Home » Entries posted by admin (Page 14)
Entries posted by admin

மேக்கேதாட்டு அணையைத் தடுக்க விரைந்து செயல்படு – பெ. மணியரசன்!

Comments Off on மேக்கேதாட்டு அணையைத் தடுக்க விரைந்து செயல்படு – பெ. மணியரசன்!

காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேக்கேதாட்டில் அணை கட்டிட, கட்டுமானப் பொருட்களை அங்கே குவித்துள்ளது என்ற செய்தி, ஏடுகளில் வந்ததைப் பார்த்து, அனைத்திந்தியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு தானே முன்வந்து வழக்குப்பதிவு செய்து, அணை கட்டும் முயற்சிக்கு அண்மையில் தடை விதித்தது. அத்துடன், மேக்கேத்தாட்டுப் பகுதியில் அணைகட்டும் ஏற்பாடுகள் நடக்கின்றனவா என்று அறிந்து அறிக்கை அளிக்க ஆய்வுக் குழுவையும் அமைத்தது. இந்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அனுமதி அளிக்காத நிலையில், கர்நாடக அரசு […]

Continue reading …

மேகதாது அணை பகுதியை ஆய்வு செய்ய குழு, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்ய வேண்டும் – மருத்துவர் இராமதாசு !

Comments Off on மேகதாது அணை பகுதியை ஆய்வு செய்ய குழு, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்ய வேண்டும் – மருத்துவர் இராமதாசு !

தமிழ்நாட்டு எல்லையையொட்டிய மேகதாது பகுதியில் புதிய அணை கட்டுவதற்கான ஏற்பாடுகளை கர்நாடக அரசு அனுமதியின்றி மேற்கொண்டு வருவது குறித்து ஆய்வு செய்வதற்காக வல்லுனர் குழுவை அனுப்ப வேண்டும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு அளித்தத் தீர்ப்பை அத்தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு ரத்து செய்துள்ளது. இது தமிழகத்திற்கு ஏற்பட்ட பின்னடைவாகும். காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டம் கர்நாடகத்திற்கு மிகவும் முக்கியமானது என்றும், மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் அதற்கான பணிகள் தொடங்கும் […]

Continue reading …

மறுபடியும் கேட்கிறேன்… மதுக்கடைகளை திறக்காதீர்… நிரந்தரமாக மூடுங்கள் – மருத்துவர் இராமதாசு!

Comments Off on மறுபடியும் கேட்கிறேன்… மதுக்கடைகளை திறக்காதீர்… நிரந்தரமாக மூடுங்கள் – மருத்துவர் இராமதாசு!

தமிழ்நாட்டில் கொழுந்து விட்டு எரியும் தீயை அணைக்க தண்ணீரை ஊற்ற வேண்டிய தமிழக அரசு, பெட்ரோலை ஊற்றிக் கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்று பரவலை அணைக்க மருத்துவர்கள் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் சமூகப் பொறுப்பும், மக்கள் நலனில் அக்கறையும் இல்லாமல் நாளை முதல் மதுக்கடைகளை திறக்க அரசு அனுமதித்திருப்பதை இப்படித் தான் வர்ணிக்க வேண்டியுள்ளது. தமிழ்நாட்டில் நாளை காலையுடன் முடிவடையவிருக்கும் ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு கூடுதல் தளர்வுகளுடன் நீட்டித்து 11&ஆம் தேதி உத்தரவு பிறப்பித்த முதலமைச்சர் […]

Continue reading …

தென்காசி மாவட்டத்தில் மலை வாழ்மக்களுக்கு உதவிகரம் நீட்டிய நமது நெற்றிக்கண்!

Comments Off on தென்காசி மாவட்டத்தில் மலை வாழ்மக்களுக்கு உதவிகரம் நீட்டிய நமது நெற்றிக்கண்!

நாம் ஏற்கனவே தேனி, திருச்சி, புதுக்கோட்டை, மாவட்டங்களில் கொரனா உதவியாக நம் நெற்றிக்கண் பத்திரிக்கை சார்பாக வாழ்வாதரம் இழந்து தவிக்கும் பலருக்கும் அரிசி, மளிகை , காய்கறி என்று பல பொருட்களை இயன்ற அழவில் வழங்கி வருகிறோம். இந்த நிலையில் தான் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள கருப்பாநதி அணையைஒட்டிய மேற்கு தொடர்ச்சி மலையில் வாழ்ந்து வரும் பளியர்கள் எனப்படும் மலை வாழ் பழங்குடி இன மக்களின் இருபதுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் […]

Continue reading …

தமிழிசையை கட்டாயப் பாடமாக்க வேண்டும் – மருத்துவர் ராமதாஸ்!

Comments Off on தமிழிசையை கட்டாயப் பாடமாக்க வேண்டும் – மருத்துவர் ராமதாஸ்!

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரும், பொங்குதமிழ்ப் பண்ணிசை மணிமன்றத்தின் நிறுவனருமான மருத்துவர் ராமதாஸ் எழுதிய ‘இசையின் இசை’ என்ற தலைப்பிலான நூல் வெளியீட்டு விழா இன்று (12.06.2021) சனிக்கிழமை இணையவழியில் நடைபெற்றது. சமூக முன்னேற்ற சங்க பதிப்பகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விழாவில் மருத்துவர் அய்யா அவர்கள் எழுதிய இசையின் இசை நூலை புகழ்பெற்ற பாடகர் மருத்துவர் சீர்காழி கோ.சிவசிதம்பரம் வெளியிட்டார். மக்கள் இசைப் பாடகர் புஷ்பவனம் குப்புசாமி முதல்படியை பெற்றுக் கொண்டார். பொங்குதமிழ்ப் பண்ணிசை […]

Continue reading …

அமெரிக்காவில் சத்குருவின் பெயரில் மருத்துவ ஆராய்ச்சி மையம் தொடக்கம் !

Comments Off on அமெரிக்காவில் சத்குருவின் பெயரில் மருத்துவ ஆராய்ச்சி மையம் தொடக்கம் !
அமெரிக்காவில் சத்குருவின் பெயரில் மருத்துவ ஆராய்ச்சி மையம் தொடக்கம் !

உலக புகழ்பெற்ற ஹார்வெர்ட் மருத்துவப் பள்ளியின் (Harvard Medical School) கீழ் இயங்கும் பெத் இஸ்ரேல் மருத்துவ மையத்தில் (Beth Israel Deaconess Medical Center – BIDMC) ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவின் பெயரில் புதிதாக ஒரு மருத்துவ ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. ‘Sadhguru Center for a Conscious Planet’ என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த மையம் மனிதர்களின் விழிப்புணர்வு, அறிவாற்றல் மற்றும் கருணை ஆகிய 3 முக்கிய அம்சங்கள் மூலம் ஒருவரின் ஆரோக்கியம் […]

Continue reading …

தென்னக மக்கள் இயக்கத்திற்கு போலீசார் தடை !

Comments Off on தென்னக மக்கள் இயக்கத்திற்கு போலீசார் தடை !
தென்னக மக்கள் இயக்கத்திற்கு போலீசார் தடை !

தென்னக மக்கள் இயக்கத்தினரின் வாகனங்களை கன்னியாகுமரி மாவட்ட எல்கையான ஆரல்வாய்மொழியில் போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு . கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரம் பிள்ளையின் 84 வது நினைவு தினத்தையொட்டி நேற்று தமிழகம் முழுவதும் உள்ள அரசியல் கட்சியினர் ஆங்காங்கே மரியாதை செலுத்தினர். அந்த வகையில் நெல்லை மாவட்டத்தில்உள்ள வ உ சி மணிமண்டப சிலைக்கு மரியாதை செலுத்துவதற்காக கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து தென்னக மக்கள் இயக்கம் சார்பில் 60க்கும் மேற்பட்ட வாகனங்களில் ஏராளமானோர் சென்றனர். ஆனால் குமரி […]

Continue reading …

ஆணையருக்கு அல்வா கொடுக்கும் இ.ஓ. ராதாமணி !

Comments Off on ஆணையருக்கு அல்வா கொடுக்கும் இ.ஓ. ராதாமணி !
ஆணையருக்கு அல்வா கொடுக்கும் இ.ஓ. ராதாமணி !

ஜூலை 30 சென்னை சவுக்கார்பேட்டையில் உள்ளது அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில். இந்த கோயிலுடன், 7 இணைப்பு கோயில்கள் உள்ளன. ஒவ்வொரு கோயிலுக்கும் தனித்தனியே நிர்வாக ரீதியிலான சொத்துக்கள் மற்றும் கடைகளும் உள்ளன. இந்த கோயிலில் செயல் அலுவலராக ராதாமணி என்பவர் பொறுப்புக்கு வந்ததும், கோயிலில் எப்படி பணம் சுருட்டவேண்டும் என்பவதற்காக திட்டம் போட்டு, தன்னுடைய சுரண்டல் வேலைகளுக்கு ஒத்துவராத பணியளர்களை கோயிலில் இருந்து, சஸ்பெண்ட் செய்துவிட்டார். கோயிலில் கலெக்ஷன் பிரிவில் பணிபுரியும் மதனகோபால், பார்த்தசாரதி, கணக்கர் மற்றும் மேலாளரான […]

Continue reading …

+2 தேர்வில் 9 ஈஷா வித்யா பள்ளிகளும் 100 சதவீத தேர்ச்சி !

Comments Off on +2 தேர்வில் 9 ஈஷா வித்யா பள்ளிகளும் 100 சதவீத தேர்ச்சி !
+2 தேர்வில் 9 ஈஷா வித்யா பள்ளிகளும் 100 சதவீத தேர்ச்சி !

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வில் அனைத்து ஈஷா வித்யா பள்ளி மாணவர்களும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஈஷா கல்வி அறக்கட்டளை சார்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய கிராமப்புற மாணவர்களுக்கு தரமான கல்வி அளிப்பதற்காக கோவை, ஈரோடு, மேட்டூர், தர்மபுரி, விழுப்புரம், கடலூர், நாகர்கோவில், தூத்துக்குடி, கரூர் ஆகிய 9 இடங்களில் ஈஷா வித்யா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. சுமார் 8 ஆயிரம் பேர் படிக்கும் இப்பள்ளிகளில் இருந்து மொத்தம் 219 மாணவ, மாணவிகள் […]

Continue reading …

கொரோனா கால வாழ்க்கையில் சரியான பாடத்தை கற்றுக்கொண்டீர்களா? குடியரசு துணைத் தலைவர் கேள்வி !

Comments Off on கொரோனா கால வாழ்க்கையில் சரியான பாடத்தை கற்றுக்கொண்டீர்களா? குடியரசு துணைத் தலைவர் கேள்வி !
கொரோனா கால வாழ்க்கையில் சரியான பாடத்தை கற்றுக்கொண்டீர்களா? குடியரசு துணைத் தலைவர் கேள்வி !

ஜூலை 12 கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள சூழலில் வீடுகளுக்குள் முடங்கியிருக்கும் கடந்த சில மாதங்களில் மக்கள் தங்களை சுய பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும் என குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கையாநாயுடு வலியுறுத்தியுள்ளார். இந்தநிலையில், மக்கள் சரியான பாடத்தைக்கற்றுக் கொண்டிருக்கிறார்களா, இது போன்ற நிலையற்ற சூழலைச்சமாளிக்க தங்களைத் தயார்படுத்திக் கொண்டுள்ளனரா என சுயமதிப்பீடு செய்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். கோவிட்-19 பெருந்தொற்று பரவக்காரணங்கள் மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றிய தேடலில் மக்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளுமாறு, […]

Continue reading …