Home » Entries posted by Shankar U (Page 619)
Entries posted by Shankar

சின்னத்திரை காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி உடல்நலக்குறைவால் மரணம்!

Comments Off on சின்னத்திரை காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி உடல்நலக்குறைவால் மரணம்!

சின்னத்திரை நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். சின்னத்திரையில் காமெடி நிகழ்ச்சிகள் மூலம் பெருமளவு பிரபலமடைந்தார். வடிவேல் பாலாஜி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர் கூட்டத்தையே கவர்ந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு திடீர் மாரடைப்பு காரணத்தினால் இரண்டு கைகளும் வதம் ஏற்பட்டு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவருக்கு 42 ஆகிறது. அவருடைய மரணம் அவரின் குடும்பத்தையும், ரசிகர்களையும், திரையுலக பிரபலங்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Continue reading …

நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்வதற்கு மத்திய அரசு முன்வர வேண்டும் – அன்புமணி ராமதாஸ் ட்வீட்!

Comments Off on நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்வதற்கு மத்திய அரசு முன்வர வேண்டும் – அன்புமணி ராமதாஸ் ட்வீட்!

நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும் என பா.ம.க இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதனை குறித்து அவருடைய ட்விட்டர் பதிவில்; அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவர் நீட் தேர்வு குறித்த அச்சத்தால் தற்கொலை செய்து கொண்டிருப்பது வேதனை அளிக்கிறது. அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடும், அரசு வேலையும் வழங்க வேண்டும். மருத்துவக் […]

Continue reading …

இந்தி பட வாய்ப்பு வந்தால் டீ-ஷர்ட்டை கழட்டிவிடுவார்கள் – நடிகை ஆர்த்தி ட்வீட்!

Comments Off on இந்தி பட வாய்ப்பு வந்தால் டீ-ஷர்ட்டை கழட்டிவிடுவார்கள் – நடிகை ஆர்த்தி ட்வீட்!

கடந்த சில தினங்களாக இந்தி மொழிக்கு எதிரான ஷர்ட்களை அணிந்தும் மற்றும் கருத்துக்களை தெரிவித்தும் திரையுலகினர் சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதற்கான ஹாஸ்டக்ளும் இந்தியா அளவில் ட்ரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இதைப்பற்றி நகைச்சுவை நடிகையான ஆர்த்தி அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில்; நம்ம தமிழ் -தாய் மாதிரி நமக்கு உயிர்மூச்சு பிறருக்கு அவங்க மொழி அப்படிதான். ஆதி மொழி தமிழிலிருந்து தான் எல்லா மொழியும்பிறந்திருக்கு. அதனால பழிப்பது தவறு […]

Continue reading …

ஆப்கானிஸ்தான் நாட்டில் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல்; உயிர் தப்பிய துணை அதிபர்!

Comments Off on ஆப்கானிஸ்தான் நாட்டில் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல்; உயிர் தப்பிய துணை அதிபர்!

ஆப்கானிஸ்தான் நாட்டில் சாலையோரம் நடத்த வெடிகுண்டு தாக்குதலில் அந்நாட்டு துணை அதிபர் அம்ருல்லா சலே சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இதற்கு முன்பே முன்னாள் உளவுப்படை தலைவராக இருந்த போது பல தாக்குதலில் இருந்து தப்பித்து உள்ளார். இதில், கடந்த வருடம் நடத்த தாக்குதலும் அடங்கும். தற்போது அதிபர் சலேவின் காரை குறிவைத்து தீவிரவாதிகள் சாலையோரத்தில் வெடிகுண்டு தாக்குதலை நடித்தியுள்ளனர். இதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 15 பேர் காயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு இந்தியா […]

Continue reading …

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 533 காவலர்களுக்கு கொரோனாவால் பாதிப்பு!

Comments Off on மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 533 காவலர்களுக்கு கொரோனாவால் பாதிப்பு!

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸால் இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலம் தான் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனாவை எதிர்த்து போராடும் காவல்துறையினரும் பெரும்பாலானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 533 காவலர்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது […]

Continue reading …

நோபல் பரிசுக்கு அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்பின் பெயர் பரிந்துரை!

Comments Off on நோபல் பரிசுக்கு அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்பின் பெயர் பரிந்துரை!

அடுத்த வருடம் நோபல் பரிசு விருதுக்கு அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்பின் பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நார்வே நாடாளுமன்ற உறுப்பினர் கிறிஸ்டியன் டைப்ரிங் – கெஜெட். இவர் தான் அதிபர் டொனால்ட் டிரம்பின் பெயரை பரிந்துரைக்கும் விண்ணப்பத்தை நோபல் பரிசு கமிட்டிக்கு அனுப்பியுள்ளார். சர்வதேச அளவில் ஏற்பட்ட மோதல்களை சிறப்பாக தீர்த்து வைத்தார் என்பதுக்காக அதிபர் டிரம்புக்கு நோபல் பரிசு அளிக்க வேண்டும் என அவருடைய பரிந்துரையில் குறிப்பிட்டுள்ளார்.

Continue reading …

தமிழ்நாட்டில் ஐந்து நாட்கள் ஆன்லைன் வகுப்புகளுக்கு நிறுத்தம் – அமைச்சர் செங்கோட்டையன்!

Comments Off on தமிழ்நாட்டில் ஐந்து நாட்கள் ஆன்லைன் வகுப்புகளுக்கு நிறுத்தம் – அமைச்சர் செங்கோட்டையன்!

தமிழ்நாட்டில் வரும் 21ஆம் தேதி முதல் ஐந்து நாட்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நிறுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டால் மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. இதனால் மாணவ-மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது . தற்போது, தமிழ்நாட்டில் வரும் 21ஆம் தேதி முதல் ஐந்து நாட்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நிறுத்தப்படும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். மாணவர்களின் மன […]

Continue reading …

அடுத்த ஐந்து ஆண்டுகளில் 50 சதவித எரிபொருள் நிலையங்களை சூரியமயமாக்கும் நோக்கம் – அமைச்சர் தர்மேந்திர பிரதான்!

Comments Off on அடுத்த ஐந்து ஆண்டுகளில் 50 சதவித எரிபொருள் நிலையங்களை சூரியமயமாக்கும் நோக்கம் – அமைச்சர் தர்மேந்திர பிரதான்!

அடுத்த ஐந்து ஆண்டுகளில் 50 சதவித எரிபொருள் நிலையங்களை சூரியமயமாக்கும் நோக்கம் உள்ளதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு சொந்தமான எரிபொருள் நிலையங்களில் 50 சதவிதத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளில் சூரியமயமாக்கும் நோக்கம் உள்ளதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். இதை பற்றி அமைச்சர் பேசியது; சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைப்பதற்கும் மற்றும் பசுமை எரிசக்தி தயாரிப்பதை ஊக்குவிக்கு எண்ணத்திலும் இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் பாரத் பெட்ரோலியம் […]

Continue reading …

வடக்கு எல்லை பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை – இந்திய ராணுவம்!

Comments Off on வடக்கு எல்லை பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை – இந்திய ராணுவம்!

லடாக் எல்லைப் பகுதியில் இந்தியா-சீனா இடையே சமீப காலமாக பதற்றம் நிலவி வருகிறது. கடந்த ஜூன் மாதம் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 35க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியது. இந்தப் பதற்றத்தை குறைப்பதற்காக இரு நாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்திக் வருகின்றனர். ஆனாலும், இந்த பதற்றம் குறையவில்லை. சீனா தொடர்ந்து அத்துமீருவருவது அதிகரித்துள்ளது. இதனிடையே லடாக் எல்லை பகுதியில் உள்ள பாங்கோங் ஏரி […]

Continue reading …

அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கொரோனா தொற்றால் பாதிப்பு!

Comments Off on அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கொரோனா தொற்றால் பாதிப்பு!

அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டதுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருவதை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைவருக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. முதல்வர் உடன் விழாவில் கலந்து கொள்ளவிருந்த அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. இதனை தொடர்ந்து, சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வருகிறார். இதற்கு முன்பே அமைச்சர்கள் செல்லூர் ராஜு, தங்கமணி, கே.பி.அன்பழகன், நிலோபர் கபில் ஆகியோர் கொரோனாவால் […]

Continue reading …