
கொரோனா வைரசால் இதுவரை தமிழ்நாட்டில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 19,333 பேர் குணமடைந்துள்ளனர் மற்றும் 326 பேர் பலியாகியுள்ளனர். இதில் சென்னையில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 258 பேர் பலியாகியுள்ளனர். இதனிடையே கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் 191 கர்ப்பிணி பெண்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தகவல் அறிந்த பலர் அதிர்ச்சியில் உள்ளனர். அந்த 191 பெண்களில் 68 பேர் […]
Continue reading …
சென்னை, ஜூன் 11 இராஜிவ்காந்தி படுகொலை வழக்கில் தவறுதலாக தண்டிக்கப்பட்ட பேரறிவாளன், அந்த வழக்கில் விசாரணை என்ற பெயரில் கைது செய்யப்பட்டு இன்றுடன் 29 ஆண்டுகள் நிறைவடைந்து 30-ஆவது ஆண்டு தொடங்குகிறது. பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய உச்சநீதிமன்றமே ஆணையிட்டும், அந்த விஷயத்தில் தமிழக ஆளுனர் முடிவெடுக்க மறுப்பது கண்டிக்கத்தக்கதாகும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அறிக்கை விடுத்துள்ளார். இராஜிவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக பேரறிவாளனிடம் சிறிய விசாரணை நடத்த வேண்டி […]
Continue reading …
சென்னை, ஜூன் 10 சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகக் கூட்ட அரங்கில் இன்று (10.06.2020) இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ். இராமச்சந்திரன், இந்து சமய அறநிலையத் துறையின் சார்நிலை அலுவலர்களுடன் சட்டசபையில் அறிவிக்கப்பட்ட திருக்கோயில்களுக்கான மேம்பாட்டுப் பணிகள் குறித்து இணைய வழி காணொலி காட்சி வாயிலாக ஆய்வு மேற்கொண்டார். இக்கூட்டத்தில் அமைச்சர் பேசும்போது, சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் முதல்வரால் அறிவிக்கப்பட்ட திருக்கோயில்களுக்கான வளர்ச்சித்திட்டப்பணிகளை குறித்த காலத்தில் நிறைவேற்றி […]
Continue reading …
ஜூன் 7 திருப்பதி தேவஸ்தானத்தை அவதூறாக பேசியது தொடர்பாக நடிகர் சிவக்குமார் மீது திருமலை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருமலை இரண்டாவது காவல் நிலையத்தில் தேவஸ்தானத்தை விமர்சித்து சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாவதால் பக்தர்கள் மன வேதனை அடைகின்றனர் எனவே தேவஸ்தானம் குறித்து அவதூறாக பேசுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனு தரப்பட்டது. இதற்கிடையில், திருமலையில் மறைமுகமாக பல காரியங்கள் நடந்து வருகின்றன. அதனால் பக்தர்கள் திருமலைக்கு செல்ல வேண்டாம் என்று […]
Continue reading …
’ஞானியுடன் ஒரு உரையாடல்’ என்னும் தலைப்பில் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அவர்களுடன் பல்வேறு அரசியல் தலைவர்கள், விஞ்ஞானிகள், நிறுவனத் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் என வாழ்வின் பல்வேறு நிலைகளில் முன்னணியில் உள்ளோர் தொடர்ந்து உரையாடி வருகின்றனர். அதன் ஒரு தொடர்ச்சியாக, இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீரரான திரு.ரவிச்சந்திரன் அஸ்வின், சத்குருவுடன் ’ஆன்லைன்’ வழியாக கிரிக்கெட், கரோனோ, காவேரி என்னும் தலைப்பில் கலந்துரையாடினார். அப்போது அவர் கிரிக்கெட் மற்றும் விளையாட்டு சார்ந்த கேள்விகளுடன் விவசாயிகளின் […]
Continue reading …
சென்னை, ஜூன் 6 மாண்புமிகு அம்மாவின் அரசு, கொரோனா வைரஸ் நோய் தொற்றினை தடுக்க பல்வேறு தீவிர நோய்தடுப்பு பணிகளையும், நிவாரணப் பணிகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு அரசோடு இணைந்து பல்வேறு தன்னார்வ அமைப்புகளும், தன்னார்வலர்களும் கொரோனா நிவாரணப் பணியில் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், மதுரை மாவட்டம், மேலமடை, வண்டியூர் மெயின் ரோடு, முடிதிருத்தகம் நடத்தி வரும் மோகன் என்பவர், தனது மகள் செல்வி நேத்ராவின் படிப்புக்காக சேமித்து வைத்திருந்த பணத்தை தனது மகளின் […]
Continue reading …
சென்னை, ஜூன் 4 மாண்புமிகு அம்மாவின் அரசு, தமிழ்நாடு முதலமைச்சரின் சீரிய தலைமையில், கொரோனா தொற்று தடுப்பு மற்றும் சிகிச்சை குறித்து பன்முக நடவடிக்கைகளை சிறப்பான முறையில் மேற்கொண்டு வருகிறது. கொரோனா நோய் தொற்றுக்கு இதுவரை பொதுவாக அரசு மருத்துவமனைகளில் மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆணையிட்டுள்ளார். முதல்வர் ஆணைக்கிணங்க, கொரோனா சிகிச்சைக்கு தமிழக முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் […]
Continue reading …
சென்னை, ஜூன் 4 உலக சுற்றுச்சூழல் நாள் நாளை கொண்டாடப்படும் நிலையில், இயற்கை மீது கடந்த காலங்களில் நாம் நடத்தியத் தாக்குதல்கள் இப்போது நம்மை எவ்வாறு திருப்பித் தாக்கத் தொடங்கியுள்ளன என்பதை அண்மைக்காலமாக நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் தெளிவாக உணர்த்துகின்றன. இனியாவது இயற்கையை நாம் மதிக்காவிட்டால் மனிதகுலத்தை காப்பாற்ற முடியாது என்பதை உணர வேண்டும். உலகின் முதல் சுற்றுச்சூழல் மாநாடு 1972 ஆம் ஆண்டு சுவீடனின் ஸ்டாக்கோம் நகரில் கூட்டப்பட்டதை குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் […]
Continue reading …
கொரோனா பரவல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த ஈஷாவின் மகாத்மா பசுமை இந்தியா திட்ட நர்சரிகள் அனைத்தும் நாளை (ஜூன் 5) முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளன. தமிழகத்தில் கோவை, திருச்சி, மதுரை, தஞ்சை, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 32 இடங்களில் ஈஷா நர்சரிகள் இயங்கி வருகின்றன. இந்த நர்சரிகள் மூலம் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மரக் கன்றுகள் இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த நர்சரிகள் மார்ச் […]
Continue reading …
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள் ஜூன் 30ம் தேதி வரை வேலைக்கு வர வேண்டாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக அரசு அலுவலகங்கள் மூடப்பட்டு இருந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு அலுவலர்கள் 50% பணிக்கு செல்ல திரும்பி உள்ளனர். இந்த நிலையில் மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள் பணிக்கு செல்வது சிரமம் இருப்பதை கருத்தில் கொண்டு இம்மாதம் 30ஆம் […]
Continue reading …