புதுடெல்லி: கொரோனா வைரஸ் மற்றும் ஊரடங்கை 14-ம் தேதிக்குப் பிறகும் நீடிக்கலாமா என்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதல்வர்களுடனும் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். கடந்த 2-ம் தேதி ஒருமுறை மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் இன்று 2-வது முறையாக ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது பெரும்பாலான மாநிலங்களின் முதல்வர்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தினர். பஞ்சாப் மற்றும் ஒடிசா ஏற்கனவே ஊரடங்கை ஏப்ரல் 14 க்குப் பிறகு தொடர முடிவு […]
Continue reading …புது டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி, நேபாளப் பிரதமர் கே.பி. சர்மா ஒளியுடன் நேற்று தொலைபேசி மூலம் உரையாடினார். கொவிட்-19 பரவலால் ஏற்பட்டுள்ள சிக்கலான நிலையில், இரு நாட்டு மக்களது ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்புக்கு மட்டுமல்லாமல், பிராந்தியத்துக்கும் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து இரு தலைவர்களும் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். கொரோனோ தொற்றுக்கு எதிராக தங்கள் நாடுகளில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றி அவர்கள் விவாதித்தனர். நேபாளத்தில் பிரதமர் ஒளியின் தலைமையின் கீழ் இயங்கும் அரசு மேற்கொண்டுள்ள பேரிடர் மேலாண்மை […]
Continue reading …சென்னை : கொரோனா என்கிற கொடூர கிருமி உலகம் முழுக்க கோரத்தாண்டவமாடி மனித குலத்தையே நிலைகுலைய செய்து கொண்டிருக்கின்ற இச்சூழலில் மனிதர்களை மட்டுமல்ல மனிதத்தையும் காக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் நின்று கொண்டிருக்கிறோம். கிட்டத்தட்ட இருநூறு நாடுகளை சிதைத்து சீரழித்துக்கொண்டிருக்கும் கொரோனா இந்தியாவை இருபத்தைந்தாவது இடத்திலும் இந்திய ஒன்றியத்திலிருக்கும் தமிழ்நாட்டை இரண்டாவது இடத்திலும் தமிழ்நாட்டில் இருக்கும் சென்னையை முதலிடத்திலும் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது. இந்நிலையில் தலைநகரமான சென்னையில் இருந்து தமிழகத்தை ஆளும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் அறத்தோடு […]
Continue reading …வே. மாரீஸ்வரன் கோயம்புத்தூர் : கொரோனா வைரஸ் தொற்று கோவை மாவட்டத்தில் பொதுமக்களை அச்சுறுத்தி ஆட்டிப்படைத்துக் கொண்டு வரும் இந்த நேரத்தில், கொரோனா வைரசால் சுமார் 86 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்துவரும் நிலையில் கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் வசிக்கும் மழை கிராமங்களான சர்க்கார் போரெத்தி, ஜாகிர் போரெத்தி, பச்சன் வயல், சவுக்கு காடு, புதுப்பதி, ஆகிய மலைக்கிராம மலைவாழ் […]
Continue reading …சென்னை: தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்துவது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் தலைமை செயலகத்தில் காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இதில் 19 பேர் கொண்ட குழு, அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் சண்முகம் ஆகியோர் கலந்துக்கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாட்டில் கொரோனா தொற்று குறித்து பரவுவதைக் கண்காணிக்க அமைக்கப்பட்ட மருத்துவ நிபுணர்களின் குழு, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் ஏப்ரல் 14-க்கு பிறகு மேலும் இரண்டு வாரங்கள் ஊரடங்கு […]
Continue reading …சென்னை, ஏப்ரல் 10 கொரோனாவால் வேலையில்லாமல் பாதிக்கப்பட்ட சினிமா பெப்சி தொழிளாளர்களுக்கு 100 அரிசி மூட்டைகளை (2500 kg) வழங்கியுள்ளார் நடிகர் சூரி. துணை நடிகர்கள் சங்கத்திற்கு 20 அரிசி மூட்டைகளை (500 kg) வழங்கியுள்ளார். மேலும் தனது செலவில் ஏழை எளிய மக்கள் 100 பேருக்கு இன்று உணவு அளித்துள்ளார் . நடிகர் சங்கத்திற்கு கொரோனா நிவாரண உதவியாக ரூபாய் ஒரு லட்சம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Continue reading …கொரோனா வைரஸ் பாதிப்பு அச்சுறுத்தலால் ஏற்பட்டுள்ள சூழ்நிலை காரணமாக அஞ்சல் துறை ஆயுள் காப்பீடு/ ஊரக அஞ்சல் ஆயுள் காப்பீடு வாடிக்கையாளர்கள் சந்தா தொகை செலுத்த தபால் நிலையங்களுக்கு செல்வதில் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். அத்தியாவசிய சேவைகள் என்ற அடிப்படையில் சில தபால் நிலையங்கள் செயல்பட்டு வருகிற போதிலும், அவர்களால் அங்கு செல்ல முடியவில்லை. இந்த வாடிக்கையாளர்கள் அனைவரின் வசதி கருதி, தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தபால் துறையின், அஞ்சல் ஆயுள் காப்பீட்டு இயக்குனரகம், […]
Continue reading …உண்மை, சேவை மற்றும் நீதிக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஏசு கிறிஸ்துவின் தியாகத்தை புனித வெள்ளி நாளில் பாரத பிரதமர் நரேந்திர மோடி நினைவுகூர்ந்தார். பிறருக்கு சேவை செய்வதில் ஏசு கிறிஸ்து தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். அவருடைய தைரியமும், அறநெறியும் தனித்துவமானவை. நீதிக்கான அவருடைய நிலைப்பாடும் தனித்தன்மையுடன் தான் இருந்தது. இந்தப் புனித வெள்ளி நாளில் ஏசு கிறிஸ்துவையும், உண்மை, சேவை மற்றும் நீதியில் அவர் கொண்டிருந்த உறுதிப்பாட்டையும் நாம் நினைவில் கொள்வோம் என்று பாரத பிரதமர் […]
Continue reading …மும்பை : கோவிட்-19 முடக்கநிலை அமல் காலத்தில் மும்பையில் உதவி தேவைப்படும் நிலையில் இருப்பவர்களுக்கு உதவி செய்வதற்காக, அடிப்படை உணவுப் பொருட்களைக் கொண்ட ரேஷன் பைகளை இந்திய கடற்படை நிர்வாகம் மாநில அரசிடம் ஒப்படைத்தது. மும்பையில் தவித்து வரும் குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு வழங்குவதற்காக ஏப்ரல் 4 மற்றும் 8 ஆம் தேதிகளில் இவை வழங்கப்பட்டன. முடக்கநிலை காலத்தில் தவித்து வரும் குடிபெயர்ந்த பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க உதவி செய்ய வேண்டும் என்று மும்பை மாநகர […]
Continue reading …