Home » Posts tagged with » Netrikkan (Page 384)

ரயிலிலிருந்து விழுந்து ப்ளாட்பார்மில் சிக்கிய மாணவி!

Comments Off on ரயிலிலிருந்து விழுந்து ப்ளாட்பார்மில் சிக்கிய மாணவி!

கல்லூரி மாணவி ஒருவர் பிளாட்பாரத்திற்கும், ரயிலுக்குமிடையே சிக்கிய சம்பவம் திருப்பதி அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் அன்னவரம் பகுதியை சேர்ந்த சசிகலா என்ற பெண் துவ்வாடாவில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். தினமும் கல்லூரிக்கு ரயிலில் சென்று வரும் சசிகலா நேற்று குண்டூரிலிருந்து ராயகடா எக்ஸ்பிரஸில் பயணித்துள்ளார். துவ்வாடா ரயில் நிலையத்தில் அவர் இறங்கியபோது கால் தவறியதில் ரயிலுக்கும், பிளாட்பாரத்திற்குமிடையே சிக்கியுள்ளார். உடனே ரயில் நிறுத்தப்பட்டதுடன் மாணவியை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. சில […]

Continue reading …

தாயே பெற்ற குழந்தையை எரித்து கொன்ற கொடூரம்!

Comments Off on தாயே பெற்ற குழந்தையை எரித்து கொன்ற கொடூரம்!

2 பெண் குழந்தைகளை பெற்ற தாயே எரித்து கொலை செய்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம் கோலார் மாவட்டத்தைச் சேர்ந்த ஜோதியின் கணவர் மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வந்தார். ஜோதிக்கும் அவரது கணவருக்குமிடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டதாகத் தெரிகிறது. மன உளைச்சலில் இருந்த ஜோதி, தன் குழந்தைகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் ஒரு குழந்தை உடல் கருவி உயிரிழந்தது. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் மருத்துவமனைக்கும், […]

Continue reading …

டிரைவரே இல்லாத டாக்சியா?!

Comments Off on டிரைவரே இல்லாத டாக்சியா?!

டிரைவர் இல்லாத டாக்ஸியை ஊபர் நிறுவனம் அமெரிக்காவில் அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. ஓட்டுனரின்றி தானாகவே இயங்கும் டாக்சிகளை முதல் முறையாக அமெரிக்காவிலுள்ள லாஸ்வேகாஸ் பகுதியில் ஊபர் நிறுவனம் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. மோஷனல் என்ற தொழில்நுட்ப நிறுவனத்துடன் கைகோர்க்கும் ஊபர் நிறுவனம் இந்த டாக்ஸியை வடிவமைத்துள்ளது. இந்த டாக்ஸியை 2023ம் ஆண்டு மக்கள் பயன் மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது. பயணிகளின் பாதுகாப்புக்காக அவர்களது நடவடிக்கை பதிவு செய்யப்படும் என்றும் இது முழுக்க முழுக்க பாதுகாப்பான […]

Continue reading …

திமுக எம்பி டி.ஆர்.பாலுவின் கருத்து!

Comments Off on திமுக எம்பி டி.ஆர்.பாலுவின் கருத்து!

ஆளுநர் வீட்டு அலமாரியில் திமுக ஆட்சியில் இயற்றப்பட்ட மசோதாக்கள் தூங்கிக் கொண்டிருப்பதாக டிஆர் பாலு தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளதை அடுத்து திமுக மற்றும் காங்கிரஸ் எம்பிக்கள் இன்று வெளிநடப்பு செய்துள்ளனர். இதையடுத்து பாராளுமன்ற வளாகத்தில் திமுக எம்பி டிஆர் பாலு அளித்த பேட்டியில், “திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து 23 மசோதாக்கள் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த மசோதாக்களை அலமாரிகள் வைத்துக்கொண்டு ஆளுநர் கையெழுத்து போடாமல் இருக்கிறார். வளர்ந்த நாடுகளில்கூட ஆன்லைன் […]

Continue reading …

குஜராத்தின் முதல்வராகிறார் பூபேந்திர படேல்!

Comments Off on குஜராத்தின் முதல்வராகிறார் பூபேந்திர படேல்!

பாஜக குஜராத் மாநில முதல்வராக பூபேந்திர படேல் டிசம்பர் 12ம் தேதி பதவியேற்கிறார் என அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாநிலங்களில் தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இன்று காலை குஜராத், இமாச்சல பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களிலும் பாரதிய ஜனதா கட்சி முன்னிலையில் இருந்த நிலையில் தற்போது திடீர் திருப்பமாக இமாச்சல பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் முன்னிலையில் […]

Continue reading …

அடுத்து வரும் 3 நாட்களுக்கு கனமழை!

Comments Off on அடுத்து வரும் 3 நாட்களுக்கு கனமழை!

வானிலை மையம் தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தகவல் அளித்துள்ளது. மாண்டஸ் புயல் சென்னையிலிருந்து 620 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்த மாண்டஸ் புயல் காரணமாக காற்றின் வேகம் அதிகரிக்ககூடும் என்றும், இதனால் தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு கனமழை வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் மாண்டஸ் புயலின் வேகம் மணிக்கு 6 கிமீ வேகத்திலிருந்து 11 கிமீ ஆக அதிகரித்துள்ளது. எனவே நாளை […]

Continue reading …

அதிமுக ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு!

Comments Off on அதிமுக ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு!

நாளை அ.தி.மு.க. சார்பில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம்டிசம்பர் 16ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திமுகவின் 18 மாத ஆட்சி காலத்தில் சொத்துவரி, மின்கட்டணம், பால்விலை உயர்வு உள்பட பல்வேறு சீர்கேடுகள் உள்ளதை அனைத்து கட்டணங்களையும் திரும்ப பெற வலியுறுத்தி டிசம்பர் 9ம் தேதி அதாவது நாளை தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. நாளை புயல் உருவாகி இருப்பதன் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்யும் என்பதால் நாளைய ஆர்ப்பாட்டம் டிசம்பர் […]

Continue reading …

தனியார் மருத்துவமனையில் தீ விபத்து!

Comments Off on தனியார் மருத்துவமனையில் தீ விபத்து!

தனியார் மருத்துவமனை ஒன்றில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சென்னை கோபாலபுரம் கான்ரான் ஸ்மித் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்று பல வருடங்களாக செயல்படுகிறது. நான்கு மாடிகளைக் கொண்ட இந்த மருத்துவமனையில் இரண்டாவது மாடியில் திடீரென கரும்புகை வெளியேறியது. இதனை அடுத்த சில நிமிடங்களில் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதுகுறித்த தகவலின்பேரில் மயிலாப்பூர் மற்றும் தேனாம்பேட்டை தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் அனைத்து அங்கிருந்த நோயாளிகளையும் ஊழியர்களையும் மீட்டதாக […]

Continue reading …

புயல் காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!

Comments Off on புயல் காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!

சென்னை உட்பட 9 மாவட்டங்களுக்கு மாண்டஸ் புயல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் புயல் சென்னையிலிருந்து 620 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்த மாண்டஸ் புயல் காரணமாக காற்றின் வேகம் அதிகரிக்ககூடும் என்றும், இதனால் தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் மாண்டஸ் புயலின் வேகம் மணிக்கு 6 கிமீ வேகத்திலிருந்து 11 கிமீ ஆக அதிகரித்துள்ளது. எனவே […]

Continue reading …

சிபி சக்ரவர்த்திக்கு ‘நோ’ சொன்னாரா ரஜினி?

Comments Off on சிபி சக்ரவர்த்திக்கு ‘நோ’ சொன்னாரா ரஜினி?

இயக்குனர் சிபி சக்ரவர்த்தி “டான்” திரைப்படத்தின் வெற்றியையடுத்து பெரிதும் கவனிக்கப்படும் இயக்குனராகியுள்ளார். சிவகார்த்திகேயனின் எஸ்கே புரொடக்‌ஷன்ஸும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரித்த “டான்” திரைப்படம் கடந்த மே 13ம் தேதி ரிலீசாகி மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. 100 கோடி ரூபாயை திரையரங்குகள் மூலமாக மட்டும் உலகம் முழுதும் வசூலித்தது. இப்போது சிபி சக்கரவர்த்தி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படத்தை இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இன்னும் அந்த படம் அறிவிக்கப்படவில்லை. அதற்கு முன்பாக ஐஸ்வர்யா […]

Continue reading …