Comments Off on தமிழகத்தில் கொரோனா தொற்று 1000-த்தை கடந்தது !
தமிழகத்தில் கொரோனா தொற்று 1000-த்தை கடந்தது !

சென்னை : தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. இன்று மட்டும் 106 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும், தேசிய அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, தமிழகத்தில் 1075 பேருடன் இரண்டாவது இடத்தில் உள்ளது, அதேபோல் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று 50 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். தமிழகத்தில் 8 மருத்துவர்கள் மற்றும் 5 செவிலியர்கள் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 10,655 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. சென்னையில் 199 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் […]

Continue reading …

தன்னார்வலர்கள் தனியாக நிவாரணப்பொருட்கள் தர அரசு தடை

Comments Off on தன்னார்வலர்கள் தனியாக நிவாரணப்பொருட்கள் தர அரசு தடை
தன்னார்வலர்கள் தனியாக நிவாரணப்பொருட்கள் தர அரசு தடை

சென்னை : கொரோனா தொற்று நோய் பரவுவதை தடுக்க, ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், சில மாவட்டங்களில் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்கள், மக்களுக்கு உதவுவதாக கூறிக்கொண்டு , சமைத்த உணவையும், பொருட்களையும் விநியோகம் செய்வதாக ஊடகங்கள் மூலமாக தெரியவருகிறது. மக்கள்  வீட்டை விட்டு வெளியில் வருவதையும், கூட்டம் கூடுவதையும் தவிர்த்து, அதன் மூலம் சமூக இடைவெளியை பின்பற்றி தொற்று நோய் பரவுவதை தடுக்கவே, தேசிய பேரிடர் மேலாண்மை சட்டப்படியும், குற்றவியல் நடைமுறை  சட்டம் பிரிவு 144-ன் […]

Continue reading …

மருத்துவர் இராமதாஸ் ஈஸ்டர் வாழ்த்து !

Comments Off on மருத்துவர் இராமதாஸ் ஈஸ்டர் வாழ்த்து !
மருத்துவர் இராமதாஸ் ஈஸ்டர் வாழ்த்து !

ஒரு கன்னத்தில் அறைந்தால், மறு கன்னத்தையும் காட்டு என்று போதித்தவரான இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட மூன்றாவது நாளில் உயிர்த்தெழுந்த திருநாளான ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடும் கிறித்துவ மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வாழ்த்துச் செய்தி. ஒவ்வொன்றுக்கும் ஒரு காலமுண்டு, வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்திற்கும் ஒவ்வொரு நேரமுண்டு என்று எல்லாவற்றிற்கும் ஒரு காலம் குறித்து வைக்கப்பட்டிருக்கிறது என்ற விவிலிய வாக்குதத்தின்படி குறித்து வைக்கப்பட்ட நேரத்தில், முக்கியமாக குறித்த காரியம் […]

Continue reading …

ஊரடங்கை உறுதிப்படுத்து, உதவித் தொகையினை உயர்த்தி வழங்கு – வ. கௌதமன்

Comments Off on ஊரடங்கை உறுதிப்படுத்து, உதவித் தொகையினை உயர்த்தி வழங்கு – வ. கௌதமன்
ஊரடங்கை உறுதிப்படுத்து, உதவித் தொகையினை உயர்த்தி வழங்கு – வ. கௌதமன்

சென்னை : கொரோனா என்கிற கொடூர கிருமி உலகம் முழுக்க கோரத்தாண்டவமாடி மனித குலத்தையே  நிலைகுலைய செய்து கொண்டிருக்கின்ற இச்சூழலில் மனிதர்களை மட்டுமல்ல மனிதத்தையும் காக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் நின்று கொண்டிருக்கிறோம். கிட்டத்தட்ட இருநூறு நாடுகளை சிதைத்து சீரழித்துக்கொண்டிருக்கும் கொரோனா இந்தியாவை இருபத்தைந்தாவது இடத்திலும்  இந்திய ஒன்றியத்திலிருக்கும் தமிழ்நாட்டை இரண்டாவது இடத்திலும் தமிழ்நாட்டில் இருக்கும் சென்னையை முதலிடத்திலும் கொண்டுவந்து  நிறுத்தியிருக்கிறது. இந்நிலையில்  தலைநகரமான சென்னையில் இருந்து தமிழகத்தை ஆளும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் அறத்தோடு […]

Continue reading …

‘ஸ்டே ஹோம் ஸ்டே ஸேஃப்’ ( Stay Home Stay Safe ) !

Comments Off on ‘ஸ்டே ஹோம் ஸ்டே ஸேஃப்’ ( Stay Home Stay Safe ) !

சென்னை : நம்முயிரை காக்கும் நோக்கில் தம்முயிரை துச்சமாக மதித்து, இரவு பகலாக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் மருத்துவர்கள், காவல் துறையினர், சுகாதாரத்துறையினர், மாநகராட்சியினர் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக,’ஸ்டே ஹோம் ஸ்டே ஸேஃப்‘ என்ற கொரோனா விழிப்புணர்வு வாசகங்களை வலியுறுத்தி, ஒரு இன்னிசைப் பாடலை, இசையமைப்பாளர் ‘சாதகப் பறவைகள்’ சங்கர் மற்றும் ‘குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்’ படக்குழுவினர் இணைந்து உருவாக்கி இருக்கிறார்கள். சாதகப் பறவைகள் சங்கர் தனது கருத்தாக்கத்தில், வைரபாரதியின் பாடல் வரிகளுக்கு இப்பாடலுக்கு இசையமைத்திருக்கிறார். […]

Continue reading …

தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை கூடுகிறது !

Comments Off on தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை கூடுகிறது !
தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை கூடுகிறது !

சென்னை: தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்துவது குறித்து மருத்துவ நிபுணர்களுடன்  தலைமை செயலகத்தில் காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இதில் 19 பேர் கொண்ட குழு, அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் சண்முகம் ஆகியோர் கலந்துக்கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாட்டில் கொரோனா தொற்று குறித்து பரவுவதைக் கண்காணிக்க அமைக்கப்பட்ட மருத்துவ நிபுணர்களின் குழு, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் ஏப்ரல் 14-க்கு பிறகு மேலும் இரண்டு வாரங்கள் ஊரடங்கு […]

Continue reading …