Home » Posts tagged with » Netrikkan (Page 432)

விக்னேஷ் சிவனின் பாராட்டு!

Comments Off on விக்னேஷ் சிவனின் பாராட்டு!

இயக்குனர் விக்னேஷ் சிவன் “பொன்னியின் செல்வன் 1” திரைப்படம் தமிழ் திரை வரலாற்றில் மற்றொரு ‘மணி’மகுடம் -என்று பாராட்டியுள்ளார். இயக்குனர் மணிரத்னம் பல வெற்றிப் படங்களை இயக்கியவர். கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை சினிமாவாக இயக்கியிருந்தார். செப்டம்பர் 30ம் தேதி உலகம் முழுதும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வசூலையும் குவித்துள்ளது. இப்படத்தை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட சினிமா பிரபலங்களும் பார்த்து பாராட்டி வருகின்றனர். பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் “பொன்னியின் செல்வன் 1” […]

Continue reading …

இயக்குனர் கவுதமனின் எச்சரிக்கை!

Comments Off on இயக்குனர் கவுதமனின் எச்சரிக்கை!

இயக்குனரும், நடிகருமான கவுதமன் “பொன்னியின் செல்வன் 2-ம் பாகமும் இப்படியிருந்தால் விளைவுகளை சந்திக்க நேரிடும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். இவர் இதுகுறித்து செய்தியாளர்களிடம், “தமிழ் நிலத்தை சோழ பேரரசு மட்டுமே 350 ஆண்டுகளாக ஆண்ட வரலாறு உண்டு. இத்திரைப்படத்தை தமிழனாக இருந்து சொல்லவில்லை என்றாலும் வரலாற்றை சொல்லியிருக்க வேண்டும். சோழர்களின் சின்னமான புலி கொடியை ஒரு இடத்தில் கூட காட்டவில்லை என்றால் அப்படி என்ன வரலாற்று ஆய்வு செய்து உள்ளார்கள். ஜெயமோகன் சோழர்கள் தெலுங்கர்கள் என குறிப்பிடுகிறார், […]

Continue reading …

காப்பகத்தில் சிறுவர்கள் பலி; டிடிவி தினகரன் வருத்தம்!

Comments Off on காப்பகத்தில் சிறுவர்கள் பலி; டிடிவி தினகரன் வருத்தம்!

டிடிவி தினகரன் ஆதரவற்ற குழந்தைகளுக்கான காப்பகத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 3 சிறுவர்கள் உயிரிழந்திருப்பது பெரும் வருத்தத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளார். விவேகானந்தா சேவாலய விடுதி திருப்பூர் மாவட்டம் திருமுருகன் பூண்டியில் செயல்பட்டு வருகிறது. ஆதரவற்ற குழந்தைகளின் விடுதியான இதில் காலை உணவைச் சாப்பிட்ட 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி, அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தன் டுவிட்டர் பக்கத்தில், “திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டி அருகே ஆதரவற்ற குழந்தைகளுக்கான காப்பகத்தில் கெட்டுப்போன […]

Continue reading …

வந்தே பாரத் ரயில் சேதம்!

Comments Off on வந்தே பாரத் ரயில் சேதம்!

வந்தே பாரத் ரயில் என்ஜினின் முன் பகுதி எருமைகள் மோதியதால் சேதமடைந்துள்ளது. சமீபத்தில் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அதிவேக வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ரயில்கள் ரயில்வே துறைக்கு அளிக்கப்பட்டு சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஒன்று மும்பை செண்ட்ரலில் இருந்து குஜராத் காந்திநகர் இடையே இயக்கப்பட்டு வருகிறது. இன்று காலை 11.15 மணியளவில் இந்த ரயில் வத்வா ரயில் நிலையத்திற்கும், மனிநகர் ரயில் நிலையத்திற்கும் இடையே சென்றுக் கொண்டிருந்தபோது எருமைகள் தண்டவாளத்தில் […]

Continue reading …

உத்தரகாண்டில் பஸ் கவிழ்ந்து 32 பேர் பலி!

Comments Off on உத்தரகாண்டில் பஸ் கவிழ்ந்து 32 பேர் பலி!

பேருந்து ஒன்றில் திருமண நிகழ்ச்சிக்கு சென்றபோது உத்தரகாண்ட் பகுதியில் திடீரென கவிழ்ந்ததில் 32 பேர் பலியான சம்பவம் நிகழ்ந்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் லால்தாங் பகுதியிலுள்ள பவுரி மாவட்டத்தில் பிரோன்கால் பகுதியில் திருமண விழா நடைபெற்றுள்ளது. இதில் கலந்து கொள்ள வெளியூரிலிருந்து 50க்கும் மேற்பட்டவர்கள் பேருந்து ஒன்றில் பயணம் செய்துள்ளனர். பேருந்து சிம்ரி பகுதியில் மலைப்பாதையில் சென்றுக் கொண்டிருந்தபோது வளைவில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் சரிந்து விழுந்தது. பள்ளத்தில் விழுந்த பேருந்தில் இருந்து பயணிகளை மீட்கும் பணியில் […]

Continue reading …

வெற்றிமாறனுக்கு திருமாவளவன் ஆதரவு!

Comments Off on வெற்றிமாறனுக்கு திருமாவளவன் ஆதரவு!

இயக்குனர் வெற்றிமாறன் ராஜராஜ சோழன் இந்து அல்ல..! என்று பேசிய கருத்துக்கு திருமாவளவன் தனது ஆதரவை தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் மணி விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் இயக்குனர் வெற்றிமாறன் உட்பட பலரும் கலந்து கொண்டு பேசினர். அப்போது பேசிய இயக்குனர் வெற்றிமாறன், “தமிழர்களின் அடையாளங்கள் திரிக்கப்படுவதாகவும், ராஜராஜ சோழனை இந்து அரசனாக திரிக்கும் முயற்சிகள் நடக்கிறது” என்று பேசினார். இது அரசியல் சூழலில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. ராஜராஜ சோழன் காலத்தில் […]

Continue reading …

ஆன்மீகத்திற்கு எதிரானது திமுக ஆட்சி அல்ல; ஸ்டாலின் பேச்சு!

Comments Off on ஆன்மீகத்திற்கு எதிரானது திமுக ஆட்சி அல்ல; ஸ்டாலின் பேச்சு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சி ஆன்மீகத்திற்கு எதிரானது அல்ல என பேசியுள்ளார். இன்று வள்ளலாரின் முப்பெருவிழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியபோது, “வள்ளலார் பிறந்த நாளை தனிப்பெரும் கருணை நாளாக திமுக அரசு அறிவித்துள்ளது. திமுக அல்லது திராவிட மாடல் ஆட்சி ஆன்மீகத்திற்கு எதிரானது அல்ல. ஆன்மீகத்தை அரசியலுக்கும் சுயநலத்திற்கு பயன்படுத்துவதற்கு எதிராகதான் திமுக குரல் கொடுக்கும்” என்று கூறினார். இதனையடுத்து சென்னையில் நடைபெற்ற வள்ளலார் முப்பெரும் விழாவில் கலந்து கொண்டு தபால் உறையை […]

Continue reading …

சூப்பர் ஸ்டாரின் பாராட்டில் நெகிழ்ச்சியான ஜெயம் ரவி!

Comments Off on சூப்பர் ஸ்டாரின் பாராட்டில் நெகிழ்ச்சியான ஜெயம் ரவி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தைப் பார்த்த பிறகு ஜெயம் ரவியை போனில் அழைத்துப் பாராட்டியுள்ளது குறித்து, அவரே சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். செப்டம்பர் 30ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிய “பொன்னியின் செல்வன்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல் வசூலையும் குவித்துள்ளது. இப்படத்தை பார்த்த சினிமா பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், “பொன்னியின் செல்வன்” படத்தைப் பார்த்துவிட்டு, இப்படத்தில் அருண்மொழி வர்மனாக நடித்துள்ள, ஜெயம் ரவியை […]

Continue reading …

“டிரைவர் ஜமுனா” பர்ஸ்ட்லுக் போஸ்டர்!

Comments Off on “டிரைவர் ஜமுனா” பர்ஸ்ட்லுக் போஸ்டர்!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கும் புதிய திரைப்படமான “டிரைவர் ஜமுனா” பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்நிலையில் அவர் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கும் திரைப்படம் ஒன்றின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு “பர்ஹானா” என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த படத்தை நெல்சன் வெங்கடேசன் என்பவர் இயக்கி இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் நடிக்கவிருப்பதாகவும் இந்த படத்திற்கு ஜஸ்டீன் பிரபாகரன் இசையமைக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் படப்பிடிப்பு தொடங்கி […]

Continue reading …

சென்னை மாநகராட்சியின் ஆபர்!

Comments Off on சென்னை மாநகராட்சியின் ஆபர்!

சென்னை மாநகராட்சி அக்டோபர் 15ம் தேதிக்குள் சொத்து வரி செலுத்தினால் 5 சதவீதம் தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது. சென்னை மாநகராட்சியில் இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியை அக்டோபர் 15-ம் தேதிக்குள் செலுத்தினால் 5 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. 2022 மற்றும்- 2023ம் ஆண்டு காலம் முதல் அரையாண்டு சொத்து வரி இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய அளவில் வசூலிக்கப்பட்டதாக சென்னை மாநகராட்சி தெரிவித்திருந்தது. அதேபோல் தற்போது இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியை […]

Continue reading …