Home » Entries posted by admin (Page 31)
Entries posted by admin

தமிழகத்தில் ஊரடங்கு ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நீட்டிப்பு !

Comments Off on தமிழகத்தில் ஊரடங்கு ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நீட்டிப்பு !

சென்னை : உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று நோயைக் கட்டுப்படுத்தும் வகையில், தமிழ்நாட்டில், கடந்த 24.3.2020 அன்று மாலை 6 மணி முதல் 31.3.2020 வரை ஊரடங்கு உத்தரவு முதலில் பிறப்பிக்கப்பட்டது. பின்னர் மத்திய அரசு அதை 15.4.2020 அன்று காலை வரை நீட்டித்தது. ஊரடங்கு உத்தரவு தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருவதன் காரணமாக தமிழ்நாட்டில் நோய்த் தொற்று பெரிய அளவில் பரவாது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது உள்ள ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது […]

Continue reading …

முதல்வரின் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி!

Comments Off on முதல்வரின் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி!
முதல்வரின் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி!

முதலமைச்சர் எடப்பாடி மு. பழனிசாமி அவர்களின் தமிழ்ப் புத்தாண்டு  வாழ்த்துச் செய்தி :  தமிழ்ப் புத்தாண்டு மலர்கின்ற இந்த இனிய நாளில் எனது அன்பிற்குரிய தமிழ்ப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். “கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே,   வாளோடு முன் தோன்றி மூத்த குடி” என்ற பாடலுக்கேற்ப, தொன்மையிலும், பன்முகத்தன்மையிலும், ஈடு இணையில்லா பண்பாட்டுப் பெருமை கொண்ட தமிழ்ப் பெருமக்கள் பன்னெடுங்காலமாய் சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக […]

Continue reading …

நிறைவான நலத்தையும், நித்தம் மலரும் எழுச்சியை வழங்கும் ஆண்டாக அமையும்

Comments Off on நிறைவான நலத்தையும், நித்தம் மலரும் எழுச்சியை வழங்கும் ஆண்டாக அமையும்
நிறைவான நலத்தையும், நித்தம் மலரும் எழுச்சியை வழங்கும் ஆண்டாக அமையும்

  இந்திய தேசிய லீக் மாநிலபொதுச் செயலாளர் ஜூக்கிருத்தீன் அஹமது வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்:   தமிழ்ப் புத்தாண்டு தினமானது, ஆண்டுதோறும் சித்திரைத் திங்கள் முதல் நாளன்று நமது மக்களிடையே அமைதி, வளம், மகிழ்ச்சியை உண்டாக்கும் வகையில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நன்னாளில் தமிழக மக்கள் அனைவருக்கும் என்னுடைய இதய பூர்வமான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இப்புத்தாண்டு தமிழர்களின் உள்ளங்களில் நம்பிக்கை, நற்சிந்தனை, வெற்றி ஆகியவற்றை தழைத்தோங்கச் செய்யும் என நான் நம்புகிறேன்.     இயன்றதை செய்வோம், […]

Continue reading …

கும்பகோணம் to புதுச்சேரி சைக்கிளிலேயே மனைவியை அழைத்து சென்ற கணவர் !

Comments Off on கும்பகோணம் to புதுச்சேரி சைக்கிளிலேயே மனைவியை அழைத்து சென்ற கணவர் !
கும்பகோணம் to புதுச்சேரி சைக்கிளிலேயே மனைவியை அழைத்து சென்ற கணவர் !

சிற்பி புதுச்சேரியில் உள்ளது ஜிப்மர் மருத்துவமனை. இங்கு கேன்சருக்கான சிகிச்சை அளிக்கப்படுவதால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் நோயாளிகள் இங்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த நிலையில் வயதானவர் ஒருவர் தனது மனைவியை சைக்கிளின் பின்னால் உட்கார வைத்துக்கொண்டு ஜிப்மர் மருத்துவமனைக்குள் வந்தார். அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்தவர்கள் எங்கே செல்கின்றீர்கள் என்று கேட்டனர். அதற்கு கேன்சர் சிகிச்சை பிரிவுக்கு என்று கூறியுள்ளனர். அவர்களும் அதற்கான இடத்தை காண்பித்து அனுப்பி வைத்தனர். ஆனால் அந்த கட்டடத்தின் வாயிலில் […]

Continue reading …

தன்னார்வலர்கள் நிவாரணம் வழங்க தடை விதிக்கவில்லை தமிழக அரசு விளக்கம் !

Comments Off on தன்னார்வலர்கள் நிவாரணம் வழங்க தடை விதிக்கவில்லை தமிழக அரசு விளக்கம் !
தன்னார்வலர்கள் நிவாரணம் வழங்க தடை விதிக்கவில்லை தமிழக அரசு விளக்கம் !

சென்னை : தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் நிவாரணம் வழங்க எந்த தடையும் இல்லை, வழிமுறைகளில் தான் மாற்றம் செய்யப்பட்டுள்ளது தமிழ்நாடு அரசு விளக்கம். சுனாமி, பெரு வெள்ளம், ஒகி புயல், வர்தா புயல் போன்ற பேரிடர் காலங்களில் பொது மக்களின் வீடுகள், தினசரி உபயோகப் பொருட்கள், வாழ்வாதாரம் போன்றவை இழந்து நின்ற சோதனையான காலகட்டத்தில் தன்னார்வலர்கள் மற்றும் அமைப்புகள் செய்த பணிகள் மகத்தானது. அதை தமிழ்நாடு அரசு மனமுவந்து பாராட்டியதே தவிர, நிவாரணம் வழங்க எந்த ஒரு கட்டுப்பாடும் […]

Continue reading …

இயற்கையை மதித்து, பேரழிவை தவிர்க்க சித்திரைத் திருநாளில் உறுதியேற்போம் – இராமதாஸ்

Comments Off on இயற்கையை மதித்து, பேரழிவை தவிர்க்க சித்திரைத் திருநாளில் உறுதியேற்போம் – இராமதாஸ்
இயற்கையை மதித்து, பேரழிவை தவிர்க்க சித்திரைத் திருநாளில் உறுதியேற்போம் – இராமதாஸ்

வசந்த விழா கொண்டாட்டங்களுக்கு வழிவகுக்கும் சித்திரை திருநாளை உலகெங்கும் கொண்டாடும் தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வாழ்த்துச் செய்தி. ஒரு காலத்தில் சித்திரை மாதம் செல்வம் பொங்கும் மாதமாக திகழ்ந்தது. காரணம் சித்திரையில் தான் அறுவடை முடிந்து களஞ்சியங்கள் நிறையும். அப்போது மக்கள் வாழ்வில் வளம் கொழிக்கும்  என்பதால் சித்திரை மாதம் முழுவதும் ஊர் முழுக்க திருவிழாக்கள் நடைபெறும். சித்திரை முழுநிலவு நாளில்தான் மாமல்லபுரத்திலும், பூம்புகாரிலும் இந்திர […]

Continue reading …

தமிழகத்தில் கொரோனா தொற்று 1000-த்தை கடந்தது !

Comments Off on தமிழகத்தில் கொரோனா தொற்று 1000-த்தை கடந்தது !
தமிழகத்தில் கொரோனா தொற்று 1000-த்தை கடந்தது !

சென்னை : தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. இன்று மட்டும் 106 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும், தேசிய அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, தமிழகத்தில் 1075 பேருடன் இரண்டாவது இடத்தில் உள்ளது, அதேபோல் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று 50 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். தமிழகத்தில் 8 மருத்துவர்கள் மற்றும் 5 செவிலியர்கள் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 10,655 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. சென்னையில் 199 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் […]

Continue reading …

தன்னார்வலர்கள் தனியாக நிவாரணப்பொருட்கள் தர அரசு தடை

Comments Off on தன்னார்வலர்கள் தனியாக நிவாரணப்பொருட்கள் தர அரசு தடை
தன்னார்வலர்கள் தனியாக நிவாரணப்பொருட்கள் தர அரசு தடை

சென்னை : கொரோனா தொற்று நோய் பரவுவதை தடுக்க, ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், சில மாவட்டங்களில் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்கள், மக்களுக்கு உதவுவதாக கூறிக்கொண்டு , சமைத்த உணவையும், பொருட்களையும் விநியோகம் செய்வதாக ஊடகங்கள் மூலமாக தெரியவருகிறது. மக்கள்  வீட்டை விட்டு வெளியில் வருவதையும், கூட்டம் கூடுவதையும் தவிர்த்து, அதன் மூலம் சமூக இடைவெளியை பின்பற்றி தொற்று நோய் பரவுவதை தடுக்கவே, தேசிய பேரிடர் மேலாண்மை சட்டப்படியும், குற்றவியல் நடைமுறை  சட்டம் பிரிவு 144-ன் […]

Continue reading …

இரட்டை அடுக்கு கதர் முகக்கவசங்களை உருவாக்கியுள்ள காதி !

Comments Off on இரட்டை அடுக்கு கதர் முகக்கவசங்களை உருவாக்கியுள்ள காதி !
இரட்டை அடுக்கு கதர் முகக்கவசங்களை உருவாக்கியுள்ள காதி !

இரட்டை அடுக்கு கதர் முகக்கவசம் ஒன்றை வெற்றிகரமாக உருவாக்கியுள்ள காதி மற்றும் கிராமப்புறத் தொழிற்சாலைகள் ஆணையம், அதை அதிக அளவில் விநியோகிப்பதற்கான தருவிப்பு ஆணைகளைப் பெற்றுள்ளது. அதன் வெற்றிக்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக, ஜம்மு காஷ்மீர் அரசுக்கு மட்டுமே 7.5 லட்சம் கவசங்களை வழங்க ஒரு ஆர்டரை அது பெற்றுள்ளது. இதில், 5 லட்சம் முகக்கவசங்கள் ஜம்மு மாவட்டத்துக்கும், ஒரு லட்சத்து நாற்பதாயிரம் புல்வாமா மாவட்டத்துக்கும், ஒரு லட்சம் உதம்பூர் மாவட்டதுக்கும் மற்றும் 10,000 குப்வாரா மாவட்டத்துக்கும் […]

Continue reading …

கள்ளச் சாராயம் கடத்தில் ட்ரோன் மூலம் கண்காணிப்பு !

Comments Off on கள்ளச் சாராயம் கடத்தில் ட்ரோன் மூலம் கண்காணிப்பு !

வேலூர் அடுத்த புலிமேடு கிராமத்தில் கள்ளச் சாராயம் கடத்தில் ஈடுபட்டு வருபவர்களை ட்ரோன் மூலம் காவல் துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

Continue reading …