Home » Archives by category » இந்தியா (Page 135)

பாஜகவுக்கு வாக்களித்தால் 5 ஆண்டுகளில் மேற்கு வங்கத்தை ஜொலிக்க வைப்போம்….அமித்ஷா பேச்சு

Comments Off on பாஜகவுக்கு வாக்களித்தால் 5 ஆண்டுகளில் மேற்கு வங்கத்தை ஜொலிக்க வைப்போம்….அமித்ஷா பேச்சு

இந்த முறை பா.ஜ.க.வுக்கு வாக்களித்து பாருங்கள், 5 ஆண்டுகளுக்குள் மேற்குவங்க மாநிலத்தை ஜொலிக்க வைப்போம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.  கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த பத்தாண்டுகளாக மம்தா பானர்ஜியின் ஆட்சியில் மக்களின் நம்பிக்கைகள் பொய்த்து விட்டதாக கடுமையாக குற்றம் சாட்டினார். கடந்த ஓராண்டில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் அரசியல் வன்முறை காரணமாக கொல்லப்பட்டதை சுட்டிக் காட்டிய அமித்ஷா,அதற்கு இதுவரை மம்தா அரசு என்ன நடவடிக்கை எடுத்தது […]

Continue reading …

தொற்று ஏற்பட்டவர்களில் 40% பேருக்கு அறிகுறியே காணப்படவில்லை….எய்ம்ஸ் தகவல்

Comments Off on தொற்று ஏற்பட்டவர்களில் 40% பேருக்கு அறிகுறியே காணப்படவில்லை….எய்ம்ஸ் தகவல்

இந்தியாவில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் 40 சதவிகிதம் பேருக்கு எந்த ஒரு அறிகுறியும் காணப்படவில்லை என டெல்லி எய்ம்ஸ் தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பு குறித்து நாடு முழுவதும் உள்ள மருத்துவர்களுக்காக காணொளி வாயிலாக நடத்தப்பட்ட கருத்தரங்கில் இந்த தகவல் வெளியிடப்பட்டது. அதே நேரம் 12 வயதுக்கும் குறைவான சிறுவர்களுக்கு ஏற்பட்ட கொரோனா தொற்றில் 73.5 சதவிகிதம் பேருக்கு அறிகுறிகள் தென்படவில்லை என டெல்லி எய்ம்ஸ் தெரிவித்துள்ளது. அடுத்ததாக 80 வயதுக்கு மேற்பட்டவர்களில் 38.4 சதவிகிதம் பேருக்கு மட்டுமே […]

Continue reading …

இந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து 88.03 சதவீதம் பேர் குணம் – அதிகரிக்கும் எண்ணிக்கை!

Comments Off on இந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து 88.03 சதவீதம் பேர் குணம் – அதிகரிக்கும் எண்ணிக்கை!

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இதன் எண்ணிக்கை தினதோறும் அதிகரித்து வந்தாலும், குணமடைந்தோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் 74 லட்சத்து 94 ஆயிரத்து 551 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், ஒரு லட்சத்துக்கு 14 ஆயிரத்து 031 பேர் பலியாகியுள்ளனர் மற்றும் 65 லட்சத்து 97 ஆயிரத்து 209 பேர் குணமடைந்து உள்ளனர். பின்பு 7 லட்சத்து 83 ஆயிரத்து 311 […]

Continue reading …

ரூ.75 நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்!

Comments Off on ரூ.75 நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்!

உணவு மற்றும் வேளாண் அமைப்பான எப்ஏஓ நிறுவப்பட்டு 75 ஆவது வருடத்தை உணர்த்தும் அடிப்படையிலும் மற்றும் இந்த அமைப்பின் நீண்டகால தொடர்பை உணர்த்தும் அடிப்படையிலும் பிரதமர் மோடி இன்று 75 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார். பின்னர், சமீபத்தில் உருவாக்கப்பட்ட உயிரி செறிவூட்டிய எட்டு பயிர்களின் 17 ரகங்களையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். மேலும், இந்தியாவில் உள்ள அங்கன்வாடிகள், வேளாண் அறிவியல் மையங்கள், இயற்கை விவசாயம் மற்றும் தோட்டக்கலை இயக்கங்களை சேர்ந்தவர்கள் இதில் கலந்து கொண்டனர். பின்பு மத்திய […]

Continue reading …

இந்தியாவுக்காக முதல் ஆஸ்கார் விருதை வென்ற பெண்மணி உயிரிழந்தார்!

Comments Off on இந்தியாவுக்காக முதல் ஆஸ்கார் விருதை வென்ற பெண்மணி உயிரிழந்தார்!

இந்தியாவுக்காக முதல் முதலில் ஆஸ்கார் விருதை வென்ற பெண்மணி பானு அதய்யா உடல்நலக்குறைவால் 91 வயதில் நேற்று மும்பையில் உயிரிழந்தார். இதைப் பற்றி அவருடைய மகள் கூறியது; மூன்று வருடத்துக்கு முன்பு என் தாய்க்கு பக்கவாதம் ஏற்பட்டது. அப்போதிலிருந்து அவருடைய காலத்தை படுக்கையிலேயே கழித்து வந்தார். நேற்று அதிகாலை அவர் காலமானார். அவரின் இறுதி சடங்கு தெற்கு மும்பையில் உள்ள சந்தனவதி மைதானத்தில் நடந்தது என்றார். மேலும், 1950 ஆம் ஆண்டு இந்தி திரைத்துறையில் ஆடை வடிவமைப்பாளராக […]

Continue reading …

பிரதமர் கிசான் திட்டத்தில் முறைகேடு; 101 பேர் கைது!

Comments Off on பிரதமர் கிசான் திட்டத்தில் முறைகேடு; 101 பேர் கைது!

பிரதமரின் கிசான் திட்டத்தில் முறைகேடு நடத்தி வழக்கில் இதுவரை 101 பேரை கைது சிபிசிஐடி செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 105 கோடி ரூபாய் பறிமுதல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தால் சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டு தோறும் 6 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும். இந்த திட்டம் 2018 ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வந்தது. இந்தத் திட்டத்தில், தமிழ்நாட்டில் விவசாயிகள் இல்லாத பலர் போலியாக அட்டைகளை இணைத்தாகவும் மற்றும் 6 லட்சம் பேர் வரை இணைக்கப்பட்டதாகவும் […]

Continue reading …

இந்தியாவுக்காக கலாம் செய்த பங்களிப்பை மறக்க முடியாது – பிரதமர் மோடி மரியாதை!

Comments Off on இந்தியாவுக்காக கலாம் செய்த பங்களிப்பை மறக்க முடியாது – பிரதமர் மோடி மரியாதை!

இன்று நம் இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவரும் மற்றும் விஞ்ஞானியுமான பாரத ரத்னா டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் 89 வது பிறந்த நாள் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இவருடைய பிறந்த நாளை உலகம் மாணவர்கள் நாளாக ஐநா சபை அறிவித்துள்ளது. 1931 ஆம் ஆண்டு அக்டோபர் 15-ஆம் தேதி தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் மாவட்டத்தில் பிறந்தவர் ஏபிஜே அப்துல் கலாம். பின்பு பள்ளிப்படிப்பு, இயற்பியல் பட்டம் மற்றும் விண்வெளி பொறியியலில் முதுகலைப் பட்டம் ஆகியவற்றைப் பெற்றுள்ளார். […]

Continue reading …

ஆந்திரா தெலுங்கானா முதலமைச்சர் உடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு!

Comments Off on ஆந்திரா தெலுங்கானா முதலமைச்சர் உடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு!

ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் இரு மாநிலத்தில் உள்ள பல இடங்களில் வெள்ளம் பெருமளவில் தேங்கி உள்ளது. அதிலும் தெலுங்கானா மாநிலத்தில் மழையின் காரணத்தால் 15 பேர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவத்தை பற்றி பிரதமர் மோடி ஆந்திர பிரதேச முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் ஆகிய இவர்களுடன் தொலைபேசியில் கலந்துரையாடல் நடத்தியுள்ளார். அதில் மீட்பு, நிவாரண பணிகள் மற்றும் அனைத்து உதவிகளை மத்திய அரசு […]

Continue reading …

மகாராஷ்டிராவில் காவலர்களை உலுக்கி எடுக்கும் கொரோனா; 55 பேருக்கு உறுதி!

Comments Off on மகாராஷ்டிராவில் காவலர்களை உலுக்கி எடுக்கும் கொரோனா; 55 பேருக்கு உறுதி!

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 55 காவலர்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸின் தாக்கம் மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரசால் மகாராஷ்டிராவில் 15 லட்சத்திற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸை எதிர்த்து களத்தில் போராடிக் கொண்டிருக்கும் காவலர்கள் பெரும்பாலானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது மகாராஷ்டிராவில் […]

Continue reading …

இமாச்சலபிரதேசத்தின் முதல்வர் ஜெய்ராம் தாகூருக்கு கொரோனா உறுதி!

Comments Off on இமாச்சலபிரதேசத்தின் முதல்வர் ஜெய்ராம் தாகூருக்கு கொரோனா உறுதி!

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரசால் பொது மக்கள் மட்டுமில்லாமல் நடிகர்கள், பிரபலங்கள், மாநில அமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், ஆகியோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இமாச்சலப் பிரதேசத்தின் முதல்வர் ஜெயராம் தாகூருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகி உள்ளது. இந்தத் தகவலை அவரின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதைப் பற்றி அவரின் ட்விட்டர் பதிவில்; நான் சில நாட்களுக்கு முன்பு ஒரு கொரோனா பாசிட்டிவ் நபருடனான […]

Continue reading …