உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் டெல்லி மாநிலத்தில் 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 1,214 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அடுத்த ஆறு நாளில் பரிசோதனையை மூன்று மடங்கு அதிகரிக்கப்படும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். டெல்லியில் கொரோனா நிலவரத்தை பற்றி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், டெல்லி ஆளுநர் அனில் பைஜால், முதலமைச்சர் கெஜ்ரிவால் ஆகியரோடு அமித்ஷா […]
Continue reading …அமெரிக்கா இந்தியாவுக்கு இலவசமாக கொடுக்கும் வெண்டிலேட்டர் கருவிகள் நாளை வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோன வைரஸை எதிர்த்துப் போராட தேவையான உயிர்காக்கும் கருவியான வென்டிலேட்டர்களை இந்தியாவுக்கு இலவசமாக கொடுக்கப்படும் என அமெரிக்கா அதிபர் டிரம்ப் ட்விட்டரில் தெரிவித்திருந்தார். இந்த வகையில் முதலில் 100 வென்டிலேட்டர் கருவிகள் அனுப்பப்படும் என தெரிவித்திருந்தார். தற்போது சிகாகோவில் உள்ள ஸோல் என்கிற நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட 100 வென்டிலேட்டர்களை ஏர் இந்தியா விமானத்தில் நாளை இந்தியாவுக்கு வருகின்றது. இந்த உயிர் […]
Continue reading …காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பழனிக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி உறுதியாகியுள்ளது. கொரோனா வைரஸ் காரணத்தினால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது ஐந்தாம் கட்ட ஊரடங்கு உத்தரவு பல தளர்வுகளுடன் அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு சமயத்தில் கஷ்டப்படும் ஏழை மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வந்துள்ளார் எம்எல்ஏ பழனி. இவர் சமீபத்தில் சென்னைக்கு சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது அவருக்கு கொரோனா வைரஸின் அறிகுறிகள் இருந்ததை அடுத்து […]
Continue reading …சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 5 பேர் மற்றும் பெய்ஜிங்கை சேர்ந்த 6 பேர் என மொத்தம் 11 பேர் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த தகவலை அந்நாட்டு சுகாதார துறை அறிவித்துள்ளது. தற்போது பெய்ஜிங்கில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இரண்டு பேரில் ஒருவர் ஜின்ஃபாடி விவசாய பொருட்கள் வாங்க சென்றதால் முழு சந்தையும் தற்காலிகமாக மூடப்பட்டது. மேலும், ஃபெங்டாயில் மீன் வாங்கும் உணவு […]
Continue reading …சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில் நடமாடும் கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நாளுக்கு நாள் தலைநகர் சென்னயில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இதனால் எப்படியாவது தொற்று வேகத்தை குறைக்க அரசு அதிகாரிகள் போராடி வருகின்றனர். இந்நிலையில் புதிதாக சுகாதாரத்துறை செயலாளராக பொறுப்பேற்றுள்ள ராதாகிருஷ்ணன் சென்னையில் 173 நடமாடும் மருத்துவமனைகள் மூலம் இன்று முதல் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது எனத் தெரிவித்துள்ளார். இதில் தொற்று அறிகுறி உள்ளவர்கள் சோதனை செய்துகொள்ளலாம் […]
Continue reading …இந்தியாவில் ஊரடங்கு நீட்டிப்பது குறித்து ஜூன் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் மோடி ஆலோசனை நடத்த இருக்கிறார். இந்தியா முழுவதும் ஐந்தாம் கட்ட ஊரடங்கு ஜூன் 30 ஆம் தேதி வரை அமலில் உள்ளது. இதுவரை நான்கு முறை படிப்படியாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு, இப்போது முதல் முறையாக ஒரு மாதமாக நீட்டிக்கப்பட்டுள்ளது ஐந்தாம் கட்ட ஊரடங்கு. இந்நிலையில் ஜூன் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் மாநில முதல்வர்களை வீடியோ கான்பரன்ஸ் மூலமாக சந்தித்து ஆலோசனை […]
Continue reading …உக்ரைன் நாட்டின் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியின் மனைவி ஒலேனா ஜெலன்ஸ்காவுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. ஆனால், அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி மற்றும் அவருடைய குழந்தைகள்கொரோனா வைரசால் பாதிக்கப்படவில்லை என்பதனை சமூக வளையதளமான இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். மேலும், அவர் நலமுடன் இருப்பதாகவும், வெளிநோயாளி போல் சிகிச்சை பெற்று வருவதாவும் மற்றும் அவரை தனிமைப்படுத்தி வைத்துள்ளதாகவும் பதிவிட்டுள்ளார்.
Continue reading …உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் அதிகமாக உள்ளது. இதனால் மார்ச் மாதத்தில் இருந்து எந்த ஒரு கிரிக்கெட் போட்டி நடக்கவில்லை. தற்போது இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்து உள்ளதால் இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாட இருந்தது. இதற்கு இந்திய அணியும் சம்பந்தம் தெரிவித்தது. ஆனால், இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளதால் […]
Continue reading …திருப்பதியில் கோவிந்தராஜசாமி கோயில் உள்ளது. அங்கு வேலை பார்க்கும் தேவஸ்தான ஊழியருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கோயில் நடை மூடப்பட்டது. பின்னர் கோயில் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யும் வேலை நடந்து வருகிறது. இவருடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தி பரிசோதனை செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், ஞாயிற்றுக்கிழமை நடையை திறப்பது பற்றி தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர்.
Continue reading …நியூசிலாந்து, தான்சானியா, வாடிகன், ஃபிஜி, மான்டிநெக்ரோ, செசெல்ஸ், செயின்ட் கிட்ஸ் நெவிஸ், திமோர், பப்புவா நியூகினியா இந்த ஒன்பது நாடுகளும் கொரோனா தொற்று இல்லாத நாடாக மாறியுள்ளன. நியூசிலாந்தில் 1,504 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. ஆனால், தற்போது கொரோனா இல்லாத நாடாக மாறியது. இதனால் ஏழு வாரங்கள் அமலில் இருந்த ஊரடங்கு தற்போது ரத்து செய்தன. இதை போலவே ஆப்பிரிக்க நாடு தான்சானியாவில் 509 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. இதனை அடுத்து சென்ற ஞாயிற்றுக்கிழமையில் […]
Continue reading …