Home » Archives by category » இந்தியா (Page 147)

அயோத்தி தீட்சிதர் கொரோனா வைரஸால் பாதிப்பு!

Comments Off on அயோத்தி தீட்சிதர் கொரோனா வைரஸால் பாதிப்பு!

அயோத்தி ராமர் கோவிலின் பூமி பூஜைக்காக சடங்குகள் செய்யும் குழுவில் உள்ள தீட்சிதர் மற்றும் அங்கு காவல் வேலையில் இருந்த 15 காவலர்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. உத்தர பிரதேச மாநிலத்திலுள்ள அயோத்தியில் வருகின்ற ஆகஸ்ட் 5ம் தேதி ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை அடிக்கல் நாட்டு விழா சிறப்பாக நடைபெற உள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று அடிக்கல் நாட்டுகிறார். கொரோனா வைரஸ் காரணத்தினால் 200 பேருக்கு மட்டும் பூமி பூஜையில் […]

Continue reading …

இந்தியாவில் இதுவரை 1.77 கோடிக்கும் மேல் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது – ஐ.சி.எம்.ஆர் தகவல்!

Comments Off on இந்தியாவில் இதுவரை 1.77 கோடிக்கும் மேல் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது – ஐ.சி.எம்.ஆர் தகவல்!

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் நேற்று ஒரே நாளில் 4 லட்சத்து 8 ஆயிரத்து 855 கொரோனா தொற்று பரிசோதனைகள் நடத்தப்பட்டு உள்ளது என ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. இதை பற்றி இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) இன்று வெளியிட்ட ட்விட்டரில் பதிவில்: இந்தியா முழுவதும் நேற்று 4 லட்சத்து 8 ஆயிரத்து 855 பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. தற்போது இதுவரை மொத்தமாக ஒரு கோடியே 77 லட்சத்து 43 ஆயிரத்து 740 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இந்த பரிசோதனையை […]

Continue reading …

அதிக திறன் கொண்ட கொரோனா பரிசோதனை மையங்களை காணொலியில் தொடங்கி வைத்தார் – பிரதமர் மோடி!

Comments Off on அதிக திறன் கொண்ட கொரோனா பரிசோதனை மையங்களை காணொலியில் தொடங்கி வைத்தார் – பிரதமர் மோடி!

நொய்டா, மும்பை, கொல்கத்தா ஆகிய மூன்று நகரங்களில் அதிக திறனை கொண்ட பரிசோதனை மையங்களை இன்று காணொலி கட்சி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். சரியான நேரத்தில் மேற்கொண்ட தீவிர நடவடிக்கையால் உலக நாடுகளை விட இந்தியாவில் கொரோனா விகிதம் குறைவு என மோடி தெரிவித்தார். கொரோனாவை எதிர்த்து நம் மக்கள் சிறப்பாக போராடி வருகின்றனர். இந்தியாவில் 11 ஆயிரம் பரிசோதனை மையங்கள் இருக்கிறது. பின்பு 1,300 ஆய்வகங்களில் தினதோறும் லட்சத்துக்கும் அதிகமாக பரிசோதனை நடத்தப்படுகிறது. […]

Continue reading …

சிஆர்பிஎஃப்-ன் 82வது அமைப்பு தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து!

Comments Off on சிஆர்பிஎஃப்-ன் 82வது அமைப்பு தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து!

இன்று மத்திய ரிசர்வ் காவல் படையின்(சிஆர்பிஎஃப்) 82வது அமைப்பு தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்தை தெரிவித்துள்ளார். ட்விட்டரில் பிரதமர் மோடி பதிவிட்டது: அனைவருக்கும் வாழ்த்துக்கள்; இந்த சிறப்பான படையின் 82 வது அமைப்பு நாளில் பணியாளர்கள் இருக்கின்றனர். சி.ஆர்.பி.எஃப் நம் தேசத்தை பாதுகாப்பாக வைப்பதில் முன்னணியில் உள்ளது. இந்த சக்தியின் தைரியமும், நிபுணத்துவமும் பரவலாக போற்றப்படுகின்றது. சிஆர்பிஎஃப் வீரர்கள் வரவிருக்கும் ஆண்டுகளில் இன்னும் பெரிய உயரங்களை அடையட்டும் என பிரதமர்மோடி பதிவிட்டுள்ளார்.

Continue reading …

டெல்லி ராணுவ மருத்துவமனைக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ரூபாய்.20 லட்சம் நன்கொடை!

Comments Off on டெல்லி ராணுவ மருத்துவமனைக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ரூபாய்.20 லட்சம் நன்கொடை!

டெல்லியில் இருக்கும் ராணுவ மருத்துவமனைக்கு இந்தியா ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ரூபாய். 20 லட்சம் நன்கொடை கொடுத்துள்ளார். இன்று கார்கில் போரின் 21வது வெற்றி தினத்தை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த போரில் வீர மரணமடைந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், டெல்லியில் இருக்கும் ராணுவ மருத்துவமனைக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ரூபாய் 20 லட்சம் கோடியை நன்கொடையாக கொடுத்துள்ளார். இந்த நிதியைக் கொண்டு டெல்லி மருத்துவமனையில் வேலை பார்க்கும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பல சாதனங்களை வாங்குவதற்கு உதவியாக […]

Continue reading …

கார்கில் போரின் 21வது வருடம் வெற்றி தினம்: நினைவிடத்தில் அமைச்சர் ராஜ்நாத்சிங் மரியாதை!

Comments Off on கார்கில் போரின் 21வது வருடம் வெற்றி தினம்: நினைவிடத்தில் அமைச்சர் ராஜ்நாத்சிங் மரியாதை!

இன்று கார்கில் போர் தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள நினைவிடத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் முப்படை தளபதிகள் மரியாதை செலுத்தியுள்ளனர். கார்கில் போரில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களின் தியாகத்தை நினைவு படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 26ம் தேதி கார்கில் போர் வெற்றி தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இன்றுடன் கார்கில் போரில் வெற்றி பெற்று 21வது வருடம் ஆகிறது. இதற்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவருடன் இணை அமைச்சர் […]

Continue reading …

இந்தியாவின் மேற்கு பிரிவு விமானப்படையின் புதிய தளபதியாக விவேக் ராம் சவுத்ரி நியமனம்!

Comments Off on இந்தியாவின் மேற்கு பிரிவு விமானப்படையின் புதிய தளபதியாக விவேக் ராம் சவுத்ரி நியமனம்!

லடாக் எல்லை பகுதியில் பதற்றம் நிலவி கொண்டிருக்கும் சமயத்தில் இந்தியாவின் மேற்கு பிரிவின் விமானப்படை புதிய தளபதியாக ஏர் மார்ஷல் விவேக் ராம் சவுத்ரி நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது இவர் இந்தியாவின் கிழக்கு படைப்பிரிவின் மூத்த தளபதியாக வேலைபார்த்து வருகிறார். இந்நிலையில் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் மேற்கு படைபிரிவின் புதிய தளபதியாக பதவி ஏற்கிறார். மிக் -21, மிக் – 23எம்.எப், மிக்-29, எஸ்யூ-30எம்.கே.ஐ உள்பட அதிநவீன போர்விமானங்களை இயக்கி இருக்கிறார். பின்னர் ரபேல் போர் விமானங்களை […]

Continue reading …

கர்நாடகா மற்றும் கேரளா மாநிலத்தில் ஐஎஸ் தீவிரவாதிகளின் செயல்பாடு – ஐநா தகவல்!

Comments Off on கர்நாடகா மற்றும் கேரளா மாநிலத்தில் ஐஎஸ் தீவிரவாதிகளின் செயல்பாடு – ஐநா தகவல்!

கர்நாடகா மற்றும் கேரளா மாநிலத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் நடமாட்டம் உள்ளதாக ஐநா அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஐஎஸ்ஐஎஸ்,அல்கொய்தா, பயங்கரவாதிகள் பற்றியும் மற்றும் தடை பற்றியும் 26-வது அறிக்கை வெளியாகியது, அதில் கூறியது: தாலிபான் கீழ் இந்திய துணை கண்டத்தில் அல்கொய்தா நடமாடுவதாகவும் இதில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர் போன்ற ஆசிய துணைக் கண்ட நாட்டில் 150 முதல் 200 அல் கொய்தா தீவிரவாதிகள் இந்த நாடுகளில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு வருவதாக தெரிவித்துள்ளது. இந்திய துணை கண்டத்தின் […]

Continue reading …

இந்தியாவில் கொரோனவிலிருந்து குணமடைதோர் விகிதம் 63.45 சதவீதமாக அதிகரிப்பு!

Comments Off on இந்தியாவில் கொரோனவிலிருந்து குணமடைதோர் விகிதம் 63.45 சதவீதமாக அதிகரிப்பு!

இந்தியாவில் கொரோனவிலிருந்து குணமடைதோர் விகிதம் 63.45 சதவீதமாக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரசால் உயிரிழப்பவர்களின் விகிதம் 2.38 சதவீதமாக உள்ளது. பின்னர் நேற்று ஒரே நாளில் 3,52,801 கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக 1,54,28,170 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரிசோதனை செய்ய 897 அரசு ஆய்வகங்களும் மற்றும் 393 தனியார் ஆய்வகங்களும் அமைக்கப்பட்டுள்ளது.

Continue reading …

அலுவலக ஊழியர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் தனிமைப்படுத்திக் கொண்ட ஹிமாச்சல் பிரதேசம் முதலமைச்சர்!

Comments Off on அலுவலக ஊழியர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் தனிமைப்படுத்திக் கொண்ட ஹிமாச்சல் பிரதேசம் முதலமைச்சர்!

ஹிமாச்சல் பிரதேசம் முதல் அமைச்சர் அலுவலக ஊழியர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் முதலமைச்சர் ஜெய் ராம் தாக்குர் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். இதனைப்பற்றி முதலமைச்சர் அலுவலகம் அதிகாரி ஒருவர் கூறியது: முதலமைச்சர் அலுவலகத்தில் துணைச் செயலராக வேலை பார்க்கும் அதிகாரி ஒருவர் சமீபத்தில் அவருக்கு இருப்பது உறுதியாகி உள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை காரணமாக முதல் அமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் தன்னை தனிமைப் படுத்திக் கொண்டார். முதலமைச்சர் மற்றும் அலுவலக அதிகாரிகளுக்கு விரைவில் கொரோனா வைரஸ் பரிசோதனை நடைபெற இருக்கிறது. […]

Continue reading …