திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், மணப்பாறையில் இன்று கருணாநிதி சிலை திறப்பு.

Filed under: தமிழகம் |

திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், மணப்பாறையில் இன்று கருணாநிதி சிலை திறப்பு.

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி அழைப்பு.

திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் மணப்பாறையில் இன்று முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவச்சிலை திறப்பு விழா நடக்கிறது. விழாவில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்துகொண்டு திறந்து வைக்கிறார்.

இதுகுறித்து திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திமுக தலைவரின் அறிவுறுத்தலின்படி, கருணாநிதி நூற்றாண்டு விழா மிக சிறப்பாக திருச்சி தெற்கு மாவட்டத்தில் வருடம் முழுவதும் கொண்டாப்பட்டு வருகின்றது. இதன் அடிப்படையில் இதுவரை 90 நிகழ்ச்சிகள் முடிக்கப்பட்டு தற்போது 91-வது நிகழ்ச்சியானது, கலைஞர் நூற்றாண்டு விழாவில் மற்றொரு நிகழ்வாக சட்டமன்ற தொகுதிக்கு ஒரு சிலை என்ற அடிப்படையில் திருச்சி தெற்கு மாவட்டத்தில் மணப்பாறை தொகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 3.30 மணிக்கு மணப்பாறை மாட்டுசந்தை அருகில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருவுருவ சிலையை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி திறந்து வைக்க உள்ளார்கள்.

விழா கழக முதன்மை செயலாளரும் – நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என். நேரு முன்னிலையிலும், எனது (அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி)தலைமையிலும் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்வில் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட ,வார்டு, கிளைக் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், மாநகராட்சி, ஒன்றிய நகர, பேரூர் கழக சேர்மன்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கழகத் தொண்டர்களும் பொதுமக்களும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன் .

இவ்வாறு அந்த அறிக்கையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.