சீனா நாட்டின் நிறுவனங்களை முற்றிலும் நிறுத்தி விட முடியாது – வணிகத்துறை அதிகாரிகள் கருத்து!

Filed under: உலகம் |

இந்தியாவில் சீனா நாட்டின் நிறுவனங்களை முற்றிலும் நிறுத்தி விட முடியாது என வணிகத்துறை உயர் அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர். கிழக்கு லடாக் கால்வனில் இந்தியா – சீனா படையினர் இடையே ஏற்பட்ட தாக்குதளுக்கு பின்பு இந்தியாவில் சீனா நாட்டின் 50க்கும் மேலான செயலிகள் தடை செய்யப்பட்டது.

சீனா நாட்டில் இருந்து மின்கருவிகள், மின்னணுக் கருவிகள், செல்பேசிகள், கணினிகள் ஆகிய பொருட்களுக்கு இறக்குமதி கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது சீனாவின் சில முதலீடுகள் முக்கியமானது என்பதால் அதனை முற்றிலும் தடை விதிக்க முடியாது என வணிகத்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தால் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.