தெற்கு ரயில்வே தொடர் விடுமுறை நாட்களை முன்னிட்டு வரும் 21ம் தேதி வரையிலும் கூடுதல் பெட்டிகளுடன் ரயில்கள் இயக்கப்படும் என அறிவித்துள்ளது. வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என 4 நாட்கள் விடுமுறை இருப்பதால் பலரும் சென்னையிலிருந்து சொந்த ஊர் புறப்பட்டனர். அவர்கள் சொந்த ஊர் செல்ல ஏதுவாக போக்குவரத்துத் துறை 3 ஆயிரம் சிறப்பு பேருந்துகளை இயக்கியது. இந்த சிறப்பு பேருந்துகளில் 1.65 லட்சம் பேர் பயணித்துள்ளதாக கூறியுள்ள போக்குவரத்துத்துறை திரும்ப வருவதற்கு 17ம் தேதி […]
Continue reading …எஃப்21 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போன் என்ற புதிய வகை போன் இன்று மாலை 5 மணிக்கு இந்தியாவில் அறிமுகமானது. ஒப்போ நிறுவனத்தின் எஃப்21 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போனில் ஒப்போ எஃப்21 ப்ரோ மற்றும் ஒப்போ எஃப்21 ப்ரோ 5ஜி என இரண்டு ஸ்மார்ட்போன்கள் வெளிவரவுள்ளது. இதில் ஒப்போ எஃப்21 ப்ரோ 5நி ஸ்மார்ட்போன் விவரம் இதோ… ஒப்போ எஃப்21 ப்ரோ 5நி ஸ்மார்ட்போன் சிறப்புகள்: * 6.43 இன்ச் ஃபுல் ஹெச்டி+ ஆமோலெட் டிஸ்பிளே, * […]
Continue reading …ஒரு சவரன் தங்கத்தின் விலை ஒன்றரை லட்சமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு இலங்கையில் இருந்தது. இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார சீரழிவு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக விலைவாசி உயர்ந்துள்ளது. இந்நிலையில் தற்போது ஒரு சவரன் தங்கத்தின் விலை 2 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் ஒரு சவரன் விலை சுமார் 40 ஆயிரம் என விற்பனை செய்துவரும் நிலையில் இந்தியாவை விட இலங்கையில் ஐந்து மடங்கு அதிகமாக ஒரு சவரன் இரண்ட லட்சம் விற்பனையாகி வருவது மக்கள் […]
Continue reading …ஒட்டுமொத்தமாக ஆந்திராவில் அமைச்சர்கள் ராஜினாமா செய்ததை அடுத்து இன்று புதிதாக அமைச்சர்கள் பதவி ஏற்றுள்ளனர். இதில் நடிகை ரோஜாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஆந்திராவில் மொத்தம் 25 அமைச்சர்கள் பதவியேற்று உள்ளதாகவும் அவர்களில் ஐந்து பேர் துணை முதல்வர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Continue reading …புதுச்சேரி முதல்வர் ரெங்கசாமியுடன் நடிகர் விஜய் உள்ள படத்துடன் சேர்த்து ரசிகர்கள் போஸ்டரை ஒட்டியுள்ளனர். நடிகர் விஜய் நடித்துள்ள “பீஸ்ட்” திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் புதுச்சேரி முதல்வருடன் விஜய் உள்ள போஸ்டரை ரசிகர்கள் பல பகுதிகளில் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர். ஏப்ரல் 13ம் தேதி படம் தியேட்டரில் வெளியாக உள்ள நிலையில் ரசிகர்கள் முன்பதிவு, போஸ்டர், பேனர்கள் போன்றவற்றில் மிகவும் ஈடுபாட்டுடன் உள்ளனர். புதுச்சேரியில் விஜய்யின் “பீஸ்ட்” படம் வெற்றிபெற வாழ்த்து தெரிவித்து […]
Continue reading …ஆம். இனி ஏடிஎம் கார்டு இல்லாமலேயே பணம் எடுக்கலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்தியாவில் அனைத்து வங்கி ஏடிஎம்களில் கார்டுகளை பயன்படுத்தி பணம் எடுக்கும் நடைமுறை உள்ள நிலையில் இன்று ரிசர்வ் வங்கி ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், அனைத்து வங்கி ஏ.டி.எம்களில் யுபியை வசதியை பயன்படுத்தி விரைவில் பணம் எடுக்கும் வசதி அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மக்களுக்கு பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Continue reading …பாண்டிச்சேரியிலிருந்து திருப்பதி செல்லும் ரயிலில் பயண கட்டணம் இரு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக பயணிகள் தங்களது அதிருப்தியை தெரிவித்துள்ளனர். பாண்டிச்சேரியிலிருந்து திருப்பதி பேஸஞ்சர் ரயில் கடந்த பல ஆண்டுகளாக இயங்கி வந்தது என்பதும் இந்த ரயில் பாசஞ்சர் ரயில் கட்டணம் மட்டுமே மிக குறைவாக பெறப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது இந்த ரயில் விரைவு ரயில் சேவையாக மாற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து விரைவு ரயிலுக்குரிய கட்டணமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் பாஸஞ்சர் ரயிலாக இருந்த போது […]
Continue reading …சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.17 உயர்ந்து ரூ.4859க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்-கு ரூ.136 உயர்ந்து சவரன் ரூ.38736க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலையானது வாரத்தின் முதல் நாளான திங்கள் முதல் விலை ஏற்ற இறக்கத்துடனே இருந்து வந்த நிலையில் இன்று மீண்டும் விலை உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலையானது உயர்ந்துள்ள நிலையில் வெள்ளியின் விலையும் சற்று உயர்ந்தே காணப்படுகிறது. 30 காசுகள் அதிகரித்து ரூ.71.00க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Continue reading …தமிழகத்தில் 10,11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மே முதல் தொடங்கி நடைபெற உள்ளது. இதற்காக குறைக்கப்பட்ட பாடங்களை நடத்த பள்ளிகள் தீவிரம் காட்டி வரும் நிலையில், திருப்புதல் தேர்வுகளும் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் திருப்புதல் தேர்வு வினாத்தாள் வெளியானது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் பொதுத்தேர்வு வினாத்தாள்கள் வெளியாகாமல் இருக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன்படி 10,11,12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு வினாத்தாள் உள்ள அறைகளில் சிசிடிவி கேமராவை அமைக்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. வினாத்தாள்கள் உள்ள அறைக்கு […]
Continue reading …ரிசர்வ் வங்கி தனது அறிவிப்பில் சட்டவிரோதமாக கடன் வழங்கும் 600 செயலிகளை கண்டுபிடித்துள்ளதாகவும், அதில் 27 செயலிகள் மூடப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. ஏனைய செயலிகளையும் முடக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு ஈடுபட்டு வருவதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. சட்டவிரோதமாக கடன் வழங்கும் சலுகைகள் குறித்து 2500-க்கும் அதிகமான புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் 500க்கும் மேற்பட்ட புகார்கள் மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து மட்டுமே பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து சட்ட விரோதமாக […]
Continue reading …