வடகிழக்கு மாநிலத்தை விட்டு வைக்காத பூகம்பம்; மிசோரமில் 3.6 ரிக்டர் பதிவு!

Filed under: இந்தியா |

வடகிழக்கு மாநிலமான மிசோரமில் இன்று காலை பூகம்பம் ஏற்பட்டு உள்ளது. இதன் ரிக்டர் அளவு 3.6 ஆக பதிவாகியுள்ளது.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் தொடர்ந்து பூகம்பம் ஏற்பட்டு வருகிறது. நேற்று அருணாச்சல பிரதேசத்தில் இருக்கும் தவாங் நகரில் நேற்று காலை 8.21 மணி அளவில் பூகம்பம் ஏற்பட்டுள்ளது. இந்த பூகம்பம் 3.0 ரிக்டர் பதிவாகி உள்ளது.

இதை போல மணிப்பூர் மாநிலத்தின் காம்ஜோங் பகுதியில் நேற்று அதிகாலை 3.12 மணி அளவில் பூகம்பம் ஏற்பட்டுள்ளது. இந்த பூகம்பம் 3.4 ரிக்டர் பதிவாகி உள்ளது.

இதையடுத்து இமாசலப் பிரதேச மாநிலத்தின் லஹால் மற்றும் ஸ்பிடி ஆகிய பகுதியில் நேற்று அதிகாலை 2.43 மணி அளவில் பூகம்பம் உணரப்பட்டு உள்ளது. இந்த பூகம்பம் 3.3 ரிக்டர் ஆக பதிவாகியுள்ளது.

இந்நிலையில் இன்று வடகிழக்கு மாநிலமான மிசோரமில் காலை 6.09 மணி அளவில் பூகம்பம் ஏற்பட்டு உள்ளது. இதன் ரிக்டர் அளவு 3.6 ஆக பதிவாகியுள்ளது.