தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், அவரின் மனைவி பிரேமலதா உடல்நிலை பற்றி மியாட் மருத்துவமனை அறிக்கை!

Filed under: சென்னை |

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் இருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சூழலில், சிகிக்சைக்காக சென்னை நந்தபாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது இவர்கள் இவருடைய உடல்நிலை பற்றி மியாட் மருத்துவமனை அறிக்கை ஒன்றரை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில்; தேமுதிக பொருளாளர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் செப்டம்பர் 28ம் தேதி கோவிட் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு, நோய்தொற்று உறுதியாகி சென்னை மியாட் மருத்துவமனையில் செப்டம்பர் 29ம் தேதி அன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடைய உடல்நிலை சீராக உள்ளது. அவர் மருத்துவர் குழுவின் கண்கானிப்பில் உள்ளார்.

தற்போது, முதல் நிலை பரிசோதனைக்குப் பின் தேமுதிக நிறுவனத்தலைவர் மற்றும் கழக பொதுச்செயலாளருமான திரு. விஜயகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். அவரின் உடல்நிலை சீராக உள்ளது நோய்தொற்றுக்கான அறிகுறி இல்லை. தொடர் மருத்துவச் சேவைகள் அவர் நல்ல முன்னேற்றம் அடைந்திருக்கிறது .

இவ்வாறு மருத்துவமனை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.