
நடிகர் சூர்யா தொழிலதிபர் ரத்தன் டாடா வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. விமான நிறுவன அதிபர் ஜி.ஆர்.கோபிநாத் வாழ்க்கை வரலாறு திரைப்படமான “சூரரை போற்று” படத்தை இயக்கிய சுதா கொங்கரா அடுத்ததாக ரத்தன் டாடா வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் ரத்தன் டாடா கேரக்டரில் சூர்யா அல்லது அபிஷேக்பச்சன் ஆகிய இருவரில் ஒருவர் நடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுதா கொங்கரா தற்போது “சூரரைப்போற்று” படத்தின் ஹிந்தி ரீமேக்கை […]
Continue reading …
நடிகர் அஜீத்தின் “துணிவு” திரைப்படத்தின் பாடல்கள் வெளியீடு எப்போது என்பது பற்றிய கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளன. நடிகர் அஜீத் நடிப்பில் “துணிவு” திரைப்படமும், நடிகர் விஜய் நடித்த “வாரிசு” திரைப்படமும் பொங்கல் பண்டிகைக்கு ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது. “துணிவு” திரைப்படத்திற்கு அதிக திரையரங்குகள் ஒதுக்க வேண்டும் என அஜீத் ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் படத்தின் பாடல் வெளியீடு பற்றியும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. ஜிப்ரான் இசையில் படத்தில் […]
Continue reading …
தனது காதலிக்காக பிரபல நடிகர் நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள பங்களா ஒன்றை பரிசாக கொடுத்ததற்காக அவரே விளக்கம் அளித்துள்ளார். பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் சமீபத்தில் தனது மனைவியை விவாகரத்து செய்தார். தற்போது அவர் நடிகையும் பாடகியுமான சபா ஆசாத் என்பவரை காதலித்து வருகிறார். விரைவில் இருவரும் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மும்பையிலுள்ள முக்கிய பகுதிகளில் உள்ள பங்களா வீட்டை நூறு கோடி ரூபாய்க்கு வாங்கி தனது காதலி சபா ஆசாத்துக்கு ஹிருத்திக் ரோஷன் […]
Continue reading …
கவிஞர் சினேகன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனின்போது கமல்ஹாசனுக்கு நெருக்கமானவரானார். அதன்பின் கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்தவுடன் அவரது கட்சியில் இணைந்து நிர்வாகியாகவும் மாறினார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அவர் போட்டியிட்டு தோல்வியடைந்தார். சினேகனுக்கு தன் தலைமையில் திருமணமும் நடத்திவைத்தார் நடிகர் கமலஹாசன். தற்போது சினேகனுக்கும், கமல்ஹாசனுக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்துள்ளதாகவும், அதனால் சினேகன் கட்சியை விட்டி வெளியேறி சினிமாவில் முழு கவனம் செலுத்த ஆலோசித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
Continue reading …
ஆன்லைனில் மின்கட்டணம் கட்டலாம் என்ற வசதியை பயன்படுத்தி மோசடி கும்பல் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் திமுக பிரமுகரான பத்மப்ரியாவின் தந்தையின் செல்போன் எண்ணுக்கு ஒரு மெசேஜ் வந்துள்ளது. மின்சார கட்டணத்தை கட்டாததால் மின் இணைப்பு இன்று இரவு நிறுத்தப்படும் என்றும் அதற்கு முன்னால் இந்த எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் ஒரு எண் இருந்துள்ளது. அதை தொடர்பு கொண்டபோது சிலர் இந்தியில் பேசியுள்ளனர். இதுகுறித்து பத்மப்ரியா டுவிட்டரில் டாங்கெட்கோவை […]
Continue reading …
டில்லியில் ஆளும் கட்சி எம்எல்ஏ ஒருவரை அவரது கட்சியினரே சட்டையை பிடித்து தர தரவென இழுத்துச் சென்ற சம்பவம் நடந்துள்ளது. நேற்று இரவு 8 மணியளவில் ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏ சம்பித் பத்ரா என்பவர் தனது கட்சித் தொண்டர்களிடம் ஆலோசனை கூட்டம் நடத்திக் கொண்டிருந்தார். திடீரென அக்கூட்டத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏவின் சட்டையை பிடித்து இழுத்துக்கொண்டு அவரது கட்சியினரே சென்றனர். மேலும் அவர் மீது தாக்குதல் […]
Continue reading …
வானிலை மையம் தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு, தெற்கு ஆந்திராவில் பகுதியாக வலுவிழந்துள்ளது. எனவே, தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழகத்தில் இன்று மழை பெய்யும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. இதனால், இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் சென்னை மற்றும் […]
Continue reading …
செஞ்சிலுவை சங்கத்தின் 3.37 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. செஞ்சிலுவை சங்கம் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் உள்ளது. இச்சங்கத்தின் நிர்வாகிகள் சொந்தமான ரூ.3.37 கோடி அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2020ம் ஆண்டு இது குறித்து ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் இவ்வழக்கின் அடிப்படையில் தற்போது செஞ்சிலுவை சங்கத்தின் கிளைகள் சட்டவிரோத பண பரிவர்த்தனை நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக தமிழகத்தின் கிளையின் தலைவர் ஹரிஷ் எல்.மேத்தா, முன்னாள் பொருளாளர் […]
Continue reading …
நாமக்கல்லில் உற்பத்தியாகும் முட்டைகள் இந்தியளவில் மட்டுமின்றி உலகளவில் பல நாடுகளுக்கும் இங்கிருந்து முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. 1000க்கும் மேற்பட்ட கோழிபண்ணைகள் நாமக்கல் மாவட்டத்தில் உள்ளன. தற்போது, கத்தாரில் ஃபிஃபாவின் உலகக்கோப்பை கால் பந்துப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. நாமக்கல் மாவட்டத்திலிருந்து கத்தாருக்கு 1கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளன. உலகளவில் முட்டை உற்பத்தியில் துருக்கி முன்னணியில் உள்ள நிலையில், தற்போது அங்கு ஓரு பெட்டி முட்டை 36 டாலர்களாக உயர்ந்துள்ளதையடுத்து, நாமக்கல் முட்டைக்கு கிராக்கி அதிகரித்துள்ளது.
Continue reading …
ஒரு பேருந்து ஓட்டுனர் மற்றொரு பேருந்தின் மீது ரிவர்ஸ் எடுத்து மோதியது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. பொதுவாக அரசுப் பேருந்துகள், தனியார் பேருந்துகள் குறிப்பிட்ட நேரத்திற்கு பேருந்து எடுப்பது தொடர்பாக பிரச்சனைகள் வரும். சில நேரங்களில் வாக்கு வாதங்கள் முற்றி, இதன் மூலம், பயணிகளும் பாதிக்கப்படுவார்கள். அவ்வகையில், தஞ்சாவூர் மாவட்டத்தில், ஒரு பேருந்து மற்றோரு பேருந்து மீது மோதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து […]
Continue reading …