Home » Entries posted by admin (Page 8)
Entries posted by admin

2500 கோடி முதலீட்டில் அமைக்கப்படவுள்ள தகவல் தரவு மையம் – அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின்!

Comments Off on 2500 கோடி முதலீட்டில் அமைக்கப்படவுள்ள தகவல் தரவு மையம் – அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின்!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (11.9.2021) முகாம் அலுவலகத்திலிருந்து, அம்பத்தூரில் 2500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமையவுள்ள  NTT Global Data Centers and Cloud Infrastructure நிறுவனத்தின் தகவல் தரவு மையத்திற்கு காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார். இந்த தகவல் தரவு மையம் 5.89 ஏக்கர் பரப்பளவில், 8.25 இலட்சம் சதுர அடியில் அமைக்கப்பட உள்ளது. NTT Global Data Centers and Cloud Infrastructure நிறுவனம் ஜப்பான் நாட்டினை தலைமையகமாக கொண்டு, 20-க்கும் […]

Continue reading …

ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Comments Off on ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை, திருவான்மியூர் அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில் திருமண மண்டபத்தில் ஒருகாலப் பூஜைத் திட்டத்தின் கீழ் உள்ள 12,959  திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகளுக்கு மாத ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள் சந்தித்தப் பொருளாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு  அதில் இருந்து அவர்களையும், அவர்கள் குடும்பத்தினரையும் மீட்டெடுக்கும் பொருட்டு துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள திருக்கோயில்களில் நிலையான மாத வருவாயின்றிப் பணியாற்றி வந்த  அர்ச்சகர்கள், […]

Continue reading …

7 உணவு பதப்படுத்தல் திட்டங்களை தொடங்கி வைத்தார் மத்திய அமைச்சர் பசுபதி குமார் பராஸ் !

Comments Off on 7 உணவு பதப்படுத்தல் திட்டங்களை தொடங்கி வைத்தார் மத்திய அமைச்சர் பசுபதி குமார் பராஸ் !

தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் ஏழு உணவு பதப்படுத்தல் திட்டங்களை மத்திய உணவு பதப்படுத்தல் அமைச்சர் பசுபதி குமார் பராஸ் நேற்று காணொலி மூலம் இன்று தொடங்கி வைத்தார். இந்த திட்டங்களின் மொத்த மதிப்பு ரூ 164.66 கோடி ஆகும். உணவு பதப்படுத்தல் அமைச்சகத்தால் ரூ 27.99 கோடி மானியத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சுமார் 3100 பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை அளிக்கவுள்ள இந்த திட்டங்கள் மூலம் அவற்றுக்கு அருகில் இருக்கும் பகுதிகளில் […]

Continue reading …

தமிழகம் முழுவதும் மாபெரும் கோவிட் தடுப்பூசி முகாம்!

Comments Off on தமிழகம் முழுவதும் மாபெரும் கோவிட் தடுப்பூசி முகாம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி  தமிழகம் முழுவதும் 12-09-21 மாபெரும் கோவிட் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது, பொதுமக்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கேட்டுக்கொண்டுள்ளார். கோவிட் தடுப்பூசி மெகா சிறப்பு முகாம் 12.09.2021 (ஞாயிற்றுக்கிழமை) அன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் […]

Continue reading …

ஃபோர்டு மகிழுந்து ஆலை மூடப்படுவதை தடுக்க வேண்டும் – பா.ம.க. நிறுவனர் இராமதாஸ்!

Comments Off on ஃபோர்டு மகிழுந்து ஆலை மூடப்படுவதை தடுக்க வேண்டும் – பா.ம.க. நிறுவனர் இராமதாஸ்!

சென்னை மறைமலைநகரிலும், குஜராத்திலும் செயல்பட்டு வரும் ஃபோர்டு மகிழுந்து ஆலைகளை மூட முடிவு செய்திருப்பதாக அந்த நிறுவனம் அறிவித்திருக்கிறது. பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் வகையிலான இந்த முடிவு வருத்தமளிக்கிறது, இது திரும்பப்பெறப்பட வேண்டும். அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் புகழ்பெற்ற ஃபோர்டு மகிழுந்து நிறுவனம் இந்தியாவில் சென்னையிலும், குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டத்தில் சனந்த் நகரிலும் மகிழுந்து ஆலைகளைத் தொடங்கி நடத்தி வருகிறது. இந்த ஆலைகளில் கடந்த 10 ஆண்டுகளில்   சுமார் 15 […]

Continue reading …

திருப்பதியில் உள்ளூர் மக்களுக்கு இலவச தரிசனம் !

Comments Off on திருப்பதியில் உள்ளூர் மக்களுக்கு இலவச தரிசனம் !

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த சில வாரங்களாக சிறப்பு தரிசனத்திற்கு மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் இலவச தரிசனம் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சித்தூர் மாவட்டத்தில் உள்ள உள்ளூர் மக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தினமும் 2 ஆயிரம் பேர்களுக்கு மட்டுமே இலவச தரிசன டோக்கன் வழங்கப்படும் என்றும் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அலிபிரி அருகில் உள்ள பூதேவி தங்கும் விடுதியில் பக்தர்கள் தங்களுடைய ஆதார் அட்டையை காண்பித்து இலவச தரிசன டோக்கன் களை […]

Continue reading …

மனைவியின் பிறந்தநாளை அமர்களப்படுத்திய நடிகர் விஷ்ணு விஷால்!

Comments Off on மனைவியின் பிறந்தநாளை அமர்களப்படுத்திய நடிகர் விஷ்ணு விஷால்!

நடிகர் விஷ்ணு விஷால் தனது காதல் மனைவி ஜுவாலா கட்டாவின் 38வது பிறந்தநாளுக்கு செம சர்ப்ரைஸ் கொடுத்து கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.   அவருக்கு பல்வேறு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Continue reading …

கரிமங்கலத்தில் நாளை ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு திட்டம் !

Comments Off on கரிமங்கலத்தில் நாளை ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு திட்டம் !

ஊட்டச்சத்து மாதம், விடுதலையின் அம்ரித் மகோத்ஸவம் மற்றும் கொவிட்-19 தடுப்பூசி விழிப்புணர்வு குறித்த ஒருங்கிணைந்த தகவல் தொடர்பு நிகழ்ச்சியை, தர்மபுரி கள விளம்பர அலுவலகம் மற்றும் கரிமங்கலம் ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் திட்டம் ஆகியவை இணைந்து நாளை (09.09.2021) நடத்துகின்றன. தர்மபுரி துணை கலெக்டர் சித்ரா விஜயன் ஐஏஎஸ், இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார். இங்கு எல்.இ.டி. பிரச்சார வாகனத்தையும் சித்ரா விஜயன் தொடங்கி வைக்கிறார்.  இந்த வாகனம், தர்மபுரி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு பயணம் […]

Continue reading …

புதிய ரயில் பாதை திட்டம் : ரயில்வே அமைச்சருடன் எல் முருகன் சந்திப்பு !

Comments Off on புதிய ரயில் பாதை திட்டம் : ரயில்வே அமைச்சருடன் எல் முருகன் சந்திப்பு !

ஈரோட்டில் இருந்து தாராபுரம் வழியாக பழனி செல்லும் புதிய அகலரயில் பாதை குறித்து, மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்பு & பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் மத்தியரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்வை சந்தித்து உரையாடினார். மக்களின் ஒட்டுமொத்தவளர்ச்சிக்கும்,அப்பகுதியின் விவசாய பொருளாதாரத்தை மேம்படுத்தவும்அகலரயில் பாதை அமைக்க வேண்டும் என்பது தாராபுரம் மக்களின் நீண்டகால கோரிக்கையாகும். வாரணாசியிலிருந்து காஞ்சிபுரம் வழியாக ராமேசுவரத்துக்கு பயணிகள் விரைவு ரயிலை இயக்க வேண்டும் என்றும்டாக்டர் முருகன் கேட்டுக்கொண்டார். இது பாரம்பரிய […]

Continue reading …

69.90 கோடியைக் கடந்தது கொவிட்-19 தடுப்பூசிகளின் எண்ணிக்கை !

Comments Off on 69.90 கோடியைக் கடந்தது கொவிட்-19 தடுப்பூசிகளின் எண்ணிக்கை !

குறிப்பிடத்தக்க சாதனையாக இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான (1,13,53,571) கொவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இது கடந்த 11-நாட்களில் மூன்றாவது முறையாகும்.  இன்று காலை 7 மணி நிலவரப்படி, இந்தியாவில் செலுத்தப்பட்ட மொத்த தடுப்பூசிகளின் எண்ணிக்கை 69.90 கோடியைக் (69,90,62,776) கடந்தது.  72,26,439 அமர்வுகள் மூலம் இது சாதிக்கப்பட்டது. நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தப்படும் வேகம் மற்றும் விரிவாக்கத்தை அதிகரிக்க மத்திய அரசு உறுதியுடன் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 42,942 நோயாளிகள் கொவிட் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,22,24,937 […]

Continue reading …