தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 51 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

Filed under: தமிழகம் |

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 51 ஐபிஎஸ் அதிகாரிகள் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மாநில தலைமைச் செயலாளர் சண்முகம் பிறப்பித்துள்ளார்.

திருச்சி எஸ்பியாக இருந்த ஜியாவுல் ஹக் தற்போது கள்ளக்குறிச்சி எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து சென்னை சிஐடி சிறப்பு பிரிவில் இருந்த அரவிந்த் திருவண்ணாமலை மாவட்டம் எஸ்பி ஆக பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும், சென்னை அடையாறு துணை ஆணையராக வி.விக்ரமன் நியமிக்கப்பட்டுள்ளார் மற்றும் பல அதிகாரிகளை மாநிலம் முழுவதும் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனார்.