Home » Entries posted by admin (Page 7)
Entries posted by admin

சென்னை விமான நிலையத்தில் ரூ.22.31 லட்சம் மதிப்பில் தங்கம் பறிமுதல், ஒருவர் கைது!

Comments Off on சென்னை விமான நிலையத்தில் ரூ.22.31 லட்சம் மதிப்பில் தங்கம் பறிமுதல், ஒருவர் கைது!

உளவுப் பிரிவினரிடமிருந்து கிடைத்தத் தகவலின் அடிப்படையில் 17.09.2021 அன்று இரவு 9 மணிக்கு ஏர் அரேபியா  ஜி9-473 என்ற விமானத்தில் சார்ஜாவில் இருந்து பயணம் செய்த 53 வயது ஆண் பயணியை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அவரை சோதனையிட்டதில் 80 கிராம் எடையுள்ள தங்க சங்கிலியை அவரது முழுக்கால்சட்டை பையில் மறைத்து எடுத்து வந்திருப்பது தெரியவந்தது. மேலும் ரூ. 16,30,590 மதிப்பில் 310 கிராம் எடையிலான தங்கத்தை தமது உடலில் அவர் மறைத்து எடுத்து வந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இது தவிர, அவர் கொண்டு வந்திருந்த பையில் ரூ. 6,00,200 மதிப்பிலான மின்னணு பொருட்களையும் முறைகேடாக மறைத்து […]

Continue reading …

படகு இல்லாத மீனவர்களுக்கும் கிசான் அட்டை – மத்திய இணை அமைச்சர் எல். முருகன் !

Comments Off on படகு இல்லாத மீனவர்களுக்கும் கிசான் அட்டை – மத்திய இணை அமைச்சர் எல். முருகன் !

படகு இல்லாத மீனவர்களுக்கும் கிசான் அட்டையை மத்திய அரசு வழங்க உள்ளது என மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் மீனவ மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் திரு. எல். முருகன், தமிழக மீன்வள இயக்குனர் பழனிசாமி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், […]

Continue reading …

சாகித்ய அகாடமி விருது பெற்றவர்களுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

Comments Off on சாகித்ய அகாடமி விருது பெற்றவர்களுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

உலக இலக்கியங்களைத் தமிழுக்கும், தமிழ் இலக்கியங்களை உலங்கெங்கும் எடுத்துச் செல்லும் அறிவுப் பண்டமாற்று என்பது பெரும்பணி – அரும்பணி.  அத்தகைய அரும்பணியில், மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது, வங்கத்துக் கவிஞர் தாகூரின் புதினத்தைத் தமிழில் வடித்துள்ள முனைவர் கா.செல்லப்பன், உலகப் பொதுமறையாம் திருக்குறளை இந்தியில் மொழிபெயர்த்துள்ள இராகவன், கவிஞர் சல்மா அவர்களின் இரண்டாம் ஜாமங்களின் கதை புதினத்தை மராத்தியில் மொழிபெயர்த்துள்ள சோனாலி நவாங்குள் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.  அனைத்து விருதாளர்களுக்கும் வாழ்த்துகள் – பாராட்டுகள். 

Continue reading …

ஜனநாயக விரோத ஒன்றிய அரசை கண்டித்து போராட்டம் – தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆதரவு!

Comments Off on ஜனநாயக விரோத ஒன்றிய அரசை கண்டித்து போராட்டம் – தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆதரவு!

மக்கள் விரோத – ஜனநாயக விரோத ஒன்றிய அரசை கண்டித்து வரும் 20ஆம் தேதி, கூட்டணிக் கட்சிகளின் சார்பில் நடைபெறும் கண்டனப் போராட்டத்திற்கு ஆதரவளிப்பதோடு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி பங்கேற்கிறது. நாடு முழுவதும் 19 கட்சிகளின் சார்பில், வரும் செப்டம்பர் மாதம் 20- ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 30- ஆம் தேதி வரை, பல்வேறு போராட்டங்கள் நடைபெற உள்ளது. இதில், பொதுத்துறைகளை தனியார் மயமாக்குவதைக் கைவிட வேண்டும், கொரோனா தடுப்பூசித் திட்டத்தை நாடு முழுவதும் […]

Continue reading …

விஜய் மக்கள் இயக்கம் தேர்தலில் போட்டி!

Comments Off on விஜய் மக்கள் இயக்கம் தேர்தலில் போட்டி!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிட உள்ளதாகத்தகவல் வெளியாகிறது. தமிழகத்தில் வரும் அக்டோபர் 6,7 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்ப்யு மனுதாக்கல் தற்போது நடைபெற்று வருகிறது. மேலும் செப்டம்பர் 22 ஆம் தேதிதான் வேட்புமனுதாக்கல் கடைசித் தேதி என்பதல் முக்கிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் இதில் போட்டியிட உள்ளன. இந்நிலையில்ல் நடிகர் விஜய்யின் விஜய் மக்கள் இயக்கம் இத்தேர்தலில் போட்டியிட […]

Continue reading …

மரம் தங்கசாமி நினைவு நாள் !

Comments Off on மரம் தங்கசாமி நினைவு நாள் !

காவேரி கூக்குரல் மூலம் 2.37 லட்சம் மரக்கன்றுகளை நட்ட விவசாயிகள் மறைந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் மரம் தங்கசாமி ஐயாவின் நினைவு தினத்தை முன்னிட்டு காவேரி கூக்குரல் இயக்கம் மூலமாக தமிழ்நாடு முழுவதும் 2.37 லட்சம் மரக்கன்றுகளை விவசாயிகள் தங்கள் நிலங்களில் நடவு செய்து ஆச்சரியப்படுத்தி உள்ளனர். அதன்படி, புதுக்கோட்டை, திருச்சி, திருவாரூர், பெரம்பலூர், தஞ்சாவூர், சேலம், ஈரோடு, தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், கடலூர், விழுப்புரம் காஞ்சிபுரம், திருவள்ளூர் என 30-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் […]

Continue reading …

சென்னை விமான நிலையத்தில் 3.125 கிலோ தங்கம் பறிமுதல் !

Comments Off on சென்னை விமான நிலையத்தில் 3.125 கிலோ தங்கம் பறிமுதல் !

வருவாய் புலனாய்வு இயக்குநரகத்திடமிருந்து கிடைத்த பிரத்யேக தகவலின் அடிப்படையில் 10.09.2021 அன்று அதிகாலை 2:30 மணிக்கு ஈகே-542 எமிரேட்ஸ் விமானம் மூலம் துபாயிலிருந்து சென்னை வந்த 34 வயது பயணி மற்றும் எஃப்இசட்-447 விமானத்தில் 10.09.2021 அன்று காலை 4 மணிக்கு சென்னை வந்த 35 வயது பயணி ஆகியோர் விமான நிலைய வெளி வாயிலில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.‌ அவர்களது உடைமைகளை சோதனையிட்டபோது அவர்களது பைகள், பெட்டிகளின் உள்ளே ரூ. 1.33 கோடி மதிப்பில் 3125 கிராம் எடையில் […]

Continue reading …

2500 கோடி முதலீட்டில் அமைக்கப்படவுள்ள தகவல் தரவு மையம் – அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின்!

Comments Off on 2500 கோடி முதலீட்டில் அமைக்கப்படவுள்ள தகவல் தரவு மையம் – அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின்!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (11.9.2021) முகாம் அலுவலகத்திலிருந்து, அம்பத்தூரில் 2500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமையவுள்ள  NTT Global Data Centers and Cloud Infrastructure நிறுவனத்தின் தகவல் தரவு மையத்திற்கு காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார். இந்த தகவல் தரவு மையம் 5.89 ஏக்கர் பரப்பளவில், 8.25 இலட்சம் சதுர அடியில் அமைக்கப்பட உள்ளது. NTT Global Data Centers and Cloud Infrastructure நிறுவனம் ஜப்பான் நாட்டினை தலைமையகமாக கொண்டு, 20-க்கும் […]

Continue reading …

ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Comments Off on ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை, திருவான்மியூர் அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில் திருமண மண்டபத்தில் ஒருகாலப் பூஜைத் திட்டத்தின் கீழ் உள்ள 12,959  திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகளுக்கு மாத ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள் சந்தித்தப் பொருளாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு  அதில் இருந்து அவர்களையும், அவர்கள் குடும்பத்தினரையும் மீட்டெடுக்கும் பொருட்டு துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள திருக்கோயில்களில் நிலையான மாத வருவாயின்றிப் பணியாற்றி வந்த  அர்ச்சகர்கள், […]

Continue reading …

7 உணவு பதப்படுத்தல் திட்டங்களை தொடங்கி வைத்தார் மத்திய அமைச்சர் பசுபதி குமார் பராஸ் !

Comments Off on 7 உணவு பதப்படுத்தல் திட்டங்களை தொடங்கி வைத்தார் மத்திய அமைச்சர் பசுபதி குமார் பராஸ் !

தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் ஏழு உணவு பதப்படுத்தல் திட்டங்களை மத்திய உணவு பதப்படுத்தல் அமைச்சர் பசுபதி குமார் பராஸ் நேற்று காணொலி மூலம் இன்று தொடங்கி வைத்தார். இந்த திட்டங்களின் மொத்த மதிப்பு ரூ 164.66 கோடி ஆகும். உணவு பதப்படுத்தல் அமைச்சகத்தால் ரூ 27.99 கோடி மானியத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சுமார் 3100 பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை அளிக்கவுள்ள இந்த திட்டங்கள் மூலம் அவற்றுக்கு அருகில் இருக்கும் பகுதிகளில் […]

Continue reading …