Home » Archives by category » சென்னை (Page 62)

மூன்றாவது திருமணத்தை கிறிஸ்தவ முறைப்படி செய்து கொண்ட வனிதா விஜயகுமார்!

Comments Off on மூன்றாவது திருமணத்தை கிறிஸ்தவ முறைப்படி செய்து கொண்ட வனிதா விஜயகுமார்!

1995ஆம் ஆண்டு சந்திரலேகா என்கிற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். இதற்கு முன்பு இரண்டு முறை திருமணம் செய்து கொண்ட வனிதா அவர்களுடன் எற்ப்பட்ட கருத்து வேறுபாடு காரணத்தினால் விவாகரத்து பெற்று கொண்டார். இவருடைய தந்தையான விஜயகுமாருடன் சண்டை ஏற்பட்டதால் இரண்டு மகளுடன் தனியாக வசித்து வருகிறார். தற்போது பீட்டர் பால் என்கிற விஷுவல் எஃபெக்ட்ஸ் இயக்குனரை நேற்று கிறித்துவ முறைப்படி திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணம் சென்னை போரூரில் உள்ள வனிதா […]

Continue reading …

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தனியார் டிவியின் ஒளிப்பதிவாளர் உயிரிழப்பு!

Comments Off on கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தனியார் டிவியின் ஒளிப்பதிவாளர் உயிரிழப்பு!

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட தனியார் டிவியான ராஜ் டிவியின் மூத்த ஒளிப்பதிவாளர் வேல்முருகன் சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார். இவருக்கு கடந்த 15 நாட்களாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், இந்த இரு நாட்களாக அவருடைய உடல் நிலையில் மோசமானதால் சிகிச்சை பலனின்றி இன்று காலைகாலமானார். இவருடைய மறைவிற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு க ஸ்டாலின், பாமக தலைவர் ராமதாஸ் மற்றும் பத்திரிகையாளர் சங்கங்கள் தங்களுடைய இரங்கலை […]

Continue reading …

சென்னையில் முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் தொற்று பரவுதல் குறைவு – மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்!

Comments Off on சென்னையில் முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் தொற்று பரவுதல் குறைவு – மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்!

சென்னையில் முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் கொரோனா வைரஸ் பரவுதல் குறைந்து வருவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார். அண்ணா பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்ட சிறப்பு மையத்தை ஆய்வு நடத்திய பிறகு நிருபர்களிடம் பேசிய பிரகாஷ் கூறியது: சென்னையில் மொத்தம் 54 கொரோனா வைரஸ் சிறப்பு மையத்தில் 17,500 படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அதில் 4,350 படுக்கைகளில் நோயாளிகள் உள்ளதாகவும் மற்றும் மீதி படுக்கைகள் காலியாக இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், சென்னையில் முழு […]

Continue reading …

ஊரடங்கு சமயத்தில் காதலியை திருமணம் செய்து கொண்ட நடிகர் கும்கி அஸ்வின்!

Comments Off on ஊரடங்கு சமயத்தில் காதலியை திருமணம் செய்து கொண்ட நடிகர் கும்கி அஸ்வின்!

லட்சுமி மூவி மேக்கர்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான சுவாமிநாதனின் மகன் அஸ்வின் ராஜா. இவர் பாஸ் என்கிற பாஸ்கரன், கும்கி, தில்லுமுல்லு, போன்ற படங்களில் காமெடி நடிகராக நடித்து இருகிறார். இவர் கும்கியில் சிறப்பாக நடித்தாலும் மற்றும் இவருடைய கதாபாத்திரம் பெரிய அளவில் வெற்றி பெற்றதால் இவரை கும்கி அஸ்வின் என்று அழைத்து வந்தனர். அஸ்வினும் கே.கே.நகரை சேர்ந்த வித்யா ஸ்ரீயும் காதலித்து வந்துள்ளனர். வித்யா அமெரிக்காவில் எம்.எஸ் படிப்பை முடித்தவர்.இரு குடும்பத்தின் சம்மதத்தோடு […]

Continue reading …

சென்னையில் வீடு வீடாக கொரோனா பரிசோதனை நடத்தியதில் 8,000 பேர் தொற்றால் பாதிப்பு!

Comments Off on சென்னையில் வீடு வீடாக கொரோனா பரிசோதனை நடத்தியதில் 8,000 பேர் தொற்றால் பாதிப்பு!

சென்னையில் வீடு வீடாக கொரோனா பரிசோதனை நடத்தியதில் 8,000 பேரும் மற்றும் மருத்துவ முகாம்கள் கொண்டு நடத்தியதில் 5,400 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். அம்பத்தூர் மண்டலத்தில் உள்ள அத்திப்பட்டில் இருக்கும் கொரோனா சிகிச்சை மையத்தை பார்வையிட்டு நிருபர்களிடம் பேசிய மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியது: முதலில் இரண்டு அறிகுறிகள் இருப்பவர்களை கண்காணித்து வந்தனர் தற்போது ஒரு அறிகுறிகள் இருந்தாலே உடல் நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாக கூறியுள்ளார்.

Continue reading …

புழல் சிறையில் மேலும் 11 விசாரணை கைதிகள் கொரோனாவால் பாதிப்பு!

Comments Off on புழல் சிறையில் மேலும் 11 விசாரணை கைதிகள் கொரோனாவால் பாதிப்பு!

சென்னையில் உள்ள புழல் மத்திய சிறையில் மேலும் 11 விசாரணை கைதிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு முன்பே இரண்டு காவலர்கள், பெண் தூய்மைப் பணியாளர், உள்பட 36 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது சிறையில் கொலை வழக்கில் இருந்த ஒருவர் கொரோன வைரசால் பாதிக்கப்பட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் காலமானார். பின்பு இவருடன் தொடர்பு இருந்தவர்களுக்கு வைரஸ் பரவி இருக்க வாய்ப்பு என்பதால் அனைவருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் 11 கைதிகளுக்கு கொரோனா வைரஸ் இருப்பது […]

Continue reading …

கொரோனாவால் பாதிக்கப்பட்ட விஜயா மருத்துவமனையின் இயக்குனர் சிசிக்சை பலனின்றி உயிரிழப்பு!

Comments Off on கொரோனாவால் பாதிக்கப்பட்ட விஜயா மருத்துவமனையின் இயக்குனர் சிசிக்சை பலனின்றி உயிரிழப்பு!

கொரோனா வைரஸ் தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. இதனால் முக்கிய பிரபலங்களும் உயிரிழந்து வருகின்றனர். அதில் திமுக எம்.எல்.ஏ ஜெ அன்பழகன், பிரபல பாடகர் ஏ.எல் ராகவன் ஆகியோர் அண்மையில் உயிரிழந்துள்ளனர். தற்போது முக்கிய பிரபலமான சரத் ரெட்டி நேற்று கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். சென்னை வடபழனியில் இருக்கும் விஜயா மருத்துவமனையின் இயக்குனர் ஆவார். இவர் நாகி ரெட்டியின் மகன் விஸ்வநாத ரெட்டியின் இரண்டாவது மகன். இவருக்கு 52 வயது தான் ஆகிறது. இவர் சில நாட்களுக்கு […]

Continue reading …

யோகா செய்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும் – சத்குரு

Comments Off on யோகா செய்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும் – சத்குரு
யோகா செய்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும் – சத்குரு

 ஜூன் 20 கொரோனா பாதிப்பு மிகுந்த இந்த நெருக்கடியான சமயத்தில் யோகப் பயிற்சிகள் செய்வதன் மூலம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு சத்குருவின் வாழ்த்து செய்தியில் அவர் கூறியுள்ளதாவது: அனைவருக்கும் சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள். கடந்த சில மாதங்களாக உலகம் கொரோனா வைரஸ் என்ற மாபெரும் சவாலை எதிர்கொண்டு […]

Continue reading …

மக்கள் குரல் நாளிதழ் உதவி ஆசிரியர் சிவகுமார் இயற்கை எய்தினார் : சென்னை பத்திரிகையாளர் மன்றம் இரங்கல்!

Comments Off on மக்கள் குரல் நாளிதழ் உதவி ஆசிரியர் சிவகுமார் இயற்கை எய்தினார் : சென்னை பத்திரிகையாளர் மன்றம் இரங்கல்!
மக்கள் குரல் நாளிதழ் உதவி ஆசிரியர்  சிவகுமார் இயற்கை எய்தினார் : சென்னை பத்திரிகையாளர் மன்றம் இரங்கல்!

சென்னை, ஜூன் 19 தினபூமி நாளிதழில் நிருபராக பணியை தொடங்கி  பத்திரிகைத்துறையில் 18 ஆண்டுகாலமாக தொடர்ந்து பணியாற்றியவர் சிவகுமார் (வயது 49). மக்கள் குரல் நாளிதழ் உதவி ஆசிரியராக பணியாற்றிய சிவகுமார் மொழிப்பெயர்ப்புத் திறமை மிக்கவர். பழகுவதற்கு இனிய சிவகுமார் இன்று (19/06/2020) காலை தஞ்சாவூரில் மாரடைப்பால் இயற்கை எய்தினார். அவரது உடல் தற்போது தஞ்சாவூர் ரெட்டிபாளையத்தில் அன்னை சிவகாமி நகரில் உள்ள இல்லத்தில் இறுதிமரியாதைக்காக வைக்கப்பட்டுள்ளதுஇன்று மாலை இறுதி சடங்குகள் நடைபெறுகின்றனமறைந்த சிவகுமாருக்கு மீனாம்பிகா என்ற மனைவியும் […]

Continue reading …

கொரோனா பாதிப்புக்கு வழங்கப்படும் மாத்திரைகளுக்கு அரசு மருத்துவமனைகளில் தட்டுப்பாடா – டிடிவி தினகரன்!

Comments Off on கொரோனா பாதிப்புக்கு வழங்கப்படும் மாத்திரைகளுக்கு அரசு மருத்துவமனைகளில் தட்டுப்பாடா – டிடிவி தினகரன்!
கொரோனா பாதிப்புக்கு வழங்கப்படும் மாத்திரைகளுக்கு அரசு மருத்துவமனைகளில் தட்டுப்பாடா – டிடிவி தினகரன்!

சென்னை, ஜூன் 19 சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் முழு முடக்கம் தொடங்கியுள்ள நிலையில், கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளானவர்களுக்கு வழங்கப்படும் ஜிங்க் (ZINC), வைட்டமின் சி (VITAMIN C) உள்ளிட்ட மாத்திரைகளுக்கு அரசு மருத்துவமனைகளில் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக வெளியாகும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஆரம்பத்தில் அரசு சார்பில் 10 நாட்கள் சாப்பிடுவதற்கான மருந்து பெட்டகம் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது பாதிப்பு உச்சத்திற்குச் சென்று கொண்டிருக்கும் நேரத்தில், அத்தகைய மருந்துகள் அளிக்கப்படுவது நிறுத்தப்பட்டுவிட்டதாக செய்திகள் வருகின்றன. […]

Continue reading …