Home » Entries posted by admin (Page 35)
Entries posted by admin

அனைத்து கட்சி கூட்டம் : எடப்பாடி பழனிசாமிக்கு மோடி அழைப்பு !

Comments Off on அனைத்து கட்சி கூட்டம் : எடப்பாடி பழனிசாமிக்கு மோடி அழைப்பு !
அனைத்து கட்சி கூட்டம் : எடப்பாடி  பழனிசாமிக்கு மோடி அழைப்பு !

சென்னை : இந்தியாவில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து ஏப். 8-ம் தேதி அனைத்து கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி, வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாட உள்ளார்.இது தொடர்பாக இன்று பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடினார். அப்போது அனைத்துக்கட்சி கூட்டத்தில் அ.இ.அ.தி.மு.க. சார்பில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தார்.

Continue reading …

கல்விக் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை – அமைச்சர் செங்கோட்டையன் !

Comments Off on கல்விக் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை – அமைச்சர் செங்கோட்டையன் !
கல்விக் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை – அமைச்சர் செங்கோட்டையன் !

ஈரோடு : கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ளது. நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே சில தனியார் பள்ளிகள் அடுத்த கல்வி ஆண்டுக்கான கல்விக் கட்டணத்தை வசூலிப்பதாகப் புகார் எழுந்துள்ளது.  ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டி பாளையத்தில் நடமாடும் காய்கறி விற்பனை அங்காடியை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து பேசிய அவர் சில தனியார் பள்ளிகள், ஊரடங்கின்போது கல்விக் […]

Continue reading …

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மகாவீர் ஜெயந்திவாழ்த்து !

Comments Off on முதல்வர் எடப்பாடி பழனிசாமி மகாவீர் ஜெயந்திவாழ்த்து !
முதல்வர் எடப்பாடி பழனிசாமி மகாவீர் ஜெயந்திவாழ்த்து !

சென்னை : பகவான் மகாவீரர் அவர்களின் பிறந்த தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் சமண சமயப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த மகாவீர் ஜெயந்தி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அகிம்சையை அடிப்படையாக கொண்ட சமண சமயத்தின் 24-வது தீர்த்தங்கரராக விளங்கிய பகவான் மகாவீரர் அவர்கள், மூன்று ரத்தினங்கள் எனப்படும் நன்னம்பிக்கை, நல்லறிவு, நன்னடத்தை ஆகியவற்றை மக்களுக்கு போதித்ததோடு, பிற உயிர்களுக்கு தீங்கு செய்யாமையே அறம் என்றுரைத்து, வாய்மையைப் போற்றி, ஆசைகளைக் களைந்து, பற்றற்ற நிலையைக் கடைப்பிடித்து, அறநெறியினை […]

Continue reading …

மாதக்கடன் தவணை ஒத்திவைப்பு ஏமாற்று வேலை ஆகிவிடக்கூடாது – மருத்துவர் இராமதாசு !

Comments Off on மாதக்கடன் தவணை ஒத்திவைப்பு ஏமாற்று வேலை ஆகிவிடக்கூடாது – மருத்துவர் இராமதாசு !
மாதக்கடன் தவணை ஒத்திவைப்பு ஏமாற்று வேலை ஆகிவிடக்கூடாது –  மருத்துவர் இராமதாசு !

கொரோனா வைரஸ் நோய்ப் பரவல் அச்சம் மற்றும் ஊரடங்கு காரணமாக வருவாய் இழந்தவர்களின் பொருளாதார நெருக்கடியை தற்காலிகமாக தீர்க்கும் வகையில் அனைத்து வகை கடன்களுக்கான மாதத் தவணையை 3 மாதங்களுக்கு ஒத்திவைக்கும் திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. ஆனால், இதில் நிவாரணம் அளிப்பதற்கு பதிலாக அபராதம் வசூலிக்க வகை செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. மாதக்கடன் தவணையை ஒத்திவைப்பது தொடர்பாக ஒவ்வொரு வங்கியும், ஒவ்வொரு அணுகுமுறையை கடைபிடிக்கின்றன. சில வங்கிகள் தாங்களாகவே கடன் தவணையை ஒத்திவைத்துள்ளன. இன்னும் சில வங்கிகள் வாடிக்கையாளர்கள் […]

Continue reading …

பிரதமர் நரேந்திர மோடி சொன்ன 10 முக்கிய விஷயங்கள் !

Comments Off on பிரதமர் நரேந்திர மோடி சொன்ன 10 முக்கிய விஷயங்கள் !
பிரதமர் நரேந்திர மோடி சொன்ன 10 முக்கிய விஷயங்கள் !

புதுடெல்லி: கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் நாட்டின் ‘கூட்டு சக்தியின்’ முக்கியத்துவத்தை பிரதமர் நரேந்திர மோடி அடிக்கோடிட்டுக் காட்டினார், ஏப்ரல் 5, ஞாயிற்றுக்கிழமை, ஒன்பது நிமிடங்கள் மெழுகுவர்த்தி, விளக்கு, ஒளிரும் விளக்கு அல்லது மொபைல் ஆகியவற்றைப் பிடித்துக் கொண்டு நாட்டு மக்கள் தங்கள் வீடுகளின் பால்கனியில் நிற்குமாறு கேட்டுக் கொண்டனர். ஒளிரும் விளக்கை எரிக்க மேல்முறையீடு செய்யப்பட்டது. பிரதமர் மோடியின் வீடியோ செய்தியைப் பற்றி 10 முக்கிய விஷயங்களை அறிந்து கொள்வோம் இது நிச்சயமாக பூட்டுதலுக்கான […]

Continue reading …

தமிழக அரசு அறிவித்தப்படி, இன்று முதல் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ. 1000 விநியோகம் !

Comments Off on தமிழக அரசு அறிவித்தப்படி, இன்று முதல் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ. 1000 விநியோகம் !
தமிழக அரசு அறிவித்தப்படி, இன்று முதல் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ. 1000 விநியோகம் !

சென்னை: இன்று முதல் தமிழகத்தில் குடும்ப அட்டை வைத்திருக்கும் 88 லட்சத்து 29 ஆயிரம் பேருக்கு 1000 ரூபாய் பணம் வழங்கப்பட உள்ளது. இதற்காக 1,882 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக மக்கள் வீடுகளில் தங்கி உள்ளனர். அவசர தேவையின்றி யாரும் வெளியே வரக்கூடாது என்று அரசு அறிவித்துள்ளது. இதனால் ஒரே நேரத்தில் பல குடும்ப அட்டைகார்கள் கடைக்கு வந்தால், கூட்ட நெரிசல் ஏற்படும் எனப்தால், அதை கட்டுப்படுத்தும் வகையில் ரேஷன் கடைகளில் […]

Continue reading …

தேனி அம்மா உணவகத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் ஆய்வு !

Comments Off on தேனி அம்மா உணவகத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் ஆய்வு !
தேனி அம்மா உணவகத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் ஆய்வு !

தேனி : தேனி பழைய பேருந்து நிலையத்தில் செயல்படும் அம்மா உணவகத்தில் இட்லி, பொங்கல் சாப்பிட்டு உணவின் தரத்தை ஆய்வு செய்தார் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளன. அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள், சந்தைகள் மற்றும் அம்மா உணவகங்கள் மட்டும் செயல்பட்டு வருகின்றன. மாநில அரசுகளும் மக்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியத்தையும் வெளியே வந்தால் […]

Continue reading …

அம்மா உணவகத்தில் முதல்வர் ஆய்வு !

Comments Off on அம்மா உணவகத்தில் முதல்வர் ஆய்வு !
அம்மா உணவகத்தில் முதல்வர் ஆய்வு !

சென்னை சாந்தோமில் உள்ள அம்மா உணவகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு செய்தார். அங்கு சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறதா, உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தார். அங்கு தயார் செய்யப்பட்ட இட்லியை சாப்பிட்டு பார்த்தார். இதன் பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, நிருபர்களிடம் கூறுகையில், ஏழை, எளிய மக்களுக்காக அம்மா உணவகம் தமிழகம் முழுவதும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பல்வேறு மாநிலங்களால் பாராட்டப்பட்ட, இந்த திட்டம் மக்களுக்கு பெரிதும் பயன்படுகிறது. பல மாநிலங்களும் அமல்படுத்தியுள்ளன. ஒரு ரூபாய்க்கு […]

Continue reading …

ரெட் அலர்ட்டாக மாறும் கோவை.! தாய்லாந்து தொடர்பால் தொற்று அதிகரிப்பு!!

Comments Off on ரெட் அலர்ட்டாக மாறும் கோவை.! தாய்லாந்து தொடர்பால் தொற்று அதிகரிப்பு!!
ரெட் அலர்ட்டாக மாறும் கோவை.! தாய்லாந்து தொடர்பால் தொற்று அதிகரிப்பு!!

வே. மாரீஸ்வரன் கோவை : கடந்த மார்ச் 21 முதல் 24 வரை டெல்லியில் சர்வதேச இஸ்லாமிய மாநாடு நடந்தது. இதில், தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா, உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். கோவை மாவட்டத்தில் கோவை, அன்னூர், மேட்டுப்பாளையம், ஆனைமலை, பொள்ளாச்சி, பகுதிகளைச் சேர்ந்த சுமார் 82 பேர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விட்டு திரும்பி வந்தனர்.டெல்லியில் நடைபெற்ற இஸ்லாமிய கருத்தரங்கில் பங்கேற்று விட்டு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு சென்ற தாய்லாந்து சுற்றுலா பயணிகள் மூலமே பாதிப்பு […]

Continue reading …

பிரதமர் மற்றும் தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தலா ரூ.1 கோடி வழங்கினார் ஆளுநர் புரோஹித் !

Comments Off on பிரதமர் மற்றும் தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தலா ரூ.1 கோடி வழங்கினார் ஆளுநர் புரோஹித் !
பிரதமர் மற்றும் தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தலா ரூ.1 கோடி வழங்கினார் ஆளுநர் புரோஹித் !

சென்னை : கரோனா வைரஸ் தடுப்பு மற்றும் நிவாரணத்துக்காக பிரதமர் மற்றும் தமிழக முதல்வர் பொது நிவாரண நிதிகளுக்கு தலா ரூ.1 கோடியை தன் விருப்புரிமை நிதியில் இருந்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வழங்கியுள்ளார். இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கரோனா வைரஸ் பரவு வதை தடுக்கும் மத்திய, மாநில அரசுகளின் முயற்சிகளுக்கு தோள்கொடுக்கும் வகையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பிரதமரின் பொதுமக்கள் உதவி மற்றும் அவசரகால நிதி மற்றும் தமிழக முதல்வர் பொது […]

Continue reading …