சென்னை, ஜூன் 19 தினபூமி நாளிதழில் நிருபராக பணியை தொடங்கி பத்திரிகைத்துறையில் 18 ஆண்டுகாலமாக தொடர்ந்து பணியாற்றியவர் சிவகுமார் (வயது 49). மக்கள் குரல் நாளிதழ் உதவி ஆசிரியராக பணியாற்றிய சிவகுமார் மொழிப்பெயர்ப்புத் திறமை மிக்கவர். பழகுவதற்கு இனிய சிவகுமார் இன்று (19/06/2020) காலை தஞ்சாவூரில் மாரடைப்பால் இயற்கை எய்தினார். அவரது உடல் தற்போது தஞ்சாவூர் ரெட்டிபாளையத்தில் அன்னை சிவகாமி நகரில் உள்ள இல்லத்தில் இறுதிமரியாதைக்காக வைக்கப்பட்டுள்ளதுஇன்று மாலை இறுதி சடங்குகள் நடைபெறுகின்றனமறைந்த சிவகுமாருக்கு மீனாம்பிகா என்ற மனைவியும் […]
Continue reading …சென்னை, ஜூன் 19 சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் முழு முடக்கம் தொடங்கியுள்ள நிலையில், கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளானவர்களுக்கு வழங்கப்படும் ஜிங்க் (ZINC), வைட்டமின் சி (VITAMIN C) உள்ளிட்ட மாத்திரைகளுக்கு அரசு மருத்துவமனைகளில் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக வெளியாகும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஆரம்பத்தில் அரசு சார்பில் 10 நாட்கள் சாப்பிடுவதற்கான மருந்து பெட்டகம் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது பாதிப்பு உச்சத்திற்குச் சென்று கொண்டிருக்கும் நேரத்தில், அத்தகைய மருந்துகள் அளிக்கப்படுவது நிறுத்தப்பட்டுவிட்டதாக செய்திகள் வருகின்றன. […]
Continue reading …உலகம் முழுவதும் எல்லா நாடுகளிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்கள் சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு அதிக முக்கியத்தும் அளிக்க வேண்டும் என ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வேண்டுகோள் விடுத்துள்ளார். சர்வதேச அளவில். ஜூன் 17-ம் தேதி பாலைவனமாதலை எதிர்த்து போரிடும் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, ஈஷா அறக்கட்டளையானது, மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம், இயற்கை பாதுகாப்பிற்கான சர்வதேச ஒன்றியத்துடன் (International Union for Conservation of Nature – IUCN) இணைந்து இணையவழி […]
Continue reading …ஸ்டாலின் தன்னை அரசியலில் இருந்து தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். அரசு மீது ஸ்டாலின் கூறிவரும் குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது, கொரோனா காலம் முடியும் வரையிலாவது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தன்னை அரசியலில் இருந்து தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். பேரிடரிலும் அரசியல் செய்து மக்களை குழப்பும் திமுக, கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களை மனச்சோர்வு அடையும்படி செய்வதாக விமர்சித்துள்ளார். ஒன்றிணைவோம் திட்டத்தால் தான் பலருக்கு கொரோனா […]
Continue reading …சென்னை, ஜூன் 17 கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக அனைத்துத் தரப்பினரும் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் நிலையில், ஆன்லைன் சூதாட்டத் தளங்கள் இளைஞர்களை அடிமையாக்கி அவர்களின் வாழ்க்கையில் பொருளாதாரத் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. அத்தளங்களை உடனடியாக கட்டுப்படுத்தப்படாவிட்டால், அவை மிகப்பெரிய சமூகச் சிக்கலை ஏற்படுத்திவிடும் ஆபத்து உள்ளது என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அறிக்கை விடுத்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக ஏராளமான இளைஞர்கள் வேலையிழந்து வீடுகளில் உள்ளனர். பணியில் இருக்கும் இளைஞர்களிலும் பெரும்பான்மையினர் வீடுகளில் […]
Continue reading …தமிழக அரசுத்துறைப்பணிகளைச் சிறப்புச் சலுகையின் மூலம் தமிழே அறியாத வெளி மாநிலத்தவர்களுக்குத் தாரை வார்க்க முனைவதா? வடமாநிலத்தவர்களின் ஆதிக்கத்தை வளர்த்தெடுக்க தமிழக அரசே துணைபோவதா? – சீமான் கண்டனம் தமிழ் மொழியறியாத வெளி மாநிலத்தவர்களைத் தமிழக மின்சார வாரியத்தில் வேலைக்கமர்த்தி அவர்கள் தமிழ் கற்க இரண்டு ஆண்டுகள்வரை அவகாசம் அளிக்கப்படும் என அமைச்சர் தங்கமணி அறிவித்திருப்பது பேரதிர்ச்சி தருகிறது. 90 இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழக இளைஞர்கள் படித்து முடித்துவிட்டு, தமிழகத்தின் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து பணிக்காகக் காத்திருக்கும் […]
Continue reading …கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலகத்தில், மக்கள் தொடர்பு அலுவலராக நல்லதம்பி என்பவர் இருந்து வருகிறார். இவரது பதவி காலத்தில் இப்படி ஒரு அசிங்கமான செயல்களும், மோசடி புகார்களும், செய்தித் துறை ஊழியர்களை போலீஸ் கைது… என்று பரபரப்பான தகவல்களால் இன்று கோவை மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை ஊழியர்கள் வெட்கி தலைகுனிந்து காணப்படுகின்றனர். ஆம், கோவை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் பிரபு என்பவர் கண்காணிப்பாளராகவும் […]
Continue reading …இம்மாதம் 21-ஆம் தேதியன்று வருடாந்திர சூரியகிரணம் நிகழ உள்ளது. இந்தியாவில் இந்த கிரகணம், ஜூன் 21 காலை முதல், ராஜஸ்தான், ஹரியானா, உத்தராகண்ட் மாநிலங்களின் சில பகுதிகளில் தெரியும். நாட்டின் பிற பகுதிகளில் பகுதி-சூரிய கிரகணம் தெரியும். சென்னையில் இந்த கிரகணம் 34 விழுக்காடு அளவுக்கு தெரியும்.
Continue reading …பிரபல கார் ரேஸ் வீராங்கனை ஒருவர், திடீரென பாலியல் பட நடிகையாக மாறியிருக்கிறார். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் ரெனீ கிரேஸி ( Renee Gracie), 25 வயதான இவர், முழு நேர கார் ரேஸ் வீராங்கனை. சூப்பர் கார் ரேஸ் வீராங்கனையான இவர், கடந்த 14 வருடங்களாக, கார் ரேஸில் பங்கேற்று கலக்கி வந்தவர். பல பரிசுகளையும் பெற்றுள்ளார், இவருக்கு கடந்த சில வருடங்களாகக் கடும் பொருளாதார சிக்கல். தனது பணப் பிரச்னையை, கார் ரேஸ் மூலம் தீர்க்க […]
Continue reading …சென்னை, ஜூன் 14 தெற்கு தொடர்வண்டித்துறையில், பதவி உயர்வு அடிப்படையில் சரக்குத் தொடர்வண்டி கார்டு பணிக்கு 96 பேரை தேர்ந்தெடுக்க நடைபெற்ற ஆன்லைன் தேர்வுகளில், முழுக்க முழுக்க வட இந்திய பணியாளர்கள் வெற்றி பெற்றிருப்பது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. இத்தேர்வுகளில் தமிழகத்திலிருந்து வெறும் 5 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருப்பது மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்துள்ளது என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அறிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாடு, கேரளம், ஆந்திரத்தின் ஒரு பகுதியை உள்ளடக்கிய தெற்குத் தொடர்வண்டித் துறையில் 96 […]
Continue reading …