ஜம்மு காஷ்மீரில் உள்ள குல்காம் மாவட்டத்தின் பா.ஜ.க கிராம ஊராட்சி மன்ற தலைவரான சஜ்ஜாத் அகமத்தை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.
![](https://netrikkan.com/wp-content/uploads/2020/08/terrorist-1024x681.jpg)
பாரதிய ஜனதாவை சேர்ந்தவர் சஜ்ஜாத் அகமது. காசிகுண்டில் கிராமத்தில் இருக்கும் அவருடைய வீட்டின் முன்பு நின்று கொண்டிருக்கும் போது தீவிரவாதிகளால் சுடப்பட்டார். இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், சிகிச்சை பலன் இல்லாமல் உயிரிழந்தார்.
![](https://netrikkan.com/wp-content/uploads/2020/08/bjp-man-.jpg)
இதைப்போல இரண்டு நாட்களுக்கு முன்பு பாரதிய ஜனதாவை சேர்ந்த பஞ்சாயத் தலைவர் ஆரிப் அகமது என்பவரை தீவிரவாதிகளால் சுடப்பட்டார். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.