
இளம்பெண் ஒருவருக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்டவர் உயிரிழந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே தனியார் மருத்துவமனையில் அனுசியா என்பவருக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பின் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். எட்டு நாட்களில் அவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து அனுசியாவுக்கு குழந்தை பிறப்புக்கு பின்னர் கருத்தடை அறுவை சிகிச்சை செய்த தனியார் மருத்துவமனையில் போலீசார் விசாரணை செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அனுசியா குடும்பத்தினர் அளித்த புகாரின் […]
Continue reading …
2026 சட்டமன்ற தேர்தலின்போது பாமக தலைமையில் கூட்டணி அமைப்போம் என அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியிருக்கிறார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியிலிருந்து பாமக வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியிலிருந்த பாமக வெறும் 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. திமுகவுடன் பாமக நெருங்கி வருவதாக கூறப்படும் நிலையில் வரும் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து விலக அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இந்த […]
Continue reading …
சூப்பர் ஸ்டார் ரஜினியின் “பாபா” திரைப்படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்படப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது, நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில், சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் “ஜெயிலர்” திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் உட்பட பல நடிகர்கள் நடித்து வருகின்றனர். படத்தின் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. ரஜினிகாந்த் நடிப்பில், கடந்த 2002ம் ஆண்டு வெளியாகி கலவையான விமர்சனங்கள் பெற்ற படம் “பாபா.” இப்படத்தை “பாட்ஷா,” “வீரா” படங்களை […]
Continue reading …
மத்திய அரசு ஆதார் அட்டை வைத்திருந்தால் ரூ.4.78 லட்சம் கடன் வழங்குவதாக வதந்தி ஒன்று பரவி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒவ்வொரு இந்தியருக்கும் ஆதார் அட்டை என்பது இன்றியமையாத ஒன்று என்ற நிலையில் கிட்டத்தட்ட அனைவரிடமும் ஆதார் அட்டை உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை இணைத்து ஒரு வதந்தி பரவி வருகிறது. அவ்வகையில் ஆதார் அட்டை வைத்திருக்கும் ஒவ்வொருவருக்கும் 4.78 லட்சம் ரூபாய் மத்திய அரசு […]
Continue reading …
பா.ஜ.க. ஆதரவாளர் கிஷோர் கே. சுவாமி என்பவர் சமூக வலைதளத்தில் ஆபாசமாகப் பேசியதற்காக சென்னை நகரக் காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு கைதுசெய்தது. பாண்டிச்சேரியிலிருந்த இவர், இன்று அதிகாலை கைதுசெய்யப்பட்டார். சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்கிவரும் கிஷோர் கே. சுவாமி, நவம்பர் மாதத் துவக்கத்தில் மழை, வெள்ளத்தை எதிர்கொள்வது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைத் தொடர்புபடுத்தி ஆபாசமாகத் தோன்றும் வகையில் கருத்துகளைப் பதிவுசெய்திருந்தார். இது குறித்து கிஷோர் கே. சுவாமி மீது இ.பி.கோ. 153, 294 […]
Continue reading …
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறி வருகிறது என்று குற்றஞ்சாட்டியுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் மாநில உளவுத்துறை உறக்க நிலையில் உள்ளது. பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறி வருகிறது. மங்களூரு குண்டுவெடிப்பு விசாரணையில் ஷாரிக் என்பவர் போலி அடையாள அட்டைகளை காட்டி கோவையில் தங்கியிருந்தது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் கோவையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் ஒரு பயங்கரவாத செயல். இன்று முதல் நாளில் இருந்தே தமிழக பாஜக மட்டுமே கூறி வந்தது. ஷாரிக் […]
Continue reading …
சமீபத்தில் தமிழகத்தில் மின்கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் மின் கட்டண உயர்வுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்று இம்மனு விசாரணைக்கு வந்த நிலையில் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட மின்கட்டண உயர்வுக்கு தடையில்லை என்று சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தது. தமிழ்நாடு நூற்பாலைகள் சங்கம் தாக்கல் செய்த இந்த மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் மின் கட்டண உயர்வுக்கு எந்தவிதமான தடையும் இல்லை என்பதால் உயர்த்தப்பட்ட மின் கட்டணம் […]
Continue reading …
நாளை விஜய் மக்கள் இயக்க மாவட்டச் செயலாளர்களை நடிகர் விஜய் சந்திக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில், “வாரிசு” திரைப்படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து, சரத்குமார், ஷ்யாம் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். இவர் நடிப்பில் உருவாகியுள்ள “வாரிசு” படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸாகவுள்ள நிலையில், இப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடந்து வருகிறது. பொங்கலுக்கு அஜீத்தின் “துணிவு” படமும் ரிலீசாக […]
Continue reading …
அரசு டாக்டர்கள் சங்கம் வீராங்கனை பிரியா வழக்கில் மருத்துவர்கள் கைது செய்யப்பட்டால் போராட்டம் நடத்துவோம் என அறிவித்துள்ளது. சென்னையை சேர்ந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவுக்கு தவறான சிகிச்சை அளித்ததன் காரணமாக அவர் உயிரிழந்தார். இதனால் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது 304ஏ என்ற பிரிவின் படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவர்கள் முன் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்த நிலையில் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் மருத்துவர்கள் உடனடியாக சரணடைய நீதிபதிகள் உத்தரவிட்டனர். […]
Continue reading …
விரைவில் கருவிழி பதிவு மூலம் ரேசன் பொருட்கள் வழங்கும் முறை அமலுக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது ரேசன் கடைகளில் விரல் ரேகை பதிவு மூலம் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கூலி வேலைக்குச் செல்லும் முதியவர்களின் கை ரேகை சரியாக அந்த மெஷினில் பதிவாவதில்லை என்பதால், பொருட்கள் வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், முதியவர்களின் கருவிழிப் பதிவு மூலம் ரேசன் பொருட்கள் வாங்கும் முறை விரைவில் அமலுக்கு வரவுள்ளதாகத் தகவல் வெளியாகிறறது. மேலும், கருவிழி […]
Continue reading …