Home » Entries posted by Shankar U (Page 603)
Entries posted by Shankar

டெல்லி, கர்நாடகா, புதுச்சேரி, கொல்கத்தாவில் இன்றிலிருந்து தியேட்டர்கள் திறப்பு!

Comments Off on டெல்லி, கர்நாடகா, புதுச்சேரி, கொல்கத்தாவில் இன்றிலிருந்து தியேட்டர்கள் திறப்பு!

கொரோனா வைரஸ் காரணத்தினால் கடந்த மார்ச் மாதம் முதல் தியேட்டர்கள் திறக்கப்படாமல் மூடி வைக்கப்பட்டுள்ளது. இதனால் படப்பிடிப்பு முடிக்கப்பட்ட நிலையில் இருக்கும் படங்களை ஓ.டி.டியில் வெளியிட்டு வருகின்றனர். இதில் முதலாவதாக ஜோதிகா நடித்த பொன்மகள்வந்தாள் திரைப்படம் வெளியாகியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மத்திய அரசு தியேட்டர்களை திறப்பதற்கும் மற்றும் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. இதைக் கொண்டு இன்றிலிருந்து டெல்லி, கர்நாடகா, புதுச்சேரி, கொல்கத்தா ஆகிய இடங்களில் தியேட்டர்கள் திறக்கப்பட்டது. தியேட்டர்களுக்கு சமூக இடைவெளி, உடல் வெப்ப […]

Continue reading …

இளைஞர்களுக்கு என்றும் வழிகாட்டியாக திகழ்ந்த டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அய்யாவை வணங்குகிறேன் – முதல்வர் ட்வீட்!

Comments Off on இளைஞர்களுக்கு என்றும் வழிகாட்டியாக திகழ்ந்த டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அய்யாவை வணங்குகிறேன் – முதல்வர் ட்வீட்!

இளைஞர்களுக்கு என்றும் வழிகாட்டியாக திகழ்ந்தவர் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அய்யாவை வணங்குகிறேன் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இன்று நம் இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவரும் மற்றும் விஞ்ஞானியும் மற்றும் ஏவுகணை நாயகனான பாரத ரத்னா டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் 89 வது பிறந்த நாள் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இவருடைய பிறந்த நாளை உலகம் மாணவர்கள் நாளாக ஐநா சபை அறிவித்துள்ளது. இவருடைய பிறந்தநாளுக்கு அணைத்து தலைவர்களும் மரியாதையை செய்து […]

Continue reading …

தவறைத் தவிர்த்திருக்கலாம் – சூப்பர் ஸ்டார் ரஜினி ட்வீட்!

Comments Off on தவறைத் தவிர்த்திருக்கலாம் – சூப்பர் ஸ்டார் ரஜினி ட்வீட்!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின் ராகவேந்திரா திருமண மண்டபம் சென்னை ரங்கராஜபுரத்தில் உள்ளது. இந்த மண்டபத்தின் சொத்து வரி விதித்ததை குறித்து வழக்கு தொடரப்பட்டது. இதை அடுத்து, ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு சொத்து வரி விதித்ததை எதிர்த்து வழக்கு தொடர்ந்த நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஐகோர்ட்டு கண்டனத்தை தெரிவித்தது. நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பதாக கூறியும் மற்றும் அபராதம் விதிக்கப்போவதாக நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதை அடுத்து அந்த வழக்கு வாபஸ் வாங்கப்பட்டது. இதனை குறித்து ரஜினிகாந்தின் ட்விட்டர் பதிவில்; ராகவேந்திரா […]

Continue reading …

இந்தியாவுக்காக கலாம் செய்த பங்களிப்பை மறக்க முடியாது – பிரதமர் மோடி மரியாதை!

Comments Off on இந்தியாவுக்காக கலாம் செய்த பங்களிப்பை மறக்க முடியாது – பிரதமர் மோடி மரியாதை!

இன்று நம் இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவரும் மற்றும் விஞ்ஞானியுமான பாரத ரத்னா டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் 89 வது பிறந்த நாள் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இவருடைய பிறந்த நாளை உலகம் மாணவர்கள் நாளாக ஐநா சபை அறிவித்துள்ளது. 1931 ஆம் ஆண்டு அக்டோபர் 15-ஆம் தேதி தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் மாவட்டத்தில் பிறந்தவர் ஏபிஜே அப்துல் கலாம். பின்பு பள்ளிப்படிப்பு, இயற்பியல் பட்டம் மற்றும் விண்வெளி பொறியியலில் முதுகலைப் பட்டம் ஆகியவற்றைப் பெற்றுள்ளார். […]

Continue reading …

ஆப்கானிஸ்தானில் இரு ராணுவ ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து – 15 பேர் உயிரிழப்பு!

Comments Off on ஆப்கானிஸ்தானில் இரு ராணுவ ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து – 15 பேர் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தான் நாட்டில் ராணுவ ஹெலிகாப்டர்கள் பயற்சியை மேற்கொண்ட போது ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள ஹெல்மாண்ட் மாகாணத்தின் தெற்கில் இருக்கும் நாவா மாவட்டத்தில் அந்நாட்டின் விமானப்படை வீரர்கள் நேற்று இரவு ஹெலிகாப்டர்களில் பயிற்சியை மேற்கொண்டனர். அந்த சமயத்தில் இரு ஹெலிகாப்டர்களும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தை அறிந்த மீட்புக்குழு வேலையை மேற்கொண்டனர். அந்த விபத்தில் 15 விமானப்படை வீரர்கள் உயிரிழந்தது […]

Continue reading …

ஆந்திரா தெலுங்கானா முதலமைச்சர் உடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு!

Comments Off on ஆந்திரா தெலுங்கானா முதலமைச்சர் உடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு!

ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் இரு மாநிலத்தில் உள்ள பல இடங்களில் வெள்ளம் பெருமளவில் தேங்கி உள்ளது. அதிலும் தெலுங்கானா மாநிலத்தில் மழையின் காரணத்தால் 15 பேர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவத்தை பற்றி பிரதமர் மோடி ஆந்திர பிரதேச முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் ஆகிய இவர்களுடன் தொலைபேசியில் கலந்துரையாடல் நடத்தியுள்ளார். அதில் மீட்பு, நிவாரண பணிகள் மற்றும் அனைத்து உதவிகளை மத்திய அரசு […]

Continue reading …

பீகாரில் பா.ஜ.க கூட்டணி வெற்றி பெறும் என கருத்துக்கணிப்பில் தகவல்!

Comments Off on பீகாரில் பா.ஜ.க கூட்டணி வெற்றி பெறும் என கருத்துக்கணிப்பில் தகவல்!

பீகார் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் அங்கு கருத்துக்கணிப்பு நடைபெற்றத்தில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என தகவல் கிடைத்துள்ளது. பீகார் மாநிலத்தில் மொத்தம் 243 தொகுதிகளில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் எந்த கூட்டணி வெற்றி பெறும் என டைம்ஸ் நவ் மற்றும் சிவோட்டர்ஸ் இணைந்து அக்டோபர் 1ஆம் தேதி முதல் அக்டோபர் 10ஆம் தேதி வரை 243 தொகுதிகளிலும் கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது. இதில் புதிய சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி […]

Continue reading …

தமிழக தலைமைச் செயலாளரின் பதவிக்காலம் மூன்று மாதம் நீட்டிப்பு!

Comments Off on தமிழக தலைமைச் செயலாளரின் பதவிக்காலம் மூன்று மாதம் நீட்டிப்பு!

கொரோனா வைரஸ் காரணத்தினால் தமிழக அரசின் வேலைகள் எதுவும் தடைபடாமல் இருப்பதற்காக தமிழக தலைமைச் செயலாளரான சண்முகத்தின் பதவிக்காலம் மேலும் மூன்று மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் தலைமைச் செயலராக பதவி ஏற்ற சண்முகத்தின் பதவிக்காலம் இந்த ஆண்டு ஜூலை மாதத்துடன் நிறைவடைந்தது. இதனால் மூன்று மாதம் அக்டோபர் வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், கொரோனா வைரஸ் ஊரடங்கு சமயத்தில் தமிழக அரசின் வேலைகள் எதுவும் தடையில்லாமல் நடப்பதற்காக சண்முகத்தின் பதவிக்காலம் மேலும், மூன்று மாதங்கள் […]

Continue reading …

#BREAKING: தமிழகத்தில் இன்று 4,666 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

Comments Off on #BREAKING: தமிழகத்தில் இன்று 4,666 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,666 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், 57 பேர் பலியாகியுள்ளனர், 5,177 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,164 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 6,65,930 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 10,317 பேர் பலியாகியுள்ளனர், 6,07,203 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1.84 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பின்பு மற்ற மாவட்டங்களில் 3,454 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Continue reading …

மகாராஷ்டிராவில் காவலர்களை உலுக்கி எடுக்கும் கொரோனா; 55 பேருக்கு உறுதி!

Comments Off on மகாராஷ்டிராவில் காவலர்களை உலுக்கி எடுக்கும் கொரோனா; 55 பேருக்கு உறுதி!

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 55 காவலர்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸின் தாக்கம் மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரசால் மகாராஷ்டிராவில் 15 லட்சத்திற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸை எதிர்த்து களத்தில் போராடிக் கொண்டிருக்கும் காவலர்கள் பெரும்பாலானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது மகாராஷ்டிராவில் […]

Continue reading …