
திருச்சி, ஜூன் 21 திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழக இயக்குனர் சாஸ்திரி இந்தோ-கனடிய கழக தலைவராகத் தேர்வு சாஸ்திரி இந்தோ-கனடிய கழகத்தின் (SICI) வருடாந்திர சந்திப்பு இந்தாண்டு ஜுன் மாதம் 20 தேதி நடைபெற்றது. இதில் கல்லூரி இயக்குனர் முனைவர் மினி ஷாஜி தாமஸ் இந்தாண்டு தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சாஸ்திரி இந்தோ-கனடிய கழகமானது இந்தியா மற்றும் கனடா நாடுகளின் கல்வி, அரசு, குடியியல் மற்றும் தொழில் துறைகளில் வளர்ச்சியடையும் வகையில் ஆராய்ச்சி மற்றும் கருத்தரங்குகள் அமைப்பதில் […]
Continue reading …
ஜூன் 20 கொரோனா பாதிப்பு மிகுந்த இந்த நெருக்கடியான சமயத்தில் யோகப் பயிற்சிகள் செய்வதன் மூலம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு சத்குருவின் வாழ்த்து செய்தியில் அவர் கூறியுள்ளதாவது: அனைவருக்கும் சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள். கடந்த சில மாதங்களாக உலகம் கொரோனா வைரஸ் என்ற மாபெரும் சவாலை எதிர்கொண்டு […]
Continue reading …
நாகப்பட்டினம்,ஜூன் 19 நாகப்பட்டினம் அருகே வேளாங்கன்னி மின்வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிபவர் வினோத். நேற்று தெற்கு பொங்கைநல்லூரில் மின்கசிவு பழுதுபார்க்கும் போது மின்சாரம் தாக்கி படுகாயத்துடன் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். இதனை தொடர்ந்து இளநிலை பொறியாளர் மீது வேளாங்கன்னி போலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Continue reading …
சென்னை, ஜூன் 19 தினபூமி நாளிதழில் நிருபராக பணியை தொடங்கி பத்திரிகைத்துறையில் 18 ஆண்டுகாலமாக தொடர்ந்து பணியாற்றியவர் சிவகுமார் (வயது 49). மக்கள் குரல் நாளிதழ் உதவி ஆசிரியராக பணியாற்றிய சிவகுமார் மொழிப்பெயர்ப்புத் திறமை மிக்கவர். பழகுவதற்கு இனிய சிவகுமார் இன்று (19/06/2020) காலை தஞ்சாவூரில் மாரடைப்பால் இயற்கை எய்தினார். அவரது உடல் தற்போது தஞ்சாவூர் ரெட்டிபாளையத்தில் அன்னை சிவகாமி நகரில் உள்ள இல்லத்தில் இறுதிமரியாதைக்காக வைக்கப்பட்டுள்ளதுஇன்று மாலை இறுதி சடங்குகள் நடைபெறுகின்றனமறைந்த சிவகுமாருக்கு மீனாம்பிகா என்ற மனைவியும் […]
Continue reading …
சென்னை, ஜூன் 19 சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் முழு முடக்கம் தொடங்கியுள்ள நிலையில், கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளானவர்களுக்கு வழங்கப்படும் ஜிங்க் (ZINC), வைட்டமின் சி (VITAMIN C) உள்ளிட்ட மாத்திரைகளுக்கு அரசு மருத்துவமனைகளில் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக வெளியாகும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஆரம்பத்தில் அரசு சார்பில் 10 நாட்கள் சாப்பிடுவதற்கான மருந்து பெட்டகம் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது பாதிப்பு உச்சத்திற்குச் சென்று கொண்டிருக்கும் நேரத்தில், அத்தகைய மருந்துகள் அளிக்கப்படுவது நிறுத்தப்பட்டுவிட்டதாக செய்திகள் வருகின்றன. […]
Continue reading …
உலகம் முழுவதும் எல்லா நாடுகளிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்கள் சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு அதிக முக்கியத்தும் அளிக்க வேண்டும் என ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வேண்டுகோள் விடுத்துள்ளார். சர்வதேச அளவில். ஜூன் 17-ம் தேதி பாலைவனமாதலை எதிர்த்து போரிடும் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, ஈஷா அறக்கட்டளையானது, மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம், இயற்கை பாதுகாப்பிற்கான சர்வதேச ஒன்றியத்துடன் (International Union for Conservation of Nature – IUCN) இணைந்து இணையவழி […]
Continue reading …
ஸ்டாலின் தன்னை அரசியலில் இருந்து தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். அரசு மீது ஸ்டாலின் கூறிவரும் குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது, கொரோனா காலம் முடியும் வரையிலாவது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தன்னை அரசியலில் இருந்து தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். பேரிடரிலும் அரசியல் செய்து மக்களை குழப்பும் திமுக, கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களை மனச்சோர்வு அடையும்படி செய்வதாக விமர்சித்துள்ளார். ஒன்றிணைவோம் திட்டத்தால் தான் பலருக்கு கொரோனா […]
Continue reading …
சென்னை, ஜூன் 17 கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக அனைத்துத் தரப்பினரும் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் நிலையில், ஆன்லைன் சூதாட்டத் தளங்கள் இளைஞர்களை அடிமையாக்கி அவர்களின் வாழ்க்கையில் பொருளாதாரத் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. அத்தளங்களை உடனடியாக கட்டுப்படுத்தப்படாவிட்டால், அவை மிகப்பெரிய சமூகச் சிக்கலை ஏற்படுத்திவிடும் ஆபத்து உள்ளது என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அறிக்கை விடுத்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக ஏராளமான இளைஞர்கள் வேலையிழந்து வீடுகளில் உள்ளனர். பணியில் இருக்கும் இளைஞர்களிலும் பெரும்பான்மையினர் வீடுகளில் […]
Continue reading …
தமிழக அரசுத்துறைப்பணிகளைச் சிறப்புச் சலுகையின் மூலம் தமிழே அறியாத வெளி மாநிலத்தவர்களுக்குத் தாரை வார்க்க முனைவதா? வடமாநிலத்தவர்களின் ஆதிக்கத்தை வளர்த்தெடுக்க தமிழக அரசே துணைபோவதா? – சீமான் கண்டனம் தமிழ் மொழியறியாத வெளி மாநிலத்தவர்களைத் தமிழக மின்சார வாரியத்தில் வேலைக்கமர்த்தி அவர்கள் தமிழ் கற்க இரண்டு ஆண்டுகள்வரை அவகாசம் அளிக்கப்படும் என அமைச்சர் தங்கமணி அறிவித்திருப்பது பேரதிர்ச்சி தருகிறது. 90 இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழக இளைஞர்கள் படித்து முடித்துவிட்டு, தமிழகத்தின் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து பணிக்காகக் காத்திருக்கும் […]
Continue reading …
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலகத்தில், மக்கள் தொடர்பு அலுவலராக நல்லதம்பி என்பவர் இருந்து வருகிறார். இவரது பதவி காலத்தில் இப்படி ஒரு அசிங்கமான செயல்களும், மோசடி புகார்களும், செய்தித் துறை ஊழியர்களை போலீஸ் கைது… என்று பரபரப்பான தகவல்களால் இன்று கோவை மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை ஊழியர்கள் வெட்கி தலைகுனிந்து காணப்படுகின்றனர். ஆம், கோவை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் பிரபு என்பவர் கண்காணிப்பாளராகவும் […]
Continue reading …