அனைவருக்கும் விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள் – தமிழக பா.ஜ.க தலைவர் டாக்டர் எல்.முருகன் பதிவு!

Filed under: தமிழகம் |

அனைவருக்கும் விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள் என தமிழக பா.ஜ.க தலைவர் டாக்டர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

இதை பற்றி அவருடைய பதிவில்; ஆனை முகம், குழந்தை சிரிப்பு. எல்லோருக்கும். எல்லா காலத்திலும் இயன்றதை வைத்து வணங்க முடிந்த கடவுள் விநாயகர். அரச மரத்தடியில் கூட இவரை தரிசிக்கலாம். வானம் பார்த்த கடவுள் இவர். மஞ்சளிலும் பிடிக்கலாம். சாணியில் பிடிக்கலாம் சாலையின் ஓரத்தில் பூக்கும் எருக்கு மாலை சார்த்தலாம், அருகம்புல் போடலாம். இப்படி நியமம், கடுமையான விதிகள் என்று பக்தர்களை கஷ்டப்படுத்தாமல், அவர்களுக்கு என்ன இயலுமோ, எதில் தன்னை பார்க்க விரும்புகிறார்களோ, அதை அப்படியே ஏற்று அருள் பாலிக்கும் கடவுள் விநாயகர்.

ஹிந்து மதத்தின் எந்த பிரிவினராக இருந்தாலும் இவரைத் தான் முதலில் வழிபட வேண்டும் இப்படி அனைத்திற்கும், அனைவருக்கும் எளிமையானவராக இருந்து, தடைகளை தகர்த்தெறியும் கடவுள் விநாயகருக்கு உரித்தான விநாயகர் சதுர்த்தி பண்டிகையை மிக விமர்சையாக கொண்டாட அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

விநாயகர் அருளால், தமிழகம் மறுமலர்ச்சி பெற்று, தீய சக்திகள் ஒழிந்து, மக்கள் அனைவரும் நோய் நொடி இன்றி, கொரோனா பிடியிலிருந்து விடுபட்டு இனி வரும் காலங்களில் மகிழ்ச்சியும் மங்காத வளமும், குறையாத செல்வமும் பெற்று இனிதே வாழ எல்லாம் வல்ல விநாயகரை பிரார்த்தனை செய்வோம்.

இவ்வாறு தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.