Home » Archives by category » சென்னை (Page 33)

ஓட்டுனர் இல்லா மெட்ரோ ரயில்!

Comments Off on ஓட்டுனர் இல்லா மெட்ரோ ரயில்!

ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரயிலை சென்னையில் உள்ள மூன்று வழித்தடங்களில் இயக்க திட்டமிட்டிருப்பதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னையில் மெட்ரோ ரயில்கள் 3 வழித்தடங்களில் அமைக்கப்பட்டு இருக்கும் நிலையில் இந்த மூன்று வழித்தடங்களில் ஓட்டுனர் இன்றி தானியங்கி முறையில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருவதாக என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னையில் தற்போது இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் கலங்கரை விளக்கத்திலிருந்து பூந்தமல்லி வரை ஒரு வழித்தடமும், மாதவரத்திலிருந்து சோழிங்கநல்லூர் வரை […]

Continue reading …

தி.நகரில் ஆகாய மேடை!

Comments Off on தி.நகரில் ஆகாய மேடை!
தி.நகரில் ஆகாய மேடை!

பயணிகளின் வசதிக்காக மாம்பலம் ரெயில் நிலையம் மற்றும் தி.நகர் பஸ் நிலையம் இடையே ஆகாய நடை மேம்பாலம் அமைக்கப்பட்டதை பயணிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சென்னையின் முக்கிய பகுதியான ஷாப்பிங் பகுதியான தி.நகரில் இருந்து மாம்பலம் ரயில் நிலையம் செல்ல வேண்டுமென்றால் நெருக்கடியான ரங்கநாதன் தெரு வழியாகத்தான் செல்ல வேண்டும். இதனால் பயணிகள் மிகவும் திக்கு முக்காடி வருகின்றனர். இந்நிலையில் மாம்பலம் ரயில் நிலையத்திலிருந்து தி.நகர் பஸ் நிலையம் வரை பாதசாரிகளை பரவசப்படுத்தும் வகையில் நடைமேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. […]

Continue reading …

1000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம்கள்!

Comments Off on 1000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம்கள்!

அமைச்சர் மா.சுப்பிரமணியன் நாளை முதல் தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம்கள்- நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார். தற்போது தமிழகத்தில் சென்னை உட்பட பல பகுதிகளில் காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. இதைத் தடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்கிறது. நாளை தமிழகம் முழுவதும் காய்ச்சல் தடுப்பு முகாம்கள் நடத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “தமிழகம் முழுவதும் நாளை  1000  இடங்களில் சிறப்பு காய்ச்சல் […]

Continue reading …

செல்பி மோகத்தால் இருவர் பலி!

Comments Off on செல்பி மோகத்தால் இருவர் பலி!

செல்போனில் செல்பி எடுக்கும் மோகத்தில் செம்பரம்பாக்கம் ஏரியில் தவறி விழுந்த 2 பேர் பலியான சம்பம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னையையடுத்த குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (20 வயது), மற்றும் அவரது நண்பர் ரிச்சர்ட் என்பவரும் சேர்ந்து நேற்று மாலை செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றி பார்க்க சென்றுள்ளனர். அந்த ஏரியை சுற்றி பார்த்து விட்டு இருவரும் மதகில் ஏறி நின்றபடி செல்பி எடுத்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக இருவரும் ஏரிக்குள் விழுந்து விட்டனர். இருவருக்கும் நீச்சல் தெரியாததால் […]

Continue reading …

தெரு நாய்களின் தொல்லைக்கு நடவடிக்கை எடுக்கப்படுமா?

Comments Off on தெரு நாய்களின் தொல்லைக்கு நடவடிக்கை எடுக்கப்படுமா?

தெருநாய்களின் தொல்லையை தடுக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் சார்பில் சென்னை மாநகராட்சிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் சமீபத்தில் தெரு நாய் தொல்லை காரணமாக குழந்தைகள் முதியோர்கள் கடித்துக் குதறப்பட்டார்கள். தெரு நாய்களின் தொல்லையால் நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதையடுத்து கேரளாவில் தெருநாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது கேரளாவை அடுத்து சென்னையிலும் தெரு நாய்கள் தொல்லை அதிகமாகி வருவதாகவும், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் அச்சப்படுகிறார்கள் என்றும் கூறப்படுகிறது. நிலைமை விபரீதமாவதற்கு […]

Continue reading …

கார் மோதி இரு பெண்கள் பலி!

Comments Off on கார் மோதி இரு பெண்கள் பலி!

130 கி.மீ. வேகத்தில் வந்த கார் மோதியில் இரண்டு பெண்கள் விபத்தில் பலியாகியுள்ளனர். கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்.லட்சுமி மற்றும் ஆந்திர மாநிலம் திருப்பதியைச் சேர்ந்த எஸ்.லாவண்யா இவ்விரு பெண்களும் பிசிலி ஸ்டேட் ஸ்ட்ரீட் சர்வீசஸ் நிறுவனத்தில் ஆய்வாளர்களாகப் பணிபுரிந்து வந்துள்ளனர். இரவு வேலை முடிந்து பழைய மகாபலிபுரம் சாலையை (ஓஎம்ஆர்) கடக்கும் போது, ​​அதிவேகத்தில் சென்ற கார் பின்னால் இருந்து மோதியது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 20 வயதான மோதிஷ் குமார் […]

Continue reading …

அண்ணா சாலையில் பைக் சாகசம்!

Comments Off on அண்ணா சாலையில் பைக் சாகசம்!

சென்னை அண்ணா சாலையில் இளைஞர்கள் பைக் சாகசம் செய்யும் வீடியோ தற்போது வைரலாகி உள்ளது. இளைஞர்கள் சென்னை, கோயம்புத்தூர் உட்பட்ட பல முக்கிய நகரங்களில் இளைஞர்கள் ஆபத்தான முறையில் பைக் சாகசங்கள் செய்வது அதிகரித்துள்ளது. பொதுமக்கள் கூடும் இடங்கள், சாலையின் முக்கிய இடங்கள் நகரங்களிலும், போக்குவரத்து விதிகளை மீறியும், ஸ்டண்ட் போன்றவற்றில் ஈடுபடும் இளைஞர்களால் அதிகளவு மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து காவல்துறை எச்சரிக்கை விடுக்கட்டிருக்கும் நிலையில், இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து வருகிறது. காவல்துறையின் எச்சரிக்கையை […]

Continue reading …

பிளாஸ்டிக் கவரில் தொழிலதிபரின் பிணம்!

Comments Off on பிளாஸ்டிக் கவரில் தொழிலதிபரின் பிணம்!

மர்ம நபர்கள் சென்னையில் தொழிலதிபரை கொன்று பிளாஸ்டிக் கவரில் வைத்து வீசிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தொழிலதிபர் பாஸ்கரன் சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்தவர். இவர் ரியல் எஸ்டேட், கட்டுமானம், பைனான்ஸ், சினிமா தயாரிப்பு உட்பட பல தொழில்களில் ஈடுபட்டு வந்தார். நேற்று காலை வீட்டிலிருந்து காரில் புறப்பட்ட சென்ற நிலையில், அவர் வீடு திரும்பவில்லை எனத் தெரிகிறது. அவர் செல்போன் எண்ணும் சரியாக இயங்கவில்லை. ஆகவே, இதுகுறித்து அவரது குடும்பத்தினர் போலீசில் […]

Continue reading …

சென்னை மாநகராட்சி எச்சரிக்கை!

Comments Off on சென்னை மாநகராட்சி எச்சரிக்கை!
சென்னை மாநகராட்சி எச்சரிக்கை!

சென்னை மாநகராட்சி சொத்துவரி மற்றும் தொழில் வரியை இம்மாதத்திற்குள் செலுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது. சென்னை மாநகராட்சியில் தொழில் செய்யும் தொழிலதிபர்கள் சொத்துவரி மற்றும் தொழில் வரியை இந்த மாத இறுதிக்குள் கட்ட வேண்டும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. சொத்து வரி செலுத்தாமலிருந்து வரும் சொத்தின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தொழில் வரியை செலுத்தாதவர்களுக்கு இம்மாதம் வரை அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இம்மாதத்திற்குள் சொத்து […]

Continue reading …

நேற்று சென்னையில் திடீர் மழை!

Comments Off on நேற்று சென்னையில் திடீர் மழை!

சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்றிரவு மழை பெய்ததை தொடர்ந்து இன்றும் மழை பொழியும் என தகவல் அளித்துள்ளது. நேற்றிரவு திடீரென சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் கனமழை பெய்ததையடுத்து இன்றும் சென்னையில் இரவில் மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக கடும் வெப்பம் நிலவி வரும் நிலையில் நேற்று இரவு சென்னையில் திடீரென கனமழை பெய்தது. சென்னை மட்டுமின்றி அதன் […]

Continue reading …