Home » Entries posted by admin (Page 41)
Entries posted by admin

ராமேசுவரத்தில் முழு அரசு மரியாதையுடன் அப்துல் கலாம் உடல் நல்லடக்கம் !

Comments Off on ராமேசுவரத்தில் முழு அரசு மரியாதையுடன் அப்துல் கலாம் உடல் நல்லடக்கம் !

குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் உடல் முழு அரசு மரியாதையுடன் ராமேசுவரத்தில் பேக்கரும்பு எனும் இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. நல்லடக்கம் முடிந்ததும் இஸ்லாமிய மத குரு தலைமையில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. அவரது உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர், முன்னதாக, மோடியும், ராகுலும் டெல்லியில் இருந்து தனித்தனியாக மதுரைக்கு விமானம் மூலம் வந்தனர். பின்னர் அங்கிருந்து ராகுல் காரில் ராமேஸ்வரம் புறப்பட்டுச் […]

Continue reading …

கலங்கரை விளக்கம் சாய்ந்தது !

Comments Off on கலங்கரை விளக்கம் சாய்ந்தது !

வெகுளித்தனமாக வேறொரு வகுப்பறைக்குள் நுழைந்துவிட்டான் அந்த மாணவன். வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்தவர், அந்த மாணவனின் கணக்கு வாத்தியார் ராமகிருஷ்ண அய்யர். அவனைப் பார்த்தவுடனே, கழுத்தைப் பிடித்து, எல்லா மாணவர்களின் முன்னிலையிலும் பிரம்பால் விளாசித் தள்ளிவிட்டார். இந்தச் சம்பவம் நடந்து பல மாதங்கள் கழிந்தது. அதே ஆசிரியர், அந்த மாணவனை காலை பிரார்த்தனைக் கூட்டத்தில் வெகுவாகப் பாராட்டினார். காரணம், அவன் கணக்கில் நூற்றுக்கு நூறு வாங்கியிருந்தான். ‘என்னிடம் உதைபடுகிற மாணவன், மகத்தானவனாக மாறுவான்’ என்று பெருமிதமாக வேறு […]

Continue reading …

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் காலமானார் !

Comments Off on முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் காலமானார் !

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் காலமானார். அவருக்கு வயது 84.ஷில்லாங்கில் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் மாணவர்களிடத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த போது திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட மயங்கி விழுந்தார். இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் உயிர் பிரிந்தது. அவரை அனுமதிக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.மேகாலயா ஆளுநர் வி.சண்முக நாதன், […]

Continue reading …

நாடாளுமன்றம் நாளை கூடுகிறது: கூட்டணி தலைவர்களுடன் மோடி இன்று முக்கிய ஆலோசனை !

Comments Off on நாடாளுமன்றம் நாளை கூடுகிறது: கூட்டணி தலைவர்களுடன் மோடி இன்று முக்கிய ஆலோசனை !

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நாளை தொடங்கி ஆகஸ்ட் 13-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் வியாபம், லலித் மோடி விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதால் மழைக்கால தொடரில் கடும் புயல் வீசும் என்று தெரிகிறது. எதிர்க்கட்சிகளை சமாளிப்பது தொடர்பாக கூட்டணி கட்சிகளின் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார். மத்தியப் பிரதேசத்தை மையம் கொண்டுள்ள வியாபம் ஊழல் நாடு முழுவதும் பெரும் அதிர் வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஊழல் வழக்குகளில் தொடர்புடைய […]

Continue reading …

என்னிடம் பணம் பறிக்க முயற்சி: ரஜினி பரபரப்பு புகார்!

Comments Off on என்னிடம் பணம் பறிக்க முயற்சி: ரஜினி பரபரப்பு புகார்!

சென்னை: “என் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவும், என்னிடம் பணம் பறிக்கவும் முகுன்சந்த் போத்ரா முயற்சிக்கிறார். போத்ராவின் வழக்கை தள்ளுபடி செய்து, அவருக்கு அபராதம் விதிக்க வேண்டும்” என்று  நடிகர் ரஜினிகாந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறியுள்ளார். சென்னையை சேர்ந்த எஸ்.முகுன்சந்த் போத்ரா என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்,” சினிமா இயக்குனர் கஸ்தூரிராஜா, என்னிடம் கடந்த 2012ஆம் பல லட்சம் கடன் வாங்கினார். அப்போது, தன் மகன் தனுஷ், நடிகர் ரஜினிகாந்தின் […]

Continue reading …

நல்ல நடிகன் என்று பெயர் வாங்குவதில்தான் மகிழ்ச்சி: கமல்ஹாசன் பெருமிதம் !

Comments Off on நல்ல நடிகன் என்று பெயர் வாங்குவதில்தான் மகிழ்ச்சி: கமல்ஹாசன் பெருமிதம் !

‘‘நான் பட்டங்களை பெரிதாக எடுத் துக்கொள்வதில்லை. நல்ல நடிகன் என்று பெயர் வாங்குவதில்தான் என் மகிழ்ச்சி இருக்கிறது’’ என்று நடிகர் கமல்ஹாசன் பேசி னார். மலையாளத்தில் மோகன் லால் நடித்த த்ரிஷ்யம் திரைப் படத்தை தழுவி, கமல்ஹாசன், கவுதமி நடிப்பில் வெளிவந்திருக் கும் ‘பாபநாசம்’ படத்துக்கு ரசிகர் களிடம் வரவேற்பு கிடைத்துள் ளதை அடுத்து, படக்குழுவினருடன் கமல்ஹாசன் நேற்று பத்திரிகை யாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: இந்தப் படத்தை தமிழில் கமல் நடித்தால் நன்றாக இருக்கும் […]

Continue reading …

5 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-28 ராக்கெட்: நாளை விண்ணில் பாய்கிறது – 62 மணி நேர கவுன்ட்டவுன் தொடங்கியது !

Comments Off on 5 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-28 ராக்கெட்: நாளை விண்ணில் பாய்கிறது – 62 மணி நேர கவுன்ட்டவுன் தொடங்கியது !

பிரிட்டன் நாட்டின் செயற்கை கோள்களை ஏந்தி பி.எஸ்.எல்.வி. சி-28 ராக்கெட் நாளை இரவு விண்ணில் செலுத்தப்படவுள்ளது. அதற்கான 62 மணி 30 நிமிட கவுன்ட்டவுன் நேற்று காலை 7.28 மணிக்கு தொடங்கியது. 5 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி ராக்கெட் நாளை இரவு 9.58 மணிக்கு ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து விண்ணில் செலுத்தப்படுகிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் வணிக ரீதியில் செயற்கை கோள்களை அனுப்பி வருகிறது. அதிக எடை கொண்ட செயற்கை கோள்களை வணிக […]

Continue reading …

இந்திய கிராமங்கள் வறுமையிலிருந்து விடுபடுவதே உண்மையான வளர்ச்சி: ராமதாஸ் !

Comments Off on இந்திய கிராமங்கள் வறுமையிலிருந்து விடுபடுவதே உண்மையான வளர்ச்சி: ராமதாஸ் !

இந்தியப் பொருளாதாரத்தின் மதிப்பு 3 லட்சம் கோடி டாலர் என்ற அளவுக்கு வளர்ச்சியடைவதைவிட, கிராம மக்கள் வறுமையிலிருந்து விடுபட்டனர் என்பதே மகிழ்ச்சியளிக்கும் வளர்ச்சியாக இருக்கும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”இந்தியா தொடர்பாக நேற்று வெளியிடப்பட்ட இரு புள்ளிவிவரங்கள் ஒன்றுடன் ஒன்று சம்பந்தமில்லாத இருவேறு இந்தியாக்கள் இருப்பதை உலகிற்கு எடுத்துக்காட்டியுள்ளன. முதலாவது, இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு (Gross Domestic Product -GDP) 2 லட்சம் கோடி […]

Continue reading …

ஹெல்மெட் இன்று முதல் அவசியம்: மீறினால் ஆவணங்கள் பறிமுதல்!

Comments Off on ஹெல்மெட் இன்று முதல் அவசியம்: மீறினால் ஆவணங்கள் பறிமுதல்!

சென்னை: தமிழகத்தில் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டிச் செல்வது இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. அதை மீறி ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்றால் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரிக்கைப்பட்டு உள்ளது.இருசக்கர வாகனத்தில் பயணிப்பவர்கள் ஹெல்மெட் கட்டாயமாக அணிய வேண்டும் என்று சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கி தமிழக அரசும் அரசாணை வெளியிட்டது.அதன்படி, இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்பதுடன், உடன் பயணிப்பவர்களும் கட்டாயமாக […]

Continue reading …

பா.ஜ.க. ஆட்சியில் ஊழலுக்கு முடிவு கட்டி இருக்கிறோம்: பிரதமர் மோடி பெருமிதம்!

Comments Off on பா.ஜ.க. ஆட்சியில் ஊழலுக்கு முடிவு கட்டி இருக்கிறோம்: பிரதமர் மோடி பெருமிதம்!

மதுரா: பா.ஜ.க. ஆட்சியில் ஊழலுக்கு முடிவு கட்டி இருக்கிறோம் என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்து உள்ளார்.மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. கூட்டணி அரசு கடந்த ஆண்டு மே மாதம் 26 ஆம் தேதி பதவி ஏற்றது. மோடி அரசு ஆட்சிக்கு வந்து நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்தது. இந்த ஓராண்டு நிறைவை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாட ஆளும் பா.ஜ.க. திட்டமிட்டு உள்ளது. அந்த வகையில் நாடு முழுவதும் ஒரு வாரம் பெரிய அளவில் […]

Continue reading …