Home » Archives by category » தமிழகம் (Page 193)

மின்சாரம் பாய்ந்து யானை உயிரிழப்பு!

Comments Off on மின்சாரம் பாய்ந்து யானை உயிரிழப்பு!

உயர்அழுத்த மின் பாதையை தொட்ட ஆண் யானை பரிதாபமாக உயிரிழந்தது. பாலக்கோடு வனச்சரகம் பிக்கிலி கிராம பகுதியில் கடந்த சில நாட்களாக ஆண் யானை ஒன்று விளை நிலங்களில் நடமாடி வந்தது. ஏற்கனவே மூன்று யானைகள் பலியானதை அடுத்து நேற்று தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் ஏரிக்கரையில் இருந்து மேலே ஏறும் போது தாழ்வாக சென்ற மின்கம்பி உரசி மின்சாரம் பாய்ந்து ஆண் யானை ஒன்று உயிரிழந்தது. இதன் வீடியோ சமூகவலைத்தளத்தில் வெளியாக விலங்கு நல ஆர்வலர்கள் மற்றும் […]

Continue reading …

மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டாவை சந்திக்கிறார் அண்ணாமலை!

Comments Off on மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டாவை சந்திக்கிறார் அண்ணாமலை!

பாஜக தலைவர் அண்ணாமலை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா ஆகிய மூவரையும் சந்திக்க இருப்பதாகவும் தமிழகத்தில் தேர்தலை சந்திக்கும்போது ஏற்படக்கூடிய கூட்டணி குறித்து அவர் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. நேற்று நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்றும் அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் தான் கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என்றும் அண்ணாமலை தெரிவித்திருந்தார். ஆனால் இக்கருத்துக்கு மற்ற […]

Continue reading …

சாலையில் பாலை ஊற்றி போராட்டம்!

Comments Off on சாலையில் பாலை ஊற்றி போராட்டம்!

பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் இன்று முதல் ஆவின் நிறுவனத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி தராததை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் அரசு பொதுத்துறை நிறுவனமான ஆவின் பால் நிறுவனம் மூலம் நாள்தோறும் 25 லட்சம் லிட்டர் பால் நுகர்வோர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கான பால் ஆவின் நிறுவனத்திற்கு ஆங்காங்கே உள்ள பால் உற்பத்தியாளர் சங்கங்கள் மூலம் பெறப்படுகிறது. பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்குதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் […]

Continue reading …

500 ரூபாய் லஞ்சம்; 10 ஆண்டுகள் சிறை!

Comments Off on 500 ரூபாய் லஞ்சம்; 10 ஆண்டுகள் சிறை!

நீதிமன்றம் 500 ரூபாய் லஞ்சம் வாங்கிய அதிகாரிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இலுப்பூர் பகுதியில் ரேஷன் கார்டு வழங்க பச்ச முத்து என்ற முதுநிலை வருவாய் அதிகாரி ரூபாய் 500 லஞ்சம் வாங்கியதாக தெரிகிறது. இது குறித்து லஞ்சம் கொடுத்தவர் புகார் அளித்த நிலையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில் […]

Continue reading …

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தேதி அறிவிப்பு!

Comments Off on அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தேதி அறிவிப்பு!
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தேதி அறிவிப்பு!

அதிமுக கட்சியில் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருக்கு இடையில் மோதல் எழுந்த நிலையில் பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பொறுப்புகளை நீக்குவதாகவும், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி நியமிப்பது எனவும் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இதற்கு ஓபிஎஸ் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் இருவரும் மாறி மாறி ஒருவரையொருவர் கட்சியிலிருந்து நீக்கினர். இது சம்மந்தமாக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில், பொதுக்குழு கூட்டம் செல்லும் என […]

Continue reading …

நயினார் நாகேந்திரன் கருத்து!

Comments Off on நயினார் நாகேந்திரன் கருத்து!

பாஜக மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன் தனித்து போட்டி என்பது அண்ணாமலையின் சொந்த கருத்து என்று தெரிவித்துள்ளார். பாஜக தலைவர் அண்ணாமலை, “அதிமுகவுடன் கூட்டணி இல்லை, அதிமுகவுடன் கூட்டணி என்ற முடிவு எடுக்கப்பட்டால் தமிழக பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு ஒரு தொண்டனாக கட்சியில் பணியாற்றுவேன்” என்று தெரிவித்திருந்தார். பாஜக மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன், “தேர்தல் கூட்டணி குறித்து அண்ணாமலை பேசியது அவரது தனிப்பட்ட கருத்து. தேர்தல் கூட்டணி குறித்து பாஜகவின் அகில […]

Continue reading …

ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு!

Comments Off on ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு!

இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி தலைமையில் அதிமுகவினர் பொதுச்செயலாளருக்கான தேர்தலை அறிவித்தனர். அதிமுக பொதுச்செயலாளருக்கு தேர்தல் அறிவித்துள்ளது மிகவும் சிறுபிள்ளைத்தனமானது என்று பண்ருட்டி ராமச்சத்திரன் கூறியுள்ளார். அவர் செய்தியாளர்களிடம், “அதிமுகவின் சட்டவிதிகளைப் பின்பற்றாமல் திடீரென்று தேர்தல் அறிக்கையை வெளியிடப்பட்டுள்ளது அதிமுகவை கொச்சைப்படுத்தும் செயலாகும். ஏற்கனவே, நீதிமன்றத்தில் புகார்கள் இருக்கும்போது, தேர்தல் நடத்தலாமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதையடுத்து பேசிய ஓ.பன்னீர்செல்வம், “தற்போது, அதிமுகவை சீர்குலைக்கும் வகையில் எடப்பாடி பழனிசமி தரப்பினர் ஈடுபட்டு வருகின்றனர்” என்று குற்றம்சாட்டினார். அதிமுக பொதுச்செயலாளர் […]

Continue reading …

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – ஓபிஎஸ் சந்திப்பு!

Comments Off on முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – ஓபிஎஸ் சந்திப்பு!

திடீரென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஓபிஎஸ் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்துள்ளார். திடீரென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டிற்கு சென்றுள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் அவர்களின் தாயார் சமீபத்தில் மறைவடைந்த நிலையில் அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் ஆறுதல் கூறினார்கள். சீமான் உள்ளிட்ட தலைவர்கள் அவரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். ஓபிஎஸ் தாயார் பழனியம்மாள் கடந்த பிப்ரவரி 24ம் தேதி உயிரிழந்த நிலையில் அவரது மறைவிற்கு ஓபிஎஸ் இடம் ஆறுதல் தெரிவிக்க […]

Continue reading …

மாணவி கழுத்தறுத்துக் கொலை; இளைஞர் கைது!

Comments Off on மாணவி கழுத்தறுத்துக் கொலை; இளைஞர் கைது!

காதல் பிரச்னையால் இளைஞர் ஒருவர் மாணவியின் கழுத்தை அறுத்துவிட்டு ஓடிய சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள ராதாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுகன். இவரது, மகள் தரணி (19 வயது). அங்குள்ள தனியார் கல்லூரியில் செவிலியர் படிப்பு படித்து வந்துள்ளார். தரணி தன் வீட்டிலிருந்த தோட்டத்த்ல் இருந்தபோது, தோட்டத்தில் மறைந்திருந்த இளைஞர் ஒருவர் தரணியைப் பிடித்து, அவரது கழுத்தறுத்துவிட்டு, தப்பியோடிவிட்டார். தரணியின் அலறல் சத்தம் கேட்டு, குடும்பத்தினர் தோட்டத்திற்குச் சென்று […]

Continue reading …

தேர்வு பற்றிய புதிய ததவலை அளித்த அமைச்சர்!

Comments Off on தேர்வு பற்றிய புதிய ததவலை அளித்த அமைச்சர்!

அமைச்சர் அன்பில் மகேஷ் ஒரு வருடத்தில் 3 நாட்கள் மட்டும் பள்ளிக்கு வந்திருந்தால் கூட தேர்வு எழுதலாம் என்று தெரிவித்துள்ளார். 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வுகள் தற்போது நடைபெற்று வருகிறது. பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு தமிழ் முதல் தாளில் 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது அமைச்சர் அன்பில் மகேஷ் “ஆண்டிற்கு மூன்று நாட்கள் மாணவர்கள் பள்ளிக்கு வருகை தந்திருந்தாலும் அவர்கள் பொதுத்தேர்வு […]

Continue reading …