
சென்னை,மே 17 இந்தியா முழுவதும் அனைத்துத் தரப்பு மக்களும் வாழ்வாதாரம் இழந்து தவிப்பதைக் கருத்தில் கொண்டு, கடன் தவணைகளை செலுத்த இந்திய ரிசர்வ் வங்கி 3 மாத கால அவகாசம் வழங்கியுள்ள நிலையில், அதை மதிக்காமல் வாகனக் கடன் தவணைகளை உடனடியாக செலுத்தும்படி கடன்தாரர்களுக்கு தனியார் வங்கிகளும், நிதி நிறுவனங்களும் நெருக்கடி கொடுத்து வருகின்றன. சில நிதி நிறுவனங்கள் வழக்க்கம் போலவே வாடிக்கையாளர்களுக்கு மிரட்டல் விடுத்து வருவது கண்டிக்கத்தக்கது ஆகும். கொரோனா வைரஸ் பரவல் அச்சம் மற்றும் ஊரடங்கு […]
Continue reading …
புது டெல்லி,மே 16 இந்திய வானிலை ஆராய்ச்சித் துறையின் தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம், கேரளாவில் பருவமழை தொடங்குவதற்கான முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு, கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தொடங்கும், வழக்கமான ஜூன் 1-ஆம் தேதியுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு சற்று தாமதமாகத் தொடங்கக்கூடும். கேரளாவில் இந்த ஆண்டு 4 நாட்கள் தாமதமாக, ஜூன் மாதம் 5-ஆம் தேதி பருவமழை தொடங்கக்கூடும். இந்தியப் பருவமழை மண்டலத்தில், முதல்கட்டப் பருவமழை தெற்கு அந்தமான் கடல் பகுதியில் […]
Continue reading …
அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் ட்ரம்ப்புக்கு எதிராக முன்னாள் அதிபர் ஒபாமா பிரச்சாரம் செய்ய இருப்பதாக தகவல் வந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. முக்கியமாக அமெரிக்கா கொரோனாவால் அதிகமான பாதிப்புகளை சந்துத்துள்ளது, சுமார் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தாக்கி அமெரிக்காவில் உயிரிழந்துள்ளனர், பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அமெரிக்காவில் மேற்கொள்ள வேண்டிய மருத்துவ நடவடிக்கைகளை காட்டிலும் சீனா மீது பழி சுமத்துவதிலேயே குறியாக […]
Continue reading …
புது டெல்லி,மே 13 பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கடலோர காவல்படையின் கப்பல் ”சாஷே” மற்றும் இரண்டு இடைமறிக்கும் படகுகள் சி -450 மற்றும் சி -451 ஆகியவற்றை கோவாவில் இருந்து இன்று காணொலி காட்சி மூலம் நாட்டுக்கு அர்ப்பணித்தார். ஐசிஜிஎஸ் சாஷே கப்பலானது கடற்கரையில் இருந்து கடலில் தொலைதூரத்திற்கு கண்காணிப்பு வேலையை மேற்கொள்ளும் கப்பல்களின் வரிசையில் முதலாவது கப்பல் ஆகும். முழுவதும் உள்நாட்டிலேயே அதாவது கோவா ஷிப்யார்ட் லிமிடெட்டில் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட இந்தக் கப்பலில் உலகத் […]
Continue reading …
சென்னை,மே 15 தமிழ் நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு -3 காலகட்டத்தில் 33% பணியாளர்களைக் கொண்டு அரசுப் பணிகள் நடைபெற்று வருகிறது. சமூக விலகலை கடைப்பிடிப்பதற்காகவும் பொதுப் போக்குவரத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்கவும், சனிக்கிழமைகளிலும் அரசுப் பணிகள் மேற்கொள்ளும் நடைமுறையை அறிமுகப்படுத்தி 18.05.2020 அன்றிலிருந்து அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் வாரத்தில் ஆறு நாட்கள் வேலை நாட்களாக அறிவித்து அரசு முடிவெடுத்துள்ளது. மேலும் 18.05.2020 அன்றிலிருந்து தொகுதி-‘அ’ (Group-A) அலுவலர்கள் மற்றும் அந்த ஊதிய விகிதம் […]
Continue reading …
சென்னை,மே 15 தமிழகத்தில் கடந்த 51 நாட்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, தமிழக ஆளுநர், தமிழக முதல்வர் மற்றும் தலைமைச்செயலாளர் உட்பட அனைவரும் கொரோனா தொற்று நோய் ஏற்படுவதை தடுக்கும் நோக்கில் முககவசம் அணிந்து அரசு பணிகள் செய்து வரும் இத்தருவாயில், எந்த சட்டத்தையும் மதிக்காமல் தான்தோன்றிதனமாக தன் இஷ்டத்திற்கு இந்நாள் வரை தொழிலாளர் துறையை சிரழித்து கொண்டியிருக்கும் ஆணையர் நந்தகோபால், பொதுமக்கள் பலரும் வந்து செல்ல கூடிய தனது அலுவலகத்தில் எந்தவித விழிப்புணர்வு இல்லாமல், முககவசம் அணியாமல் […]
Continue reading …
சென்னை,மே 15 ஏர் இந்தியாவுக்கு சொந்தமான AI 1244 விமானம் டாக்காவிலிருந்து வந்து, வியாழனன்று சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்கியது. இந்த விமானத்தில் வந்த பயணிகள் சுமுகமாக வெளியேற சென்னை சுங்கத்துறை ஏற்பாடு செய்தது. 157 பயணிகளுடன் வந்த இந்த விமானம் மதியம் ஒரு மணிக்குத் தரையிறங்கியது. வந்தே பாரத் மிஷன் மூலம் சென்னைக்கு வந்தடைந்த ஏழாவது மீட்பு விமானமாகும் இது. இந்த மீட்பு விமானத்தில் மூலம் வந்த 157 பயணிகளில் 121 பேர் ஆண்கள் 36 பேர் பெண்கள். கோவிட்-19 பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் பின்பற்றி அனைத்து பயணிகளும் சுமுகமாக வெளியேற சென்னை விமான […]
Continue reading …
சென்னை,மே 15 கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கின் காரணமாக வெளி மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்டு, தமிழகத்துக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டு வருகின்றன. அதேநேரத்தில் மராட்டிய மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படாதது வருத்தமளிக்கிறது என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அறிக்கை. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டத்தைச் சேர்ந்த பெண்கள் உட்பட 216 பேர் வேலை தேடி கடந்த சில மாதங்களுக்கு முன் மராட்டியத்திற்கு […]
Continue reading …
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள் கூட்டமைப்பு (ஜாக்டோ- ஜியோ) ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரும், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளருமான க. மீனாட்சி சுந்தரம் உடல்நலக் குறைவால் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். தொடக்கப்பள்ளி ஆசிரியராக பணியைத் தொடங்கிய மீனாட்சி சுந்தரம், இளம் வயதிலேயே ஆசிரியர் சங்க நிர்வாகியாக தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆசிரியர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தார். பின்னர் ஜாக்டோ- ஜியோ ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராகவும் பணியாற்றினார். அரசு ஊழியர்கள்- ஆசிரியர்களுக்கு பல்வேறு உரிமைகளை பெற்றுக் […]
Continue reading …
கோவை மே 13வே மாரீஸ்வரன் அகில பாரத அனுமன் சேனா நிறுவனர் எஸ். வி. ஸ்ரீதர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தனது முகநூலில் மாறுபட்ட கருத்தை பதிவு செய்தாராம். இதனால், கோவை மாநகரம் போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இப்புகாரின் அடிப்படையில் இன்று 13 5 2020 கோவை மாநகர் போத்தனூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட அகில பாரத அனுமன் சேனா நிறுவனர் எஸ். வி. ஸ்ரீதர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு […]
Continue reading …