கவாஸ்கர் நெகிழ்ச்சியின் பேச்சு!

Filed under: விளையாட்டு |

தோனியிடம் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் ஆட்டோகிராப் பெற்ற கவாஸ்கர் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.

கிரிக்கெட்டில் ஐபிஎல் லீக் போட்டிகள் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. நேற்று சென்னை சேப்பாக்கத்தில் நடந்த சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா அணிகள் இடையேயான போட்டியில் கொல்கத்தா வெற்றி பெற்றது. சென்னை அணிக்கு அதன் ஹோம் கிரவுண்டில் இதுவே கடைசி லீக் போட்டி என்பதால் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் எல்லாருக்கும் முன் முதல் ஆளாக, முதல் ரசிகராக சிஎஸ்கே கேப்டன் தோனியிடம் ஓடி சென்று ஆட்டோகிராப் பெற்றார் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர். இது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. கவாஸ்கர் இதுகுறித்து பேசும் போது, “தோனி போன்ற ஒரு வீரர் நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே கிடைப்பார். அதனால்தான் அவர் தொடர்ந்து விளையாடுவதை பார்க்க வேண்டும் என அனைவரும் விரும்புகிறார்கள். இது தோனியின் கடைசி சீசனாக இருக்கக் கூடாது என்றுதான் நானும் ஆசைப்படுகிறேன். அவர் மேலும் சில காலம் விளையாட வேண்டும்” என தனது ஆசையையும் வெளிப்படுனார்.